Friday, March 9, 2012

நைஜிரியா ராகவனுக்கும் 2ஜி அலைக்கற்றைக்கும் உள்ள தொடர்பு - புதிய தகவல் உடனே படியுங்கள்


 “சொற்கள் மூலமாக இந்த மனித குலம் முழுவதையும் வியாபித்திருப்பேன்”- சார்த்தர்.

     தன் நட்பு மூலமாக உலகம் எங்கும் தன்னை விரிவுபடுத்தியுள்ள  மனிதர்களில் ஒருவர்  நைஜிரியா ராகவன். சென்னை வந்து ஒன்பது மாதங்கள் ஆகிய நிலையில் தன் சொந்த பயணம் காரணமாக இராமேஸ்வரம் சென்று திரும்புகையில் மதுரையில் கா.பாவின் புண்ணியத்தில் மடக்கினோம்.

     கார் டிரைவர் இல்லாத சூழலில் தானே கார் ஓட்டி வந்ததாலும், ஓய்வு எடுக்கும் சூழலில் மதுரை மீனாட்சியின் அருளில் மதுரையில் அவசியம் தங்க  வேண்டியாகி விட்டதாலும் நைஜிரியா ராகவனை பார்க்கும் வாய்ப்பு சீனா, சுந்தர்(சித்திரை வீதிக்காரன்), கா.பா, தருமி மற்றும் எனக்கு கிட்டியது.
 .
     அரவிந்த் சென்ற முறை வந்த போது இருந்ததை விட மிகவும் துடிப்புடன் என்னுடன் உரையாற்றினான். ஆழமான விசயங்களை பற்றி மிகவும் அழுத்தமாக எடுத்து உரைத்தான்.

     தருமி அய்யா விலங்கியல் துறை சார்ந்த பேராசிரியர் என்று அறிந்த வுடன் , நைஜிரியாவில் காமர்ஸ் குரூப் படிப்பில் பையாலஜி சேர்த்துள்ளார்கள் ஏன் ? என கேள்வியை முன் வைத்தான். காமர்ஸ்க்கும் பையாலஜிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டான்.

     நம் கல்வி முறையில் மதிப்பெண் அடிப்படையிலே மட்டுமே +1 குரூப்பில் சையின்ஸ் மற்றும் பிற குரூப்கள் ஒதுக்கப்படுகிறது. மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு பள்ளியில் இடம் கிடையாது. இப்படி மதிப்பெண் அடிப்படையிலேயே பள்ளியின் தரத்தை உயர்த்துகிறார்கள் என குற்றம் சாட்டினான். (நல்ல சிந்தனை … தாய்யை போல பிள்ளை … மன்னிக்கவும் தந்தையை போல தான் அறிவு அமைந்திருக்கும்.)இந்தியாவின் கல்வி முறையை சாடினான்.

     அய்யா தருமிக்கு அதற்கான விடை தெரியவில்லை. சித்திரை வீதி சுந்தர் உடனே ஈ காமர்ஸ் பேப்பர் இருக்குல்ல… அதுனால ஈ யை பற்றி படிக்க பையோ சயின்ஸ் வைத்திருப்பார்கள் என கடித்தார். ( தருமி ரசித்தார்)

     மாணவர்கள் தங்களின் சுற்றுப்புறம் மற்றும் தங்கள் நாட்டில் உள்ள உயிரினங்கள் பற்றி அறிய அதனை ஒரு பாடமாக சேர்த்து இருப்பார்கள் என்றேன்.

     நம் மண்ணில் விளையும் பயிர்கள் பற்றி இன்றைய மாணவர்களுக்கு தெரியவில்லை. நாம் நம் மண்ணை மறந்து திரிகிறோம். நம் மண் வளத்தை அறிய முற்படுவதில்லை. சாதரணமாக  ஜன்னலில் வந்தமர்ந்து குரல் எழுப்பி நம் தனிமையை இனிமையாக்க தன் குரலில் இசைக்கூட்டி அறிய வைக்கும் எந்த பறவையின் பெயரும் நமக்கு தெரிவதில்லை.
தருமி அய்யா தன் பேத்திக்கு, அமெரிக்காவில் சவுத் , நார்த் அமெரிக்காவினை பற்றி கற்று தருவதை சுட்டிக் காட்டினார்.  அது கூட அந்நாட்டின் வளத்தையும் சுற்று சூழலையும் அறிந்து கொள்ள கற்று தருகிறார்களோ என்று ஐயத்துடன் பதிலளித்தார்.

     சாருவின் எக்ஸைல் பற்றி நான் நல்ல முறையில் விமர்சித்தேன். ராகவன் எனக்கு சாருவை மிகவும் நன்றாக தெரியும். நேரடி தொடர்பு உண்டு , நீங்கள் வாசகர் வட்டத்தில் இருந்தாலும் , அவரை நான் ரசித்து படித்துள்ளேன். எக்ஸைல் பற்றி தவறான கருத்து நிலவுவதை தனக்கே உண்டான நகைச்சுவை உணர்வுடன் சுட்டிக் காட்டினார். . அதற்கு நான் விளக்கம் அளிக்கும் போது கா. பா வந்து விட்டார். நான் இலக்கியம் பேசுவதை நிறுத்தி விட்டேன். (நண்பர்களுக்குள் சண்டை எதற்கு?)

     கா.பா வந்தவுடன் பின் நவீனத்துவம், போஸ்ட் மார்டனிசம் , மாஜிக்கல் ரியாலிசம் என பல்வேறு இசங்களை பற்றி விளக்கமளித்து சுந்தருடன் கலந்துரையாடினார்.

     ரம்யா அக்கா வீட்டு கிரக பிரவேசம் பற்றி பேச்சு வந்தது. சாரி போன் வந்தது . கா. பா இந்த வார ஆனந்த விகடனில் மகளிர் தினத்தை முன்னிட்டு ரம்யா அக்காவின் தன்னம்பிக்கை பற்றி அழகாக எழுதியிருப்பதை நினைவூட்டினேன். ராகவன் அண்ணன் கா.பா வின் மகளீர் தின  பக்கங்களை பி.டி.எப் பார்மெட்டில் சேகரித்து ரம்யா அக்காவிற்கு மெயில் அனுப்பினார்.

     அட இப்படி தானுங்க … மின்சாரம் அற்ற வெப்பம் உமிழும் இரவுகளில் யாரையோ பற்றி எழுத வந்து..எதையோ எழுதும் போது மௌனியின் சுந்தரி  கதை ஆரம்பம் நினைவுக்கு வருகிறது.

“கோடை மிகக் கடுமையாகக் கண்டு விட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப் பற்றி  யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டு விட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப் போல் கட்டிதட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுது கோலை எடுத்து இரண்டு தரம் வேகமாக உதறியதில் , பேனாவைப் பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்து விட்டேன். ஆனால் என் தலையை உதறிக் கொண்டால், பரிதாபம்! பல சிரமங் கொண்டு பன்றிக்கு வாரிவிட்டது போல் படிய வைத்த எனது அழகான கிராப் தலைமயிர் சிலிர்த்து நிற்குமே என்று ஒரு பயம் அடைந்தேன். எனினும், அப்படி இப்படி எழுத ஆரம்பித்து விட்டேன். இப்போது தான் எழுதுவதன் முட்டாள் தனத்தையும் கஷ்டத்தையும் உணர ஆரம்பிக்கிறேன்” – சுந்தரி கதை ( மணிக்கொடி 1936)  

     நீங்க மிரட்டின காலம் போய், பசங்க மிரட்டுர காலம் வந்து விட்டது என ராகவன் சுட்டிக் காட்டினார். ராகவன் எப்போதுமே மனதில் பட்டதை  பட்டாசாக வெடித்து தள்ளுபவர். பழக்கத்திற்கு மிகவும் அருமையான நண்பர். சமூக அவலங்களை எள்ளி நகையாடுவதில் அவருக்கு நிகர் அவரே!

     மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அதில் நானும் கொடுத்து வைத்தவன். பாருங்க, இரவு ஒரு மணிக்கு மேல் முழித்து படித்தாலும் , டைப் செய்தாலும் தொந்தரவு செய்ய மாட்டாள்..! ( தண்ணி தெளிச்சு விட்டுடாங்கப்பா…என தருமி கமண்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)
  
     ராகவனின் துணைவியார் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் அண்ணாவைப் போல பழகுகிறார். அது மட்டுமல்ல அண்ணாவுக்கு எல்லா விசயங்களுக்கும் ஒத்து போகிறார். புத்தக வாசிப்பு பழக்கம் பற்றி பேச வரும் போது , மிகவும் இனிமையாக , “நான்கு பெட்டி நிறைய புத்தகங்கள் அடுக்கி சேந்தியில் வைத்திருப்பதையும், இரண்டு பெட்டி புத்தகங்கள்  அவரின் நண்பர் வீட்டில் கொடுத்துள்ளார்” என சுட்டிக் காட்டினார். இந்த முறை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க வில்லை என்ற ஆச்சரியத் தகவலையும் கொடுத்தார்.
  
     இரவின் தனிமை என்னை வாட்டுகிறது.. இருப்பினும் ராகவனின் நினைவுகள்  நிலவு ஒளிப்போல என்னை வழிநடத்துகின்றன. அவரின் அன்பில் கரைந்து பெருகி , வெள்ளம் போல மதுரை வீதிகளில் உறக்கம் மறந்து இன்னும் வலம் வருகின்றேன் .   கா.பாவின் மூச்சுக்காற்றில் கரைந்து வெளிவரும்  இலக்கிய சிந்தனைகள் , என்னிடம் மறு சுவாசம் அடைந்து சார்த்தர் படிக்க தூண்டியுள்ளது எனக்கு வியப்பை தருகிறது.  
ஓய்வின்றி உழைக்கும் சீனா அய்யாவின் உழைப்பு , நட்பு பாராட்டும் பண்பு, என்னை நேர்த்தி மிக்கவனாக மாற்றி வருகின்றது. சீனா அய்யா, தருமி அய்யாவின் ஆழ்ந்த நட்பு  கூட ராகவன் அண்ணாவை மதுரையில் தங்க வைத்திருக்கலாம். அரவிந்த் என்னை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புத சக்தி. அவனின் நகைச்சுவை உணர்வு என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறது.

     கடைசியாக சார்த்தரின் வரிகளுடனே ராகவன் அவர்களை காண்கிறேன்.

“என் சக நண்பர்கள் , நான் புதைக்கப் பட்ட மறுநாளே என்னை மறந்தாலும் , அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. அவர்கள்  உயிரோடு இருக்கும் வரை நான் அவர்களைத் தொடர்வேன், பெயர் இன்றி யாரும் அறியாவண்ணம், எனக்கு தெரியாத மில்லியன் கணக்காய் இறந்தவர்கள், என்னில் அழியா வண்ணம் நான் பாதுகாத்து வருவது போல் நான் ஒவ்வொருவரிடத்திலும் இருப்பேன்”

     ஆம் ராகவனுடன் உரையாடுங்கள்… அவர் நம் நட்பை வருடங்கள் கடந்தாலும் சார்த்தர் சொல்வது போல் பாதுகாத்து வருவது அறிய வரும். அக நக நட்புக்கு ஒரு வாழும் உதாரணம் நம் நைஜிரியா ராகவன் மற்றும் குடும்பத்தார். 

     நட்பு வட்டத்தில் 2ஜி அலைக் கற்றை போல நைஜிரியா ராகவன் மிகவும்  பிரபலமானவர் என்று சொன்னால் மிகையாகாது. 

4 comments:

தனிமரம் said...

ராகவன் பற்றிய நீண்ட பார்வையைச்  சொல்லும் அழகான பதிவு.

சித்திரவீதிக்காரன் said...

ராகவன் அவர்களை சந்தித்தது பெருமகிழ்சியான விசயம். நான்குகோபுரங்களும், நிலவொளியில் மிளிர அழகாய் நடந்த உரையாடலை தாங்கள் மிக அற்புதமாக பதிவு செய்து உள்ளீர்கள். மிக்க நன்றி. -சித்திரவீதிக்காரன்.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - மாபெரும் பதிவர் சந்திப்பினை அழகாக உரையாக்கி பதிவிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

பதிவர் சந்திப்பு பதிவு சிறப்பு...

Post a Comment