Wednesday, March 23, 2016

வு மருத்துவர்கள் நமக்கு வேண்டாமே!



நகரமையமாதல் , நவீன பொருளாதாரம் ஆகியவற்றின் பாதிப்பு மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. 100 ரூபாயில், ஒரு லட்சத்திற்கான (சம் அஸ்யூர்ட் ) ஆக்ஸீடென்டல் பாலிசி வழங்க பன்னாட்டு இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
இன்சுரன்ஸ்சுக்கும் மாணவர் சேர்க்கைக்கும் என்ன சம்பந்தம்!
அட ..அது எக்ஸ்ட்ரா பேக்கேஜ் ஆகிடுச்சுங்க. ! ஆங்கில பள்ளிகள் குரூப் இன்சுரனரஸ்சை கையில் எடுத்து கொண்டு , தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் 1 (அ )2 லட்சத்திற்கான பாலிசி ப்ரிமியம் பள்ளியால் வழங்கப்படும் என விளம்பரம் படுத்துகின்றன. எனக்கு தெரிந்து ஒரு பள்ளியின் ஆண்டறிக்கையில் மாணவர்களின் குடும்ப நலன் கருதி இன்சுரன்ஸ் இவ்வாண்டு நடைமுறைபடுத்தப்பட்டதாக பெருமை பட்டு கொண்டார்கள்.
இன்றைய இளய தலைமுறை புதிய தொழில் நுட்பத்தை , நவீன அறிவியலை மிக எளிதாக உள்வாங்கி , நம்மை பிரமிக்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னைப் புதுப்பித்து கொள்ள வேண்டும் என்பது ஏட்டில் அல்லவா இருக்கிறது. ஆசிரியர் மாணவனை விட பின் தங்கியே இருக்கின்றனர்!
மாணவர் சேர்க்கைக்கு நம்மிடம் எந்த பேக்கேஜ் வும் இல்லை. இருக்கிற நவீன கற்றல் முறையையாவது தூக்கி பிடிக்க வேண்டாமா?!
இன்னும் நாம் பழைய கல்வி முறைகளை தூக்கிபிடிக்காமல் , மாணவர்களை மையப்படுத்தும் கல்வி முறையை கையில் எடுக்க வேண்டும் . இது காலத்தின் அவசியம். பழைய முறை வேண்டும் என்பது சீனாவின் 'வு' மருத்துவர்கள இன்று தேவை என கூறுவதை போன்றது.
அரிய மூலிகைகள் மூலம் நோய் நீக்கும் வித்தை அறிந்தவர்கள் , 'வு' மருத்துவர்கள் . ஆனால், கொள்ளை நோய் வரும் சமயத்தில் இம்மருத்துவர்கள் ஒன்று கூடி அரைநிர்வாணத்துடன் வெறி கொண்டு ஆடி, பாடி, நாக்கிலும் , உடம்பிலும் ஊசிகளைத் தைத்து, செந்நீர் சுரக்கும் நிலையில் மந்திரம் சொல்வார்கள். சிலர் , கத்தி முனை மீதோ, ஆணிகளின் மீதோ உடலைக் கடத்திக் கூக்குரல் இடுவார்கள். பேரொலியும் ஆரவாரமும் கூடிய இத்தகைய செயல்கள் மூலம் கொள்ளை நோய்க்கு காரணமான பிசாசுகளை விரட்டி, நோயிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள் .
பள்ளி விட்டு வீடு செல்ல பள்ளி வாகனத்திற்கு வரிசையில் நகர்ந்த சிறுவன் திடீரென்று கீழே விழுந்தது விட, பதறி ஓடினேன். கீழே விழுந்தவன் கை கால்கள் வெட்ட ஆரம்பித்தன. அச்சம் , பயம் தொற்ற அவன் அருகில் செய்வதறியாது , அவன் பெயரை அழைத்து ஒன்றுமில்லை என்றேன்.
என் அருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவன் , " சார் பதறாதீங்க... வெட்டுறது கொஞ்சம் நேரத்தில் நின்றுவிடும். காற்று விட்டு நில்லுங்கள். அவன் பல்லுல் நாக்கு கடிபடாம இருக்க கர்சீப் கொடுங்க . தலை கல்லு மேல மோதிடாம பார்த்து கங்க...." என்றான்.
அம்மாணவன் கூறியது. போல் எதுவும் நடக்காதது போல் எழந்து நின்றான். " சாரி சார்., மதியம் மாத்திரை போட மறந்துட்டேன் " என்றான். விசாரித்த போது , மண்டையில் உள்ள இரத்தக் கட்டி நரம்பில் உருண்டு ஓடும்போது இம்மாதிரியான தலை சுற்று, வலிப்பு வருமாம்.கட்டி கரைக்க சிகிச்சை மேற்கொள்வதாக கூறினான்.
அருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவனிடம் எப்படி இவனை பற்றி தெரியும் என கேட்டேன். சார் , இரண்டு வருசமா இவன் எங்க ஏரியால இருக்கான். இப்ப எங்க எரியாவில் டைல்ஸ் கல் பதிச்சுட்டாங்க . இவன் கீழே விழுந்து மண்டையை உடைச்சுக்கிறான்னு , மண் ரோடுக்கு போயிட்டாங்க, அதுனால தெரியும்., மூளையில் இரத்தம் கட்டி உருளுதாம் என்றான்.
தேன் கலந்து மருந்த சாப்பிட சொல்லுங்க , சார் என ஆலோசனையும் வழங்கினான், சித்தனை போல், அம் முன்றாம் வகுப்பு மாணவன்.
இம்மாணவரை நல்வழிப்படுத்தி ஆர்வம் ஊட.டினால் , நல்ல தமிழ் மருத்துவனாக்கலாம் . சித்த மருத்தும் தாங்க தமிழ் மருத்துவம். சித்த மருத்துவர்களில் தலையானவர் அகத்தியர் .இவர் முப்பத்தெட்டு நூல்கள் எழுதியுள்ளார். சித்த வைத்தியத்தில் தேன் முக்கிய அங்கம் வகிக்கிறது.
மூன்றாம் வகுப்பிலே அனுபவ வைத்தியனாக , ஆசிரியரை விட தெளிவாக இருக்கும் மாணவர்களிடம் மீண்டும் பழைய முறையில் தான் பாடம் நடத்துவேன் என்றால் என்னாவது.?
ஆங்கில பள்ளிகள் மாணவர்கள் மதிப்பெண்களுடன் , உடல் நலன், எதிர்காலம் , மருத்துவம் , இன்சுரன்ஸ் என சர்வ பலத்தையும் உபயோகித்து மாணவர் சேர்க்கையை எதிர் கொண்டுள்ள இந்நேரத்தில் , நாம் கற்பித்தல் முறையை குறை கூறுவதை தவிர்த்து, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு சம்பளம் பெறுகிறோம் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை தக்க வைக்க முடியும்!
மதுரை சரவணன்.

2 comments:

Yarlpavanan said...

அருமையான பதிவு

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு சரவணன்...

Post a Comment