Tuesday, October 21, 2014

கசக்கிறது தீபாவளி.!


மண் அதிர
புகை கக்கி 
வானத்தில் தீப்பிழம்பு தெரிய
காதுகளை செவிடாக்குமளவுக்கு
ஓசை ...
வெடிக்கிறார்கள் என்கிறார்கள்.
இதயம் பதறுகிறது
இப்படியாக..
இரத்தம் சிதறி
மண்டை பிளந்து
மூளை வெளிவர
சிதறிய இரத்தம்
முகத்தில் தெறித்த மாத்திரம்
அதிர்ச்சியில் மரணம்
நூறாக ..
வெடித்து சிதறிய பிண்டம்
ஆயிரமாக
எல்லாம் கண்முன் கோரக்காட்சியாக கிடக்க
பித்த நிலையில்
மற்றுமோர் பத்தாயிரம்
இதயம் பதறுகிறது
இப்படியாக இருக்ககூடாது..
வெடிப்பது தவறுதான்
தீபாவளியாக இருந்தாலும்
நிலத்தை இழந்தவன்
உடல் இன்னும் அதிர்ச்சியுற்று
அதிர்வுறுகிறதே...!
மதுரை சரவணன்.

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
உண்மையான வரிகள்....இரசித்தேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருவக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மோகன்ஜி said...

நல்லதோர் சிந்தனை. நலம்தானே?

Post a Comment