குழந்தைகள் மிக எளிய வழியில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொள்கின்றார்கள். குழந்தைகளின் மன முதிர்ச்சி மிகவும் ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது.
பள்ளியிலும் சரி வீட்டிலும் குழந்தைகள் ஒரே மாதிரிதான் செயல்படுகின்றார்கள். குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் சவாலான விசயமாக இருந்தாலும் , அவர்களை புரிந்து கொண்டால், குழந்தைகளை சமாளிப்பது எளிதான காரியமாகி விடும்!
குழந்தைகள் உலகம் அதிசயமானது. குழந்தைகள் தங்களுக்கென ஒரு உலகத்தை உருவாக்கி கொள்கின்றார்கள். அவர்களின் உலகில் சஞ்சரிப்பது மிகவும் எளிது. குழந்தைகளுடன் குழந்தைகளாக இருந்து பாருங்கள். அதுவே குழந்தைகளை புரிந்து கொள்வதற்கும், நமது குழந்தைமையை மீட்பதற்குமான உத்தியாகும். குழந்தைகள் உலகில் நாம் எளிதாக நுழைந்துவிட முடியும்.
மாலை சத்யா டிவியில் டோரிமான் பார்த்து கொண்டிருந்தான்.
‘பாலிங் நட்சத்திரம் (falling star) கீழே விழுகின்றது, அதை பார்த்து மூன்று முறை கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால், நாம் நினைத்தது நடக்கும்’ என வசனம் வந்ததும் ,சத்யாவை பார்த்தேன்.
‘பாலிங் நட்சத்திரம் (falling star) கீழே விழுகின்றது, அதை பார்த்து மூன்று முறை கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால், நாம் நினைத்தது நடக்கும்’ என வசனம் வந்ததும் ,சத்யாவை பார்த்தேன்.
“டாடி...பாலிங் ஸ்டார் என்றால் என்ன ? ”
”எரி நட்சத்திரம். மேலே இருந்து பூமியை நோக்கி நட்சத்திரம் கீழே விழும். அது காற்றில் பறந்து வரும் போதே...எரிந்து சாம்பலாகி விடும். அதனால் கீழே விழும் முன் மறைந்து விடும்.”
”ஓ !அதுவா.., எனக்கு தெரியும், டாடி.!.நான் பார்த்திருக்கேன். ஆமா டாடி கீழே விழுகிற துக்குள்ளே மறஞ்சிடுச்சு..டாடி “
”வெரி குட்... நாம் வெளியே போய் எரி நட்சத்திரம் விழுகிறதான்னு பார்ப்போமா?”
“டாடி நான் சொல்ற மாதிரி செஞ்சா நீ நினைச்சது நடக்கும்..”
”எப்படிடா..?”
”போ டாடி நீ எப்பவும் மறந்து மறந்து போயிடுற..”
“சாரி.. மன்னிச்சிடு.. தம்பி “
”டாடி.. தூங்கிறதுக்கு முன்னாடி நம்ம தலைமுடியை பிடிச்சிட்டு..நாம் மனசுகுள்ள எதையாவது நினைச்சு படுத்தா.. அது கட்டாயம் நடக்கும் டாடி..”
”ஓ ! சொன்னேயில்லே..!”
“டாடி, நான் போலீஸ் ஆபிசராகணும்.. திருடங்களை பிடிச்சு ஜெயி ல்ல போடணும்.. தப்பிக்க நினைச்சான் ஒரே சுடு டுமீல்.. அவ்வளவு தான்.. மக்கள் எல்லாம் பயமில்லாம நடக்கணும்.. வண்டியில் போகும் போது ஜெயின் அறுக்கிறவனை ஒரே போடு டுமீல் ...செத்துடுவான்...”
”போதும்சாமி...நீ வருங்கால ஐபிஎஸ் தான்! ”
“டாடி இன்னிக்கு நீ தூங்கிறதுக்கு முன்னாடி நினைச்சிட்டு படு...மறந்துடாம முடியை பிடிச்சுட்டு நினைச்சுக்க...நீ நினைச்சது நடக்கும்”
இப்ப தான் ஞாபகம் வந்தது .
இரண்டு மாதத்திற்கு முன்பு படுக்கையில் உறங்கும் முன் முடியை பிடித்துகொண்டு சிரித்தான்.
நான் பார்த்ததும் அவன் சிரித்தான். நானும் சிரித்தேன். என்ன பண்ற என கேட்டேன்.
“டாடி நான் போலீஸ் ஆபிசராகணும்ன்னு முடியை பிடிச்சு நினைச்சேன். என் ப்ரண்டு சொன்னான்”
நானும் முடியை பிடித்து கொண்டு இந்த முறை மதுரை புத்தக திருவிழாவில் நான் எழுதிய புத்தகம் வர வேண்டும் என்று நினைத்தேன்.
நினைவுக்கு வந்தது.
அப்போது நினைத்தது நடந்துவிட்டது.
குழந்தைகளாக இருப்பது வரம்.
கொஞ்சம் அவர்களோடு இணைந்து இருக்க வேண்டும். அதன் பின் குழந்தைகளை நம் போக்கில் வளர்ப்பது எளிதாகிவிடும்.
கொஞ்சம் அவர்களோடு இணைந்து இருக்க வேண்டும். அதன் பின் குழந்தைகளை நம் போக்கில் வளர்ப்பது எளிதாகிவிடும்.
”சத்யா வா நாம் படிக்கலாம்..”
”வா டாடி.. தமிழ் முதலில் படிப்போம்..”
டிவியை அவனே அணைத்துவிட்டு வந்தான்.
”வா டாடி.. தமிழ் முதலில் படிப்போம்..”
டிவியை அவனே அணைத்துவிட்டு வந்தான்.
மதுரை சரவணன்.
4 comments:
ஆஹா... நானும் முடியைப் பிடிச்சிக்கிட்டு நினைச்சிக்கிறேன்...
குழந்தைகள் உலகம் விசித்திரமானது என்றாலும் அது சந்தோஷங்களை நிறைத்து வைத்திருக்கும் உலகம்...
அருமை... சத்யாவுக்கு வாழ்த்துக்கள்.
எத்தனை வயது வரை குழந்தைகள் ?
குழந்தைகள் உலகம்.... மகிழ்ச்சியாக இருக்கட்டும்....
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Shree Padma Nrityam Academy
SPNAPA
Padma Subrahmanyam
Bala Devi
Bala Devi Chandrashekar
Bharata Natyam
BharataNatyam Classes
Bharatanatyam Teachers
Indian Classical Dance
BharataNatyam Schools in Princeton
BharataNatyam Schools in New Jersey
BharataNatyam Schools in Livingston
BharataNatyam Schools in Edison
BharataNatyam
Guru for Bala Devi
Indian Dance Guru
Indian Classical Dance Guru
BharataNatyam Guru
Bharatanatyam Teacher
Post a Comment