Wednesday, August 28, 2013

நினைவுகளின் குளிர்காலம்

நினைவுகளின் குளிர்காலம்

இன்று இரவு எப்போதையும் விட
அதிக குளிராக யிருந்தது

உன் நினைவுகள் நிரம்பிய
போர்வையால் முடிக்கொண்டேன்.

அனல் காக்கும் வார்த்தைகள்
உஷ்ணத்தை ஏற்படுத்திடவே
போர்வை நீக்கி
உறங்க முற்படுகிறேன்

சுழலும் மின்விசிறி
உருவாக்கும் காற்று
உடலை தீண்டுகிறது உன்னைப்போல்
இப்போது
குளிரவுமில்லை
வேர்க்கவுமில்லை

ஆனால்
மின்விசிறியின்
சத்தம் மட்டும்
தொடர்ந்து கேட்கிறது
இந்த குளிர்கால இரவில்
உன் நினைவுகளில்
உறைந்து

விழித்திருக்கின்றேன்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

குளிர் காலம் என்றும் இனிமையானது

மகேந்திரன் said...

சில்லென்ற நினைவுகள்...

Post a Comment