Friday, November 21, 2014

என்னமா யோசிக்கிறாங்கப்பா...!

எப்பொழுதும் ஆசிரியர்களை விட மீடியாக்கள் மிகவும் பவர் புல்லாக இருக்கின்றன. தான் சொல்லவருகின்ற அனைத்து விசயங்களும் புரிகின்றதா என்பதை உடனடியாக எந்த ஆசிரியரும் சரிப்பார்ப்பதில்லை. அவர்களின் சரிப்பார்ப்பு (மதிப்பீடுகள்) வாந்தி எடுக்கும் வித்தையை மட்டுமே சரிப்பார்க்கின்றன.
மீடியாக்கள் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக சரியான புரிதலுடம் விதைக்கின்றன. இதில் சிறுவர்களிடம் தான் பாதிப்பு அதிமாக உள்ளது.
நேற்று எப்போதும் போல் தமிழ்பாடத்தில் இருந்து பொருள் கூறுககேட்டுக்கொண்டு வந்தேன். அப்போது அம்மா என கேட்டேன். தாய் என கூறுவதற்கு பதிலாக மாணவர்களில் பாதிப்பேர் சத்தமாக மக்களின் முதல்வர் என கூறினர். சிரித்து விட்டேன். மீடியாக்கள் தங்கள் கருத்துக்களை எவ்வளவு பேண்டசியாக திணிக்கின்றன. நாம் தான் மாணவர்களை புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றோம்.
மதுரை சரவணன்.

1 comment:

Post a Comment