Wednesday, September 18, 2013

பிழையின்றி தொடங்கும் பகல்

தென்றல் தழுவி
என்னை காமுறுகையில்
கதிரவன் சூட்டை மூட்டி
காமத்தை பெருக்கினான்

எங்கிருந்தோ வந்த மணம்
அவளின் நினைவை கிள்ளி
அள்ளிச் சென்றது
திடுக்கிட்டு எழுந்த போது
எப்போதும் போல் கோப்புக்கள்
தேங்கியிருந்தன
அவளின் நினைவுகளை போன்று
என்னை சுற்றி

எப்போதும் போல்
கடந்து சென்றது பகல்

கனவுகளின் களைப்பில்
கண்கள் மூடிய
என்னை மீண்டும் தழுவியது
அவள் குரல்
அலைக்கற்றையின் உதவியுடனே

இரவில்
என் படுக்கையறையில்
உருவாக்கிய தோட்டங்கள்
விடியலில் காணாமல் போகின்றன
ஆப்பிள் மரஙகள்
ஆப்பிள்கள்
உண்ணப்படாமல்.....

எந்த பிழையுமின்றி
தொடங்குகிறது பகல்


  

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

மனம் கவர்ந்த கவிதை....!

Unknown said...

தென்றல் தழுவி
என்னை காமுறுகையில்
கதிரவன் சூட்டை மூட்டி
காமத்தை பெருக்கினான்

கற்பனை அருமை! கவிதையும் நன்று!

வெற்றிவேல் said...

அழகான கவிதை...

Post a Comment