Tuesday, May 13, 2014

இரண்டு உயிர்தானே என்றில்லை...அரசே கவனம் கொள்ள வேண்டும்.

விருத்தாசலம் அருகே உயர்கல்வி பயில குடும்ப சூழல் இடம் தாராததால் இரண்டு சகோதரிகள் உயிர்களை மாய்த்து கொண்டனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இருவரும் முறையே பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்கள். அரசே! தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று அக்கறை காட்டும் அரசே! இது போன்ற தவறுகளுக்கு நம் அணுகுமுறையிலும், கல்வி முறையிலும் ஏதோ குறை இருக்கிறது என்பதை எப்போது ஒத்துக்கொள்வீர்கள்.
இரண்டு உயிர்கள். இரண்டு தானே என்பதில்லை. வருடம் முழுவதும் இது போன்று எத்தனையோ உயிர்கள்! தேர்ச்சி சதவீதம் அதிகரிக்காத தலைமையாசிரியர்களையும் , பாட ஆசிரியர்களையும் தண்டிக்கும் அரசு. இனி இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் தடுக்கலாமே..!
உயர்கல்வி என்பது மருத்துவமும், இன்ஞினியரிங் படிப்பும் என்று மாணவர்களுக்கு கற்று தரும் போதனை ஒழிக்கப்பட வேண்டும். பிஏ தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள் எத்தனைப்பேர் முன்னேறியுள்ளார்கள். பத்தாம் வகுப்பில் நான்கு அட்டை வைத்து , பின்பு தேறி, ஆசிரியர்களாக வேலைப் பெற்று, சிறந்த ஆசிரியர்களாக திகழ்கிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் கற்று தர வேண்டும். ஏன் ஆசிரியர்கள் கற்று தர தவறினார்கள். கதை சொல்லியே பல நாட்கள் ஆகிறது. பின்பு எப்படி மாணவர்களிடம் இது போன்று உரையாட முடியும்!
அரசு தேர்ச்சி சதவீதம் எனும் சாட்டையெடுத்து சுழற்றும் போது அதற்கு தகுந்து மாதிரி ஆடிவிட நேரிடுகிறது. அந்த அழுத்தம் தலைமையாசிரியரையும் , அவர் மூலம் பிற பாட ஆசிரியர்களையும் தொற்றி கொள்ள , மாணவர்களும் மதிப்பெண் நோக்கி முன் நிறுத்தி அழுத்தப்படுகிறார்கள். பன்முக திறன் பயிற்சிக்கு நேரம் கிடைப்பதில்லை. மாணவர்களுடன் எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருக்கும் மாணவன். தேர்வு ரிசல்ட் வெளியிடும் போதும் இறுக்கமான தோல்வி மனநிலை கொள்கின்றான். தேர்ச்சிக்கு பின் படிக்க இயலாது அதுவும் உயர்கல்வி என நினைக்கு இஞ்னியரிங், மருத்துவம் கிடைக்காது எனும் போது தனது உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
அரசு இந்நிகழ்வுகளை கவனத்தில் கொண்டு பன்முக திறன் வளர்ப்பு பயிற்சியினை மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்க வேண்டும். நம் எதிர்கால பயிர்கள் வாடுவதையும் தன்னைத்தானே மாய்த்து கொள்வதையும் தடுக்க வேண்டும். தேர்ச்சியில் கொடுக்கும் அதே அளவு அழுத்தத்தை பன்முகதிறன் வளர்க்க அரசு கொடுக்கும் என்று எதிர்ப்பார்ப்போம்!
Like ·  · 

1 comment:

MANO நாஞ்சில் மனோ said...

அரசின் அலட்சியம் உடனே மாற வேண்டும்.

Post a Comment