Wednesday, April 8, 2015

காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழில் வெளிவந்த கவிதை

மாணவர்கள் அற்ற வகுப்பறை
இந்த வகுப்பறை 
இப்போது 
மாணவர்கள் அற்று காட்சியளிக்கலாம்.
இதற்கு முன் 
இருவர் தங்களுக்குள் சண்டையிட்டு இருந்திருக்கலாம்
இருவர் பாடம் கவனிக்காமல் எங்கோ இருந்திருக்கலாம்
இருவர் நட்பை பரிமாறியிருந்திருக்கலாம்
இருவர் தங்கள் ரகசிய தோழி குறித்து
சிலாகித்து இருந்திருக்கலாம்
இருவர் மதிய உணவு குறித்து சிந்தித்து இருந்திருக்கலாம்.
இருவர் நேற்று இரவு பார்த்த சினிமாவை நினைத்தப்படி இருந்திருக்கலாம்.
இருவர் எதிரில் கொடுமைப்படுத்தி கொண்டிருப்பவரை
கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்
இருவர் வீட்டில் நடந்த சண்டை குறித்து கவலைக் கொண்டவர்களாக இருந்திருக்கலாம்
இருவர் ஓடிய்ப்போன சகோதரி குறித்த பயத்தில் இருந்திருக்கலாம்
இருவர் முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும்
ஆயாவையோ தாத்தாவையோ எண்ணி வருந்தி இருந்திருக்கலாம்
இருவர் தன் தாய் கொண்டு வரும் உணவுக்காக காத்திருந்திருக்கலாம்
இருவர் எதையோ சாப்பிட்டு வாந்தி எடுத்திருக்கலாம்
இருவர் வாத்தியார் திட்டியதை நினைத்தப்படி அவர் மேல் வஞ்சத்தை செலுத்திக் கொண்டிருக்கலாம்
இப்படி எத்தனையோ இருந்திருக்கலாம்
வகுப்பறை என்றும் வெறுமை அற்று
காட்சியளிப்பதில்லை
மாணவர்கள் அற்ற வகுப்பறையை
அட இதில் என்ன இருக்கிறது
என சாதாரணமாக 
கடக்க இயலாது...!

மதுரை சரவணன்.

நன்றி காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ் 

1 comment:

Yarlpavanan said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Post a Comment