Monday, November 10, 2014

பொங்கல் கடையில் கற்றுக்கொண்ட மொழிப் பற்று


மொழி அழிவதை யாராலும் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.
இந்த உண்மையை ரோட்டில் பொங்கல் கடை வைத்திருப்பவர் எனக்கு புரியவைத்து விட்டார்.

இணையத்தில் எப்பொழுதும் மொழி குறித்து விவாதம் நடந்து வருகின்றது. தமிழ் மொழியின் மீது பற்று இருந்தாலும், இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருதம் திணிப்பு என சர்ச்சைகள் வரும் போதெல்லாம், பிற மொழியை கற்பதால் நம் தமிழ் ஏன் அழியும் என யோசிப்பேன். அதன்காரணமாக மொழி சர்ச்சைகள் உள்ள பதிவை மேலோட்டமாகவே படித்து கடந்து இருக்கின்றேன்.

பல மொழி கற்க வேண்டும் அதன் பயனாக நாம் பிறமொழியின் கலாச்சாரம் , தொன்மை, வரலாற்றை அறிய முடியும் என்பதோடு அல்லாமல் , நம் மொழியின் தொன்மையை, பழமையை, புதுமையை, வரலாற்றை, நம் கலாச்சாரத்தை அங்கு எடுத்து சொல்ல முடியும் என்று நினைப்பதாலும் பிற மொழியினை படிக்க கூடாது என்ற கருத்தியலை தவிர்த்து வந்தேன். பிற மொழியினைப் படிப்பது என்பது திணிப்பு என்று திரிப்பதாகவே நினைத்து வந்தேன்.

என் எண்ணம் ,என் சிந்தனை தவறானது என்பதை , ரோட்டில் பொங்கல் கடை வைத்துள்ள நபர் தவிடு பொடி ஆக்கிவிட்டார். வழக்கம் போல் ஏ.ஆர்.ஹாஸ்பிட்டல்(தபால்தந்தி நகர்) அருகில் உள்ள சந்தில் பொங்கல் கடையில் இட்டலி சாப்பிட அமர்ந்தேன். எனக்கான உணவினை சொல்லி, காத்திருந்தேன். எனக்கு எதிர்புறம் இருக்கையில் எல்.கே.ஜி படிக்கும் மாணவனை அவனின் தாயார் அமரச் செய்து , அவனுக்கும் இட்டலி ஆர்டர் செய்தார்.

கடை வைத்திருப்பவர் சௌராஷ்டிரா மொழி பேசுபவர். என் எதிரில் அமர்ந்த பெண் மணியும் அதே மொழியினை சேர்ந்தவர். ஆனால் அவர் தமிழில் தான் பேசினார். ஆனால், கடைக்காரர் மனைவி சௌராஷ்டிரா மொழியில் அவரிடம் பேசினார். நான் எப்போது சென்றாலும் அங்கு தமிழிலேயே பேசுவேன் . அவர்களும் என்னிடம் தமிழில் பேசிவந்தனர்.
இங்கு ஒன்றை முக்கியமாக சொல்லியாக வேண்டும் எனக்கு சரளமாக சௌராஷ்டிரா பேசத் தெரியும்.

அப்பெண்மணி என்னைப்பார்த்தார். பின் மகனிடம் சௌராஷ்டிரா மொழியில் பேசினார்.

தம்பி மழை வருகின்றது. வேகமாக சாப்பிடு. இல்லை என்றால் எதிர் வீட்டில் உள்ள கிழவி நம்மை பிடித்து கொள்ளும் என்றார். ( ரோட்டின் அந்தபுறம் எதிரில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள் இருந்தன) .சிறிதளவு பிய்த்த இட்டலியை சாப்பிட வெகு நேரம் ஆக்கினான்.

அவன் சாப்பிட்டு கொண்டே என்னைப்பார்த்தான். அருகில் இருந்த டம்பளர் நீர் கொட்ட போனது. நான் பதறி அவனிடம் பனி லுச்சன் சாரஸ் என்றேன். (தண்ணீர் கொட்டப்போகிறது) அவன் சிரித்து கொண்டே கைகளை தள்ளி வைத்தான். இப்போது அவனின் அம்மா தம்பி தண்ணியை தள்ளி வை என்றார். அவன் அவனது அம்மாவை பார்த்தான்.

நான் அவனிடம் சௌராஷ்டிரா மொழியில் மழை வருகின்றது (திறந்த வெளி ரோட்டுக்கடை ) வேகமாக சாப்பிடு நனைந்துவிடுவாய் என்றேன். இப்படியாக அவன் மொழியில் அவனிடம் பேசினேன்.

கடைக்கார பெண்மணி அப்போது, “யார் சௌராஷ்டிரா என தெரியவில்லை. யாரிடமும் பேசினாலும் தப்பாகி விடுமோ என பேசுவதில்லை “ என என்னிடம் தெரிவித்தார். (தமிழில் )

எதிரில் உள்ள பெண்மணி இப்போது சௌராஷ்டிராவில் பேசினார்.
“நம்(சௌராஷ்டிரா மக்கள் ) மத்தியில் தமிழ் மொழி பேசுபவர்கள் இருக்கும் போது நம் மொழியை பேசினால், ஏதோ அவர்களுக்கு தெரியாமல் ரகசியம் பேசுவதாக நினைக்கின்றார்கள். மேலும் புரோக்கர்( இடம், பொண், பொருள் ) தொழில் செய்வதால் நாம் அவர்களுக்கு தெரியாமல் , கமிசன் வைக்க பார்க்கின்றோம் என நினைக்கின்றார்கள் என்றார்.

உடனே கடைக்காரர், “ ஏன் நாம் நம் மொழியினை பேசுவதை தவிர்க்க வேண்டும். இப்படியே நீங்கள் பேசுவதை தவிர்ப்பதால் நம் மொழி அழிந்து வருகின்றது. நாம் நம் தாய்மொழியை பிறருக்காக பேசாமல் இருந்தால் நாளை நம் சந்ததியினர் சௌராஷ்டிரா என்ற மொழி இருந்ததா என கேட்க நேரிடும். பேசினால் தான் ஒரு மொழி வளரும். தமிழ் பேசினால் தமிழ் தான் வளரும். “ என சௌராஷ்டிரா மொழியில் அவரிடம் பேசினார்.

அதற்கு அப்பெண்மணி, “ இவன் படிக்கும் பள்ளியில் உள்ள மிஸ், இவனிடம் தமிழில் பேசுங்கள். அப்பதான் அவன் என்ன சொல்றான் என்பது எங்களுக்கு புரியும். அவன் சொல்வது எங்களுக்கு புரிய மாட்டேன் கிறது என்கிறார்கள் . அதனாலே இவனிடம் வீட்டில் கூட பல சமயங்களில் தமிழ் பேசுகின்றேன். என்ன செய்ய ? ” என அவரிடம் சௌராஷ்டிரா மொழியில் பேசினார்.

“இப்படியே நீங்கள் கல்விக்காக, தொழிலுக்காக , என ஒவ்வொன்றிற்காக பேசுவதை தவிர்த்தால், நம் மொழி நாளடைவில் இல்லாமல் ஆகிவிடும். யார் சௌராஷ்டிரா என அறியாமல் செய்து விடப்போகின்றீகள். அதனால் எப்பவும் நம் ஜனங்கள் இருக்கும் போது நம் தாய் மொழியிலேயே பேசுங்கள். அது நம் மொழி அழிவதை தவிர்க்கும் “ என்றார். (சௌராஷ்டிரா மொழியில்)

“இப்ப பாருங்க. இவர் சௌராஷ்டிரா என்பது இவர் பேசும்போது தான் தெரிகிறது. (இதனை அப்பெண்மணி சொல்லும் போது 6ம் வகுப்பில் வெளிநாடு கடற்பயணம் செய்த கணவன் நாகர் இனத்தவரிடம் இருந்து தப்பி வந்த கதை தான் நினைவில் வந்தது. ஏனெனில் நான் கேட்காமலே சாம்பர் சட்டி கூடுதலாக வைத்துக்கொண்டே பேசினார்). அன்று அப்படி தான் நான் கருப்பாக ஒருவர் வந்தார். அவரிடம் நான் தமிழில் பேசினேன். என்னை எல்லாம் பார்த்தால் சௌராஷ்டிரா மாதிரி தெரியலைய்யா என கோபப்பட்டார். இப்படி நம் மொழி மீது பற்று கொண்டவர்கள் அதிகம் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் இல்லை என்றால் சௌராஷ்டிரா மொழி அழிந்து தான் போகும். ஆகவே பள்ளியில் சொல்கிறார்கள் என தமிழில் பேசினால் உங்கள் மகன் நம் மொழியினை மறந்துவிடுவான் “ என்றார். (சௌராஷ்டிராவில் பேசினார்)

“என்ன செய்ய, நாம் தமிழை நம் பிள்ளைகளுக்கு கற்று தரவேண்டும் . அவர்களும் படித்து நான்கு எழுத்து தெரியவேண்டும் அல்லவா” என்றார் அப்பையனின் தாயார். (சௌராஷ்டிராவில்)

“ இப்படிவேறு மொழி படிக்கின்றேன் என நம் மொழியினை மறந்து போகின்றீர்கள். இப்பொழுத்தெல்லாம் சௌராஷ்டிரா பேசுவதை தவிர்க்கின்றீர்கள் . தமிழில் பேசுகிறீர்கள் இது தமிழ் மொழி திணிப்பு மாதிரி படுகிறது “ என்றார்.

“நாம் பிற மொழி பேசுவது அதனை படிப்பது எப்படி அம்மொழியின் திணிப்பாக முடியும் ? “ என கேள்வி எழுப்பினேன். (சௌராஷ்டிராவில்)

“ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாம் இந்த பத்து நிமிடத்தில் தமிழில் மட்டும் பேசினால், நமக்கு சௌராஷ்டிரா மொழி குறித்த சிந்தனை அறிவு மறைந்து போகும். நாம் வார்த்தைகளை பேசுவதற்கு தமிழில் தான் தேடுவோம். அப்போது நம் மொழிகுறித்த அறிவு இங்கு பயன்படாது. ஆரம்பத்தில் சமமான வார்த்தைகளை நம் தாய்மொழியில் தேடுவோம். நாளடைவில் அதற்கு அவசியம் ஏற்பாடாது. நம் தாய்மொழி சிந்தனை அறவே மற்ந்து போகும். இது ஒருவிதத்தில் மறைமுகமான திணிப்பு தான்” என்றார். (சௌராஷ்டிராவில்)

“ஆமாம். என் மகன் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசுவதால்,வீட்டிலும் சில பொருட்களை தமிழிலேயே கேட்கின்றான். இது நம் மொழி அழிவுக்கு காரணமாகவும் படுகின்றது. திணிப்புமாகி விடுகின்றது ” என்றார் அப்பையனின் பெண்மணி.

“அதற்காக தமிழ் படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. எப்போதும் நம் ஆட்கள் மத்தியில் வீட்டில் தாய்மொழியிலேயே பேசவேண்டும் “ என்றார். (சௌராஷ்டிராவில்)
அதற்குள் மழை வலுத்துவிட்டது. நான் சாப்பிட்டதற்கான தொகையை கொடுத்து வேகமாக வண்டியை எடுத்தேன்.

ஒருமொழியினை படிக்க சொல்வது. அதனை குறித்து பேசுவதை பிற மொழியினை மறக்க செய்யும் என்பது இப்போது உண்மை என புரிய வருகின்றது. ஆகவே நாம் எந்த இடத்தில் இருந்தாலும், நம் தாய்மொழி தமிழில் பேசுவோம். பிற மொழி கற்றுக்கொண்டாலும் பேசுவதை எழுதுவதை விட்டுவிட வேண்டாம்.

நம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது. நமக்கு கற்றுக் கொடுக்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதில் சிறியவர் பெரியவர், பெட்டிக்கடைக்காரர், தள்ளுவண்டி காரர், விற்பன்னர், மருத்துவர் , ஆசிரியர், பேராசிரியர் என பேதம் இல்லை.

கடைசியில் அந்த சிறுவனிடம், “ மழை வருகின்றது ,வீட்டிற்கு வேகமாக செல் . நனைந்துவிடாதே “ என தமிழில் கூறி வந்தேன்.

மதுரை சரவணன்.

6 comments:

Unknown said...

அவர் சொல்வது சரிதான் இந்த தலைமுறை தாய் மொழியில் பேசாவிட்டால் ,அடுத்த சில தலைமுறைகள் கலப்பட மொழியில் பேசும்!அடுத்தடுத்து வரும் தலைமுறை தாய் மொழியையே மறந்து விடும் !

'பரிவை' சே.குமார் said...

கடைக்காரரின் கூற்று ஏற்புடையதே...
பிற மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது நம் மொழி அடுத்த தலைமுறைக்கு சென்று சேராது...
ஆனால் தமிழ்நாட்டில் கடை வைத்துக் கொண்டு தமிழைப் பேசினால் அது மறைமுக திணிப்பு என்று சொல்பவர். எதற்கு இங்கு பிழைக்க வர வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை...

'பசி’பரமசிவம் said...

எதார்த்தம்

Yarlpavanan said...


"நாம் எந்த இடத்தில் இருந்தாலும், நம் தாய்மொழி தமிழில் பேசுவோம். பிற மொழி கற்றுக்கொண்டாலும் பேசுவதை எழுதுவதை விட்டுவிட வேண்டாம்." என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.
தொடருங்கள்

Unknown said...

Best Sourashtramatrimony in tamilnadu visit: sourashtramatrimony

Best Sourashtramatrimony in tamilnadu visit: செளராஷ்டிரா தி௫மண தகவல் மையம்

kodai Matrimony said...

Ariyalur matrimony Karur matrimony Nagappattinam matrimony Perambalur matrimony Pudukkottai matrimony Thanjavur Matrimony Tiruchirappalli Tiruvarur Matrimony Dharmapuri Matrimony Coimbatore Matrimony Erode Matrimony Krishnagiri Matrimony Namakkal Matrimony The Nilgiris Matrimony Salem Matrimony Tiruppur Matrimony Dindigul Matrimony Kanyakumari Matrimony Madurai Matrimony Ramanathapuram Matrimony Sivagangai Matrimony Theni Matrimony Thoothukudi Matrimony Tirunelveli Matrimony Virudhunagar Matrimony Tenkasi Matrimony Chennai Matrimony Cuddalore Matrimony Kanchipuram Matrimony Chengalpattu Matrimony Tiruvallur Matrimony Tiruvannamalai Matrimony Vellore Matrimony Viluppuram Matrimony Kallakurichi Matrimony Ranipet Matrimony Thirupattur Matrimony

Post a Comment