Thursday, March 8, 2012

முன்னோடி




இருள் பகலை வெல்ல
தொடங்கிய மாலை பொழுது…
பயந்து உடல் சிவந்து
கடலுக்குள் மறைய தொடங்கினான்
சூரியன்…
வீட்டினுள் நட்சத்திரங்கள்
மின்னத் தொடங்கின
மின்சாரம் அறுந்த
இருள் கவ்விய நேரங்களில்
சலித்த மனிதர்களிடம்
நட்சத்திர சிரிப்பில் வானம்
பல் இளித்து சொன்னது
பவர் கட்டில் உங்களுக்கு முன்னோடி
நிலவு என்று..! 

6 comments:

சித்திரவீதிக்காரன் said...

பவர் கட்டில் உங்களுக்கு முன்னோடி நிலவு என்று//
நல்ல கற்பனை. சமீப காலமாக மின்தடை அதிகமிருப்பதால்தான் நட்சத்திரங்களையே பார்க்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லோரும் சின்னத்திரை நட்சத்திரங்களையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். பகிர்விற்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அவஸ்தையையும் மிக அழகான கவியாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ramnet said...

நட்சத்திர சிரிப்பில் வானம்/// நல்ல உவமை..

SURYAJEEVA said...

நிலவின் பவர் கட்டா? வித்தியாசமான சிந்தனை

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - சிந்தனை அருமை - நிலவு தான் முன்னோடி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

மாதவன் said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Post a Comment