Sunday, March 17, 2013


 முருகதாஸ் தயாரிப்பில் ஒரு படம் வந்திருக்கு அதுல அவரு தம்பி நடிச்சுருக்கானாம்… பார்க்கவே ரெளடி மாதிரி தெரியிறான்..சண்டை படம் போல இருக்கு ..இருந்தாலும்  பார்க்கலாம் வர்றீய்யா என அழைத்த என் நண்பர் பாபுவின் அழைப்பை மறுக்காமல் படம் பார்க்க சென்றேன். தியேட்டர் பழனிஆறுமுகம் என்றதும் கொஞ்சம் யோசித்தேன். மதுரையில் தியேட்டர்கள் நவீனமாகிக் கொண்டு வருகிறது உண்மை என்பதை அங்கும் காண முடிந்தது.

    ஊரு வம்புக்கு போகாத பையனொருவன் , அடுத்தவருக்கு உதவி செய்தால், (அதுவும் கிரிமினல் குற்றங்களை தடுத்தால்) அவனுக்கு என்ன நேரிடும் என்பது தான் கதை. இன்னும் பழசா சொன்னால், தர்மம் காக்கும் ஒருவனை அதர்மம் அழிக்க நினைக்கிறது , தர்மம் வென்றதா? அதர்மம் அழிந்ததா? இது தான் கதை.


டைட்டில் கார்ட்டில் கொலை , கொள்ளை , கடத்தல் செய்திகள் அடங்கிய செய்திகளைக் காட்டி பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதே எதிர்ப்பார்புடன் மூவர் ஒருவரை கொலை செய்ய துடிப்பது போல காட்டி ஏன் என்ற எதிர்ப்பார்ப்புடன் நம்மை இருக்கையை நோக்கி  நகர்த்துகிறார்கள். பின் மெல்ல சீட்டில் சாய்வது உண்மை தான்.

  அட திலீபன் ஆட்டோகாரனாக முயற்சி எடுத்திருந்தாலும் செட்டாக வில்லை. முதல் படத்திலேயே ஆக்சன் நன்றாக வந்துள்ளது பாராட்ட வேண்டியது. காதல் காட்சிகளில் அவ்வளவாக பொருந்தாததற்கு காரணம், அவருக்கு பொருத்தமில்லா அஞ்சலியாக இருக்கலாம். ஆனால், அஞ்சலி பாத்திரத்தில் பொருந்திப் போகிறார் என்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான நடிப்பு நமக்கு முகம் சுளிக்க செய்கிறார். ஆங்கிலம் உதார் விடும் பார்டியாக வந்துள்ள அஞ்சலி ஓவர் பில்ட அப் விடுவது எரிச்சல் தருகிறது.

   தன்னிடம் வழிப்பறி செய்யும் சம்பத் அவனின் கூட்டாளிகளிடம் தன் பணத்தை திரும்ப கேட்டு அடித்தடியில் ஈடுப்பட்டு, அவர்களிடம் பணத்தை திரும்பப் பெறுவதால் அவர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளான் கதாநாயகன் திலீபன் என்றால் பரவாயில்லை. திலீபன் அடித்ததால் ரவுடி மார்க்கெட் சரிந்தது என்பது ஏற்க முடியவில்லை. அதே சமயம் தெருவில் டீக்கடையில் கொலை பற்றி பேச வாய்ப்பு உள்ளதா? லாஜிக் யோசிக்க வைக்கிறது. அது தவிர்த்து படம் பார்த்தால் விறு விறுப்பான படம் தான்.
சம்பத், ரவிமரியா, ஜெயபிரகாஷ், நண்டு ஜெகன் என அற்புதமான படைப்பாளிகளிடம் குறைந்த வேலை வாங்கப்பட்டுள்ளது. சரண்யா பொன்வண்ணன் அம்மா பாத்திரத்தில் பொருந்திப்போனாலும் இட்டிலியை அள்ளிக் கொட்டுவது ஒட்டவில்லை.

   அட நம்மை சுற்றி இவ்வளவு விசயங்கள் நடக்குதா ? என யோசிக்க வைக்கிறார் இயக்குநர் கின்ஸ்லி.  கதையின் முன்பாதியில் காட்டியுள்ள விறுவிறுப்பை கதையின் பிற்பாதியில் கொண்டு செல்லாதது ஏன் என்று தெரியவில்லை. நீண்ட க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை படத்தின் முடிவு தெரிந்ததால் , அசதி ஏற்படுத்தி படத்தின் முன் பாதியின் விறுவிறுப்பை பேசவிடாமல் மறக்க செய்துவிடுகிறது. ஆர்.பி. குரு தேவ் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. பாடல்கள் ஹிட். கிப்ரான் இசை ஒ.கே. வசனம் மனதில் பல இடங்களில் ஒட்டிக் கொள்கிறது.

       படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ரசிக்கலாம்.

வத்திக்குச்சி கொஞ்சம் பதத்தது. இருந்தாலும் பத்திக்கொள்ளும்.  

2 comments:

மாதவன் said...

Good review..

சென்னை பித்தன் said...

பார்க்க எண்ணுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி.

Post a Comment