Tuesday, December 11, 2012

சீனா அய்யா குடும்பத்துடன் கண்டு ரசித்த தெருமுனை பிரச்சாரம்

 “ அய்யா .. உள்ள வந்து பாருங்க.. எவ்வளவு தண்ணி பெருகி வழியுது.. இதுல கொசு ஒழிக்க வந்துட்டீங்க… வந்து இத கிளீன் பண்ண பாருங்க..”
என கம்ப்ளெய்ண்டு பண்ணிய பொது ஜனங்க கிட்ட மாட்டிகிட்டு முழுச்சிகிட்ட எஸ்.எம்.சி குழு உறுப்பினர் சுரேந்திர பாபு வை பார்த்து சிரிப்பு வந்தது.

“அட.. போம்மா.. நீ கூப்பிட்டதைப் பார்த்தா.. எதோ பிள்ளைகளுக்கு டீ போட்டு கொடுக்க கூப்பிடுறீய்யே என நினைச்சேன்…எம்மா ரோட்டிலா…போறவன் வர்றவன்னெல்லாம் வந்து உன் வீட்டு கக்கூஸ்ச கழுவ சொல்லுவைய்யோ… பச்ச புள்ளைக சொல்லுறத கேளும்மா..”
என பாபு கமண்டு அடித்தவுடன் அவர்கள் அருகில் உள்ள அனைவரும் கொள்ளு என சிரித்தனர். 






    மதுரை அண்ணாநகர் 10வது குறுக்கு தெரு அருகில் உள்ள ஜன நெருக்க மிகுந்த சந்தில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்ட போது நடந்த சம்பவம் இது.  சாக்கடைக்குள் வசிக்கும் பொது ஜனங்களிடம் எங்கு புகார் கொடுக்க வேண்டும் என்பதை தெரிவித்து, அடப்பு எடுக்க ஆட்கள் வரவில்லை என்றால், அனைவரும் சேர்ந்து கலெக்டரிடம் புகார் தெரிவியுங்கள் என்றோம்.
“பச்ச புள்ளைக.. தெருவில இறங்கி நமக்காக பிரச்சாரம் செய்யுதுக.. ஏம்மா  ..நம ஒண்ணு சேர்ந்தா முடியாததுன்னு ஒண்ணு இருக்கா ” என்றாள் அவர்களில் ஒரு  மூதாட்டி .

மதுரை அம்பிகா தியேட்டர் முன்பு மாலை 4.40 க்கு கூடியது மாணவர்கள் குழு, சீனா அய்யாவுக்கு போன் செய்தோம். அப்பலோவில் ரெகுலர் செக்கப்புக்கு சென்றுள்ளேன் ஒரு கால் மணி நேரத்திற்குள் வந்து விடுவேன் என்றார். மாணவர்கள் அதற்குள் ஒரு தெருமுனைப்பிரச்சாரம் மேற்கொண்டு விடுவோம் என முடிவெடுத்து சுரேந்திரன் பாபு அவர்களை அழைத்துக் கொண்டு , தெரு தெருவாக டெங்கு கொசு ஒழிப்பு சார்பான பிரச்சார நோட்டீஸ் விநியோகம் செய்ய துவங்கினர். 




அண்ணா நகர் பஸ் ஸ்டாப் அருகில் செல்லும் சந்தின் துவக்கத்தில் மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு டெங்கு பிரச்சாரம் தொடங்கினர். வில்லுப்பாட்டு ஆரம்பித்தவுடனே ,தெருவில் ஆங்காங்கே குழுமிய மக்கள் மாணவர்களை நோக்கி திரண்டனர். நாடகம் அரங்கேறிய போது, மக்கள் அனைவரும் விழுந்து சிரித்தனர்.
ஆடல், பாடல் முடிந்த பின்பு , கொசுவை வளர விடாமல் தடுப்பது தான் நாம் நோய்களில் இருந்து நம்மை பாதுக்காக்க வழி என்று விளக்காமாக எடுத்துரைத்தேன்.

பின்பு, அனைவரும் அண்ணா நகர் 10 வது குறுக்கு தெரு முனைக்கு செல்ல தயாரானோம். அப்போது சீனா அய்யா தான் பஸ் ஸ்டாப்புக்கு வந்து விட்டதாக சொல்லவே, நான் சற்று முன்னோக்கி பாருங்கள் என சொல்லி , எங்களின் இருப்பை அடையாளப் படுத்தினோம். பின்பு அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு , சீனா அய்யா அபார்ட்மெண்ட் அருகில் உள்ள (பின் கேட்) பிள்ளையார் கோவில் முன்பு கூடினோம்.




மாணவர்கள் அப்பகுதி மக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு நோட்டீஸ் கொடுத்து, வீதி நாடகம் போடப்போவதாக சொல்லவே , அனைவரும் ஒன்று திரண்டனர்.  மாணவர்கள் வந்தனம் அய்யா வந்தனம் .. என பாட ஆரம்பிக்க அனைவரும் வீடுகளின் மாடிகளில் இருந்து பார்வையிட தொடங்கினர்.
சீனா அய்யாவும் அவரின் துணைவியார் அவர்களும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் மாணவர்களின் செயல்பாட்டினை பார்த்து ரசித்தனர். அவர்களின் நாடகத்தினை மிகவும் மகிழ்சியாக கண்டு கழித்தனர். மாணவர்கள் பாடிய மக்கும் குப்பை, மக்கா குப்பை பாடல் அவர்களின் மனதை கவர்ந்ததை வெகுவாக கண்டு ரசித்தேன். அப்பகுதியில் தெருநாடகம் முடிந்ததும் அனைவரும் சீனா அய்யாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். சீனா அய்யாவின் துணைவியார் காலையிலிருந்து அப்பல்லோவில் இருந்து செக்கப் மேற்கொண்டு , இப்போது தான் வந்துள்ளதால், எங்களிடம் விடைப் பெறவே, சீனா அய்யா எங்களுடன் தொடர்ந்தார். அனைவரும் எஸ். எம். பி காலணி பகுதியை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். வழி நெடுகிலும் கொசுவை ஒழிப்போம் .. டெங்குவை தடுப்போம் என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் நோட்டீஸ் விநியோகித்து சென்றனர்.
   பின்பு அங்கும் தெரு நாடகம் நடத்தும் போது வீட்டில் கட்டப் பட்டிருந்த நாய் குரைக்கவே , அதனை உள்ளே அழைத்துச் சென்றனர். மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தங்களின் தெருமுனை பிரச்சாரத்தினை மேற்கொண்டனர். முடிவில் மாணவி ஐஸ்வர்யா “சார் ஒரு சின்ன டவுட் .. நாங்க நடிச்சு பேசினப்பா எல்லாம் நாய் குரைக்கல.. ஆனா நீங்க பேசினப்ப மட்டும் எப்படி சார் கரெக்டா குரைக்குது”
அடுத்துள்ள மாணவி சக்தி பிரியா “சார் உங்கள.. நாயுன்னு சொல்லுது சார் “ என்றாள். நானும் சும்மா இருந்திராமல் “ அது தானே.. ஒரு நாயோட.. பாஷை இன்னொரு நாய்க்கு தான் தெரியும்” என்றேன். அனைவரும் இப்படியாக மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் வாரிக் கொண்டு சிரித்துக் கொண்டும் சென்றோம்.





சீனா அய்யா எங்களுக்கு தெருமுனை பிரச்சாரத்தின் முடிவில் , கிருஷ்ணா ஹோட்டலில் இட்டிலி, பொங்கல் வாங்கி தந்து மகிழ்ச்சியுரச் செய்தார். மாணவர்கள் நன்றி பெருக்கோடு பார்த்தனர்.

உண்மையான கற்றல் நடைப்பெற்று கொண்டிருக்கிறது என சீனா அய்யாவின் துணைவியார் எங்களை வாழ்த்தினார்.

நாளை மதுரை கீழச்சந்தைப்பேட்டை பள்ளி வாசல், குருவிக்காரன் சாலை, கணேஷ் தியேட்டர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  

3 comments:

arasan said...

நற்பணி தொடரட்டும்

தி.தமிழ் இளங்கோ said...

ஆசிரியப் பணியோடு சமூகசேவையையும் செய்திடும் மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - நல்ல்தொரு முயற்சி - விழிப்புணர்வுக் கூட்டம் - தெரு முனையில் நடத்தி - பொது மக்களிடம் செய்திகளைப் பரப்பி - இறுதியில் தங்களீன் உரையுடன் நிறைவு செய்தது நன்று. தொடர்க நல்ல செய்ல்களை = நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment