Thursday, September 4, 2014

மதுரை புத்தகக்கண்காட்சியில் மாணவர்களுடன் மனுஷ்யபுத்திரன்

இன்று புத்தகக்கண்காட்சிக்கு மதியம் பன்னிரெண்டு இருபது மணிக்கு மேல் குழந்தைகளை அழைத்து சென்றேன். எஸ்.ராமகிருஷ்ணனின் கால் முளைத்த கதைகள் வாங்குவது என முடிவெடுத்து வந்திருந்த குழந்தைகளுக்கு உயிர்மை ஸ்டாலில் புத்தகம் வாங்கி கொடுத்தேன். மனுஷ்யபுத்திரன் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். 

ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் ஆர்வத்துடன் புத்தகம் வாங்குவதை பார்த்து அதிசயித்தார். அவர்கள் தாங்கள் வாசித்த சுஜாதாவின் வாட்டர் கார் மேட்டர் சிறுகதை குறித்து சொன்னேன். அவர் இன்னும் ஆச்சரியமாகப் பார்த்தார். மேலும் அவர் குழந்தைகளுடன் அன்பாக நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து அதிசயித்து என்னை உற்று கவனிக்க தொடங்கினார். அந்த மகிழ்ச்சியான தருணம் வாழ்நாளில் மறுக்க முடியாத தருணமாக இருந்தது. 

    பின் நண்பன் எர்னஸ்டோ சுஜாதவின் திருக்குறள் மற்றும் சுஜாதாவின் குழந்தைகளுக்கான நூல்களை காட்டினார். அவை 100 ரூபாய்க்கும் மேல் விலை இருந்தது. மாணவர்கள் ஐம்பது ரூபாய் தான் இருக்கிறது. புத்தகம் வேண்டும் என்றனர். உடனே மனுஷ்யபுத்திரன் புத்தகங்கள் வாங்கும் ஆர்வத்தை பார்த்து அனைவருக்கும் கேட்கும் புத்தகங்களை ஐம்பதுக்கே கொடுக்க சொன்னார். கொஞ்சம் கூச்சமாக இருந்தது. எவ்வளவு உயர்வான மனுசன் இவர். குழந்தைகளுக்காக குழந்தையின் ஆசைகளை நிறைவேற்ற புத்தகத்தை பாதிக்கும் மேற்பட்ட விலையில் கொடுக்கிறார். குழந்தைகளுடன் பேசினார். மகிழ்ந்தார். புகைப்படம் எடுத்துக்கொண்டார். 


 அதன்பின் குழந்தைகள் புக் பார் சில்ட்ரன் ஸ்டாலுக்கு சென்றனர். அங்கும் புத்தகங்கள் வாங்கினர். அதன் பின் விகடன் ஸ்டால் என வரிசையாக சென்று எல்லோரும் புத்தகம் வாங்கினர். நேற்று விடுமுறை எடுத்து இன்று வந்த மாணவர்கள் மட்டும் காசு கொண்டு வராததால் புத்தகம் வாங்க வில்லை. அவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து வாங்கி விடுவார்கள் என்றே நம்புகின்றேன். கரும்பலகை நாவலை எழுதிய ரஷ்யா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். (தமிழினி ஸ்டாலில்.) பின் வெளியில் வந்து சிறிது நேரம் விழா பந்தலில் அமர்ந்து புத்தகங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். விடைப்பெற்றோம். அனைவரும் மகிழ்ந்த அந்த தருணம் என் வாழ்நாளில் பொக்கிஷ்ம் போன்றது. 


 எனக்கு குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதி தந்த நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

நிறைவான மகிழ்ச்சிகள்.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

”தளிர் சுரேஷ்” said...

மாணவர்களை சிறப்பாக உருவாக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

Post a Comment