Thursday, November 11, 2010

குலோப்ஜாமூன்

வலையேற்றப்படாத
என் கவிதைகள்
குலோப்ஜாமூன் போல
ஊறிக்கொண்டுள்ளன
நீங்கள் சுவைப்பதற்காக...!


வலையேற்றம் அடைந்த
என் கவிதைகள்
சொல்லும் கருத்தில்
ஆட்கொண்டு
நான்கு யாமமும் விழித்து
மனதோடு பூசித்ததால்
சிவலோகம் அடைந்தீர்
என் கவிதையுடனே தாங்களும்..!
 
என் கவிதைகள்
பாரிசாதம் போல
கேட்டதையெல்லாம் கொடுக்கும்
கவி வரிகளை சுற்றி சுற்றி வருவதாலே..!

என் கவிதைகள்
நீங்கள் முத்தமிடும் போது
குழந்தையாக சிரித்துத்
தவழ்கிறது உங்கள் கரங்களில்...!

என் கவிதைகள்
மன ஆழத்தில் பதிந்து
உணர்வுகளைத் தூண்டி
சமூகப் பொறுப்பை உணர்த்தும் போது
வீர வாளாக உங்கள் கரங்களில் ....!

சமூக அவலங்களைச் சாடும்
என் கவிதைகள்
தோட்டாக்களாக
சீறிப்பாய்ந்து
என் கவுண்டர் செய்கின்றன...!

மொத்தத்தில்
என் கவிதைகள்
உங்களுடன் வாழ்கின்றன...!

5 comments:

'பரிவை' சே.குமார் said...

//என் கவிதைகள்
பாரிசாதம் போல
கேட்டதையெல்லாம் கொடுக்கும்
கவி வரிகளை சுற்றி சுற்றி வருவதாலே..!//

சூப்பர் சரவணன்.

எஸ்.கே said...

அருமை சார்!

Ramesh said...

வாவ் சுப்பர். அத்தனையும் நெஞ்சுக்குள். தித்திப்பு. நல்லா இருக்கு.

Anonymous said...

ungal kavithai miga alagu

arasan said...

Sir superb lines...
keep ur rocking job...

Post a Comment