Tuesday, June 16, 2015

வைகை மாசுப்படுதல் குறித்து மாணவர்கள் கள ஆய்வு.!


கொடுத்திடுவோம் அனுபவக்கல்வி! விதைத்திடுவோம் நற்சிந்தனையை!

      பள்ளி தொடங்கிய மூன்றாவது நாள் (3-06-2015)பள்ளிச்செயலரின் அனுமதிப்பெற்று மாணவர்களை வைகை ஆறு எவ்வாறு மாசு அடைந்துள்ளது என்பதை நேரில் ஆய்வு செய்துவர அழைத்து சென்றேன். இது பாடம் சார்ந்த எப்.ஏ. செயல்பாடாகும். ஐந்தாம் வகுப்பு தமிழ் எனக்கு இறக்கைகள் முளைத்தால் பாடத்திற்கும் , ஆங்கிலப்பாடம் மேன் வெர்சஸ் நேச்சர் என்ற பாடத்திற்கும் உரிய செயல்பாடாகும்.






வைகையை பார்த்த ஒரு மாணவன், “ இதிலேயா சார் அழகர் இறங்கி வருகிறார்” என்றான். “பாவம் சார் கடவுள் ”என்றான் மற்றொருவன். இந்த வருடமும் சூப்பராக களப்பயணம் சென்றதில் பெருமிதம் கொள்கின்றேன்.

 டேங்கர் லாரியில் கழிவுகளை கொட்டிய போது, “ சார் எப்படியெல்லாம் அசுத்தம் ஆக்கிறாங்க .. யாரு சார் இவுங்களை தண்டிக்கிறது” என்று கத்தினான். அருகில் நின்றிருந்த பெரியவர், “ இப்படி தான் சமூக கோபத்தை உண்டாக்க வேண்டும் ” என என்னை பாராட்டி சென்ற போது இன்னும் நிறைய செய்ய வேண்டியது உள்ளது என எண்ணித் தோன்றியது.


 புகைப்படங்கள் மாணவர்களே எடுத்தது. அவர்கள் நீர் மாசுப்படுதலை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை மட்டுமே ஏற்படுத்தி கொடுத்தேன். ஆய்வு மனப்பான்மையை வளர்த்துள்ளேன் என்பதை சொல்லி கொள்வதில் பெருமைப்படுகின்றேன்.


மாணவர்கள் சாக்கடை கழிவுகள் வைகையில் கொட்டப்படுவதை நேரில் கண்டனர். மாடுகள் ஆடுகள் ஆற்று ஓரங்களில் வளர்க்கப்படுகின்றன. மனித கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன. ஆற்றில் துணிக்கு குறிப்பாக சேலைக்கு சாயம் ஏற்றும் தொழில் நடைப்பெற்று வருகின்றது. உரச்சாக்குகள் அலசப்படுகின்றன. மாமிச கழிவுகள் கொட்டப்படுகின்றன. நெகிழி குப்பைகள் பரவி கிடக்கின்றன. இப்படி அடுக்கி வைத்துள்ளனர். அவர்களிடம் இந்த வருடம் வைகை குப்பை இல்லாமல் இருக்க புதுமையான உத்தியை கூற வேண்டும் என்று கூறியுள்ளேன். விரைவில் அதற்கான தீர்வுடன் உங்களை சந்திக்கின்றேன்.

மதுரை சரவணன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் நிறைய நிறைய நிறைய செய்ய வேண்டும்...

வாழ்த்துகள் ஐயா...

Post a Comment