Tuesday, October 8, 2013

பேய்கள் ஜாக்கிரதை

வயல்களில்
வெள்ளைப் பேய்கள்
கால் ஊன்றி ......
இவைகளுக்கு வழிகாட்டியப்படி
மேலும் சில கலர் பேய்கள்
மஞ்சள் சிவப்பு நிறங்களில்
பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது
இரவு பகல் பாராமல்
நகரமையமாதலில்
பேராசை மனிதர்களை..
வயல்கள் மட்டும் அழியவில்லை
நம் சந்ததிக்கான
உணவு உற்பத்தியும் சேர்ந்தே…..
உணவுக்காக மண்ணை
அள்ளித் தீண்ணும் காலம் வெகுவிரைவில்….! 



2 comments:

Anonymous said...

வணக்கம்
நீங்கள் சொல்வது உண்மைதான் கவிதையில் சொல்லிய விதம் மிக அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... உண்மை...

Post a Comment