Tuesday, January 13, 2015

வார்டு எண் 99 (இராஜாஜி அரசு மருத்தவ மனை )


சாலை பாதுகாப்பு வாரம் நடைப்பெறும் இந்தவேளையில் தினமும் சாலை விபத்துக்கள் நடைபெறுவது வருத்தமளிக்கின்றது. நம் வீதிகள் 1970களில் உள்ளது போன்று தான் உள்ளன. வாகனங்கள் பெருகி விட்டன. ஆனால் நான்கு வழிசாலைகள் பெருநகரங்களை இணைக்கின்றன. வாகனங்களின் வேகம் அதிகரித்து விட்டது. நகரங்களை இணைப்பது அதே சமயத்தில் விதி மீறல்கள் அதிகமாகி விட்டன.
வாகன நெருசலில் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதால், மேலும் நெருசலை இடியாப்ப சிக்கலாக்கி வருகின்றது. இன்ஞினின் குதிரை திறன் அதிகமாகி கொண்டே வருகின்றது. சக்கரங்கள் பெரிதாகி கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாடலில் இருசக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் 18 வயது வந்தவுடனே இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய ஆரம்பிக்கின்றனர். கல்லூரி பெண்கள் ஒவ்வொருவரும் இருசக்கர வாகனங்களில் தான் செல்கின்றனர். நகரங்களில் சேர் ஆட்டோக்கள் பெருகிவிட்டன. நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் வாகனங்களின் எண்ணிக்கையை பெருக்கி கொண்டே வருகின்றன.
தினமும் சாலையில் ஒருவர் கீழே விழுவதை பார்த்து கொண்டே தான் இருக்கின்றேன். இதில் கொடுமை என்னவென்றால் யாரும் அவர்களை தூக்கி விடுவதில்லை. கொஞ்சம் இறக்க குணம் கொண்டவர்கள் 108க்கு போன் அடித்துவிட்டு சென்று விடுகின்றனர். தினமும் பொது பேருந்தின் அடியில் இரு சக்கர வாகனம் சிக்கி இரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்க்கும் போது இதயம் நின்று விடும் போல் இருக்கின்றது.
வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சாலை விதிகளை மீறுபவர்களை பிடித்து பைன் போடுவதை தவிர்த்து, அவர்களை மதுரை பெரியாஸ்பத்திரி எனப்படும் இராஜாஜி அரசு மருத்துவ மனையில் 99 வார்டில் இரண்டு நாட்கள் தங்கி இருக்க செய்தால் நிச்சயம் அந்த இரத்த வாடையையும், வாகனவிபத்தில் கை கால் இழந்தவர்களின் கதறலையும் அவர்களின் குடும்பத்தாரின் குமுறலையும் பார்ப்பவர்கள் அடுத்த முறை இத்தவற்றை செய்ய மாட்டார்கள்.
எனக்கு தெரிந்த சாலை விளக்குகள் குறித்து ஒன்றாம் வகுப்பிலேயே அறிமுகம் கிடைத்து விடுகின்றது. மூன்றாம் வகுப்பில் சாலை விதிகள் சாலையை எப்படி கடப்பது சாலையில் உள்ள குறியீடுகள் குறித்து அறிந்து கொள்கின்றான். ஐந்தாம் வகுப்பு வரும் போது அனைத்து சாலை குறியீடுகள் மற்றும் இரயில்வே குறியீடுகள் குறித்தும் தெரிந்து கொண்டு விடுகின்றான்.
லைசன்ஸ் எடுக்கும் போது சாலை விதிகளை தெரிந்த பின்பே லைசன்ஸ் கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் என்ன நடக்கின்றது என்பது நாம் அறிந்த விசயம் தான். நாம் வண்டி ஓட்ட கற்றுக்கொள்வதற்கு மெனகெடுவதே அதிகம். லைசன்ஸ் பெறுவது என்பது மிக எளிது. வண்டி ஓட்டும் முன் LLR போட்டு விடுகின்றோம். சரியாக ஆறுமாதம் முடியும் முன் நான் லைசன்ஸ் எடுத்துவிடுகின்றோம்.
என் மைத்துனன் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கின்றான். வாகன லைசன்ஸ் பெற அப்ளை செய்துள்ளான். ஏதோ டிகிரிக்கு படித்தது போன்று விடுப்பு எடுத்து ஒரு வாரம் வாகன விதி முறைகள், வாகனத்தை பற்றிய அறிவு, பேரிடர் மேலாண்மை குறித்து தொடர்ந்து படித்து வந்தான் . ஏன் என்று கேட்டேன். தேர்வில் பாஸ் செய்தால் மட்டுமே முறைப்படி வண்டி ஓட்டி காட்டி லைசன்ஸ் கிடைக்குமாம்!
இந்தியாவை முன்நிறுத்த ஆன்மிக பாதை தேவை இல்லை. ஊழல் அற்ற வழிமுறைகளை கையாள்வதன் வாயிலாக மட்டுமே முன்னுக்கு கொண்டு வர முடியும். மதவாதம் அடிப்படையில் எந்த மாற்றத்தைஅம் செய்துவிடாது. அது பழைமையை நோக்கி பயணிக்கவே செய்யும். தூய்மை பாரதம் என்பது தெரு சுத்தம் மட்டும் அடைவது அல்ல. கை சுத்தமும் சேர்ந்தே அடைவது தான்.
ஒரு சின்ன கதை. இதை படித்து இருப்பீர்கள். தான் என்ற அகங்காரம் படைத்த ஒருவன் தன் குருவை மட்டம் தட்ட வேண்டும் என்று நினைக்கிறான். அடுத்தவரை மட்டம் தட்டிக்கொண்டே இருக்கும் அவன் தான் ஒரு கனவு கண்டேன். அதற்கு விளக்கம் அளிக்க முடியுமா? என்கின்றான்.
“ என் கனவில் நீங்களும் வந்தீர்கள். நீங்கள் உங்கள் கரத்தால் தேன் பாத்திரத்தை வழித்து கொண்டு இருக்கிறீர்கள். நான் என் கரத்தால் கழிப்பறை மலத்தை சுத்தம் செய்கின்றேன்” என்கின்றார் அந்த குரு.
இவன் அவரை மட்டம் தட்ட நினைத்து, “ அதே தான். உங்கள் தகுதிக்கு நீங்கள் அதைத்தானே செய்வீர்கள் ” என்கின்றான்.
“இல்லை தம்பி, கனவு இன்னும் இருக்கிறது. அடுத்து நடந்ததை நீ கேட்கவில்லையே ! நான் உங்கள் கையையும் நீங்கள் என் கையையும் நக்குகின்றீர்கள் “ என்றார் குரு.
மதுரை சரவணன்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Post a Comment