Thursday, September 5, 2013

மார்க் போடு ...! அப்புறம் போன் போடு...!


அட எவ்வளவு நாட்கள் தான்  இவர்கள் நமக்கு மார்க் போடுவது ? நாமும் இவர்களுக்கு மார்க் போடும் நாள் வந்து விட்டது. அட இன்னைக்கு தான் ஆசிரியர் தினம். நீங்கள் படித்த ஆசிரியருக்கு மார்க் போட வேண்டாமா? அல்லது அவர் சிறந்த அல்லது நல் ஆசிரியரா என நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டாமா? பேனாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கீழ் கண்ட வினாக்களை படியுங்கள்.

    1.   என் ஆசிரியர் தினமும் சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்பார்.
    2.   தினமும் கதைகள் கூறுவார்.
    3.   கடிந்து பேசியதில்லை. எப்போதாவது கடிந்து பேசி நாங்கள்                 அழுதோமென்றால் , அதற்காக கண் கலங்குவார்.
    4.    தன் வகுப்பறையில் பிரம்பு வைத்திருக்க மாட்டார்.
    5.   வகுப்பறையில் எங்களை விளையாட வைப்பார். சில சமயம்             மைதானத்திற்கு அழைத்து சென்று விளையாட வைப்பார்.                 எங்களுடன்    விளையாடுவார்.
     6.   அவர் வாராத நாட்கள் நகர்வது சிரமம்.  கடினமானதாகவே அந்நாளை     உணர்கிறோம்.
     7.   வகுப்பறையில் கற்பித்தல் உபகரணம் இன்றி பாடம் நடத்தியதில்லை.
     8.   களப்பயணம் அழைத்து செல்லும் போது எங்களை விட்டு அவர்           விலகியதும் இல்லை. நாங்கள் அவரை விட்டு விலகி சென்றதும்         இல்லை.
     9.   பிற ஆசிரியர்கள் அடித்தால் , காரணம் தெரிந்து அந்த ஆசிரியரிடம்       உங்களுக்கு ஆதரவாக பேசி, அடிக்க வேண்டாம் என எடுத்து             கூறுவார்.
     10. மாணவர்கள் உடல்நலக்குறைவால் விடுப்பு எடுத்தால், வீட்டிற்கு          வந்து நலம் விசாரித்து செல்வார்.
     11. வகுப்பில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வார்.
     12. பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார். தலைமையாசிரியர்      தவறான முடிவு எடுத்திருந்தால்,அத்தவற்றை சுட்டிக்காட்டுவார்.
     13. பாட குறிப்பேடுகளை அன்றே திருத்தம் செய்து தருவார். அன்றைய        வீட்டுப்பாடத்தை அன்றே கையொப்பமிட்டு தருவார்.
    14.  2,4 கோடு நோட்டுக்களில் தானே எழுதி தருவார். எழுத்தை திருத்தம்     செய்ய அறிவுரை கூறுவார்.
    15.  எங்கள் பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் அவரை பிடிக்கும் .
    16. வகுப்பறையில் செல் போன் பேசியதில்லை. அல்லது செல்போன்         பள்ளிக்கு கொண்டு வர மாட்டார்.
   17. மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாவிட்டால், துரத்தி துரத்தி பிரம்பால்     அடிக்கமாட்டார். முட்டிப் போட்டு வகுப்புக்கு வெளியில் வீட்டுப்பாடம்     செய்ய சொல்ல மாட்டார்.
    18. மாதம் இருமுறை பெற்றோர்களை அழைத்து பேசுவார். மாணவர்         முன்னேற்றத்திற்கு பாடுபடுவார்.
    19. இவர் வகுப்பு எடுப்பதை எல்லா மாணவர்களும் விரும்புவர்.
  20.கரும்பலகையில் எங்களை எழுதுவற்கு அனுமதிப்பார். ஆனால்,           கேள்வி பதில் போன்றவற்றை அவரே எழுதிப்போட்டு சொல்லிக்         கொடுப்பார்.

சரி தாயாராகுங்கள் ! இதில் எத்தனை சரி என பார்க்கவும். 15க்கு மேல் வாங்கினால் உண்மையில் அவர் சிறந்த ஆசிரியர்.ஆசிரிய பணியை நேசிப்பவர்.  10-15 மார்க் வாங்கினால் சுமாரான ஆசிரியர். 5- 10 மதிப்பெண் எடுத்தால் பித்தமில்லாமல் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர். 0-5 உண்மையிலே ஆசிரியராக வேலைப்பார்க்க தகுதியற்றவரிடம் படித்துள்ளோம் .
மார்க் போட்டால் மட்டும் போதாது, போனும் போடணும் சிறந்த ஆசிரியருக்கு !

எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்..  

4 comments:

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் சரவணன் சார்...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்...
தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
அதற்கான சுட்டி இதோ....

http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html

நன்றி.

நட்புடன்

மனசு சே.குமார்

திண்டுக்கல் தனபாலன் said...

மார்க் போட்டு பார்த்தேன்... எனது ஆசிரியர்கள் எல்லாம் மிகச் சிறந்த ஆசிரியர்கள்... நன்றி...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

ராஜி said...

நானும் மார்க் போட்டிருக்கேன்

G.M Balasubramaniam said...

தொலைக் காட்சியில் வரும் 7c வகுப்பு ஆசிரியரா.?

Post a Comment