Wednesday, March 20, 2013

புகார்களும் நடவடிக்கையும் புஸ்வானமும்


மாலை அண்ணா நகர் பகுதியில் என் நண்பர்  தனியார் உதவி பெறும் பள்ளியின் தாளாருமான அவரை சந்தித்து உரையாடினேன். அப்போது அவர் காலையில் நடந்த கூத்தை சொல்ல ஆரம்பித்தார். பேஸ்புக் என்று காதில் விழவே , எங்கள் அருகில் டீ குடித்துக் கொண்டிருந்த மருத்துவ துறையை சார்ந்த நண்பர் தானாகவே ஆஜராகி தன் ஆதங்கத்தை கொட்ட ஆரம்பித்தார்.

எதாவது ஒரு பேக் இமெயில் ஐடி வைத்து கொண்டு வாய்க்கு வந்ததை அரைகுறை ஆங்கிலத்தில் புலம்பி வைக்கிறார்கள். சில சமயம் தமிழில் அடிக்கிறார்கள். கலெக்டர் நல்ல எண்ணத்துடன் ஆரம்பித்த ஒன்றை பணி செய்ய விடாமல் தடுக்கும் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் என ஆதங்கத்துடன் சொல்ல ஆரம்பித்தார். நான் மருத்துவ துறையில் மருந்து கொடுக்கும் அதிகாரி . சரியான மருந்தை கொடுக்க வேண்டும் தவறினால் உயிர் பலி யாகி விடும் ஆபாயம் உள்ளது . ஆகவே கண்டித்து வேலை வாங்க வேண்டியுள்ளது. அதனை குறையாக தவறாக பேசுகிறேன் எனவும் , மிகவும் கண்டித்து வேலையை வாங்குவதால் மன உளைச்சலுக்கு ஆளாக நேருகிறது என குறையாக பேஸ்புக் கில் போட்டவுடன் எங்கள் டிடிக்கு கலெக்டர் போன் செய்து விசாரிக்கிறார். பின்பு எங்கள் உயர் அதிகாரியும் மறுப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதனால் அவரும் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதே போல் நாம் அவர்கள் குறைகளை பேஸ்புக்கில் பதிவு செய்தால் யாரும் வேலை பார்க்க முடியாது 

 உண்மையாக வேலைபார்ப்பவர்களும் சோர்ந்து போய்விட நேரிடும். புகார்கள் , புகார்களுக்கு உடனடி நடவடிக்கை .
புகார்கள் அதிகப்படியான எண்ணிக்கை . அதிகப்படியான நடவடிக்கை என்பது மனதுக்கு சந்தோசம் கொடுத்தாலும், உண்மை தவறினால் தண்டனை , உண்மையாக இருந்தால் தண்டனை என இருந்தால் , பேஸ் புக் புகார் மனு என்பது நல்ல பயனுள்ள விசயமாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றார். அவர் பக்கமும் நியாயம் உள்ளதாகவே எனக்கு படுகிறது.

    டெங்கு காய்ச்சலில் போது உண்மையாகவே மெடிக்கல் லீவு போட்டு , அதன் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க நினைத்த மருத்துவரை கலெக்டர் பணி நீக்கம் செய்தார். ஆனால்  அந்த மருத்துவர் இப்போது அதே ஊரில் மருத்துவராக பணிபுரிகிறார். எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை. இதுவும் நடக்கிறது.  வாழ்நாள் முழுவதும் கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு என உழைத்து , எதார்த்தமாக ஒரு நாள் அஜாக்கிரதையாக இருப்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஆள் பழக்கமும் தெரியாது. யாரை பார்பது என்பதும் அறியாத காரணத்தால் சிக்கலில் இருந்து விடுபட தெரியாமல் தண்டனைக்கு ஆளாகிறார்கள். அப்படிப் பட்ட அப்பாவிகளை வதைக்க உருவானது தான் இந்த பேஸ்புக் புகார் பெட்டி என கூடுதல் தகவலையும் தெளித்து சென்றார்;

பள்ளி தாளாளரும் பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் , தவறினால் தன் நிர்வாகத்திலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றி விடுவேன் என எச்சரித்துள்ளார். வேறு பள்ளி என்பது மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆகவே வேலைக்கு பயந்து , பள்ளியில் தன்னை கொடுமை படுத்துகிறார்கள் . அமர ஆசனம் தருவதில்லை. பணம் வசூல் செய்கின்றனர் என பெங்களூரில் இருக்கும் தன் மகன் மூலம் புகார் அளித்துள்ளார். ஆசிரியர் பணி என்பது காலப்போக்கில்  தொழில் என உருவாகியுள்ளது வருத்தமளிக்கிறது. அன்று அதிகப்படியான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்பறை என்பதை ஆசிரியர்கள் சந்தோசமாக நினைப்பார்கள். தனக்கு கிடைத்த கொளரவமாக நினைப்பார்கள் இன்று அதிக்கப்படியான எண்ணிக்கை என்பது பணி சுமை யாகி விட்டது வெட்கக் கேடு. இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது மாத ஊதியத்திற்கு வருவாய் ஈட்டும் அரசு ஊத்தியோகமாக நினைக்கும் மனநிலையில் தான்  ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என இப்படிப்பட்ட குறைகளைக் கேட்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. 

வெகுஜனமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, பொங்கல் போனஸ், ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு போன்றவற்றை பார்த்து புலம்புவதை அங்கிகரிக்க தோன்றுகிறது.  பணியாற்றும் நிர்வாகத்தினை குறை கூறுவதும் , அதனை புகாராக பதிவு செய்வதும் எப்படிப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது. உண்ட வீட்டிற்கு துரோகம் செய்வதற்கு சமம். அதை விட வேடிக்கை என்னவென்றால் புலி தானாக எலி வலையில் சிக்குவதைப் போல , புகார் அளித்த ஆசிரியர் முதலாவது ஆளாக வந்து நான் இப்பள்ளியில் சந்தோசமாக பணியாற்றுகிறேன் என எழுதி கொடுத்து தன் ராஜ விசுவாசத்தை தெரிவித்துள்ளார் என்பது தான்.

  புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மாவட்ட நிர்வாகமே , அது சார்ந்த துறையின் உயர் அதிகாரிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளும் போது துணிவின்றி, தங்கள் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடன் எடுத்துச் சொல்லி, தங்கள் குறையை போக்கிக் கொள்ள பயப்படுவதேன். எதற்காக இந்த புகார்.? எதற்காக அதிகாரிகள் தங்களின் அனைத்துப் பணியினையும் தள்ளி வைத்து , மனுவுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? நடவடிக்கைக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு நல்கி அக்குறையினை களைய முயற்சித்த போதும் , நேரடி விசாரணையின் போது , மனுவுக்கு புறம்பாக பதில் தருவதேன்?  இதனால் அதிகாரிகளும் சலிப்பு தட்டிவிடுகிறது. பல உண்மையான மனுக்களும் புறம்தள்ளப்படுகின்றன. யாரை மிரட்டுவதற்காக இவை மேற்கொள்ளப்படுகின்றன? சிறிய அதிர்வு எல்லாவற்றையும் சரி செய்து விடுமா? புகார்தாரர்களே சிந்தியுங்கள். சிறந்த பேஸ்புக் திட்டத்தை ;உங்களின் மிரட்டலுக்கு பயன்படுத்தாதீர்கள்.


   போலி புகார்களை தவிர்த்து அதிகாரிகளை நியாயமான முறையில் பணியாற்ற விடுங்கள். நல்ல திட்டத்தை சிறப்பாக செயல்பட உண்மையான ஆதாரங்களுடன் , தைரியமாக அநியாங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள். உங்கள் பக்க நியாயங்களை எப்போதும் எந்த சூழலிலும் எடுத்துச் சொல்ல பின்வாங்கி விடாதீர்கள். இது நமக்கான திட்டம் , இதை நாமே பாழ் படுத்தி விடக்கூடாது. இப்படிப்பட்ட மாவட்ட அதிகாரிகள் , மாவட்ட கலெக்டர் கிடைப்பது அரிது . மீனாட்சி கிருபையால் நமக்கு தொடர்ந்து நல்ல அதிகார்கள் கிடைத்திருப்பதை தவறவிட்டு விடக்கூடாது.  

3 comments:

G.M Balasubramaniam said...


உங்கள்பதிவில் நீங்கள் எழுதுவது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா.?

'பரிவை' சே.குமார் said...

போலி புகார்களை தவிர்த்து அதிகாரிகளை நியாயமான முறையில் பணியாற்ற விடுங்கள். நல்ல திட்டத்தை சிறப்பாக செயல்பட உண்மையான ஆதாரங்களுடன் , தைரியமாக அநியாங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள். உங்கள் பக்க நியாயங்களை எப்போதும் எந்த சூழலிலும் எடுத்துச் சொல்ல பின்வாங்கி விடாதீர்கள். இது நமக்கான திட்டம் , இதை நாமே பாழ் படுத்தி விடக்கூடாது. இப்படிப்பட்ட மாவட்ட அதிகாரிகள் , மாவட்ட கலெக்டர் கிடைப்பது அரிது . மீனாட்சி கிருபையால் நமக்கு தொடர்ந்து நல்ல அதிகார்கள் கிடைத்திருப்பதை தவறவிட்டு விடக்கூடாது.

இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா?

renesh said...

புலியை புலி எனவும், எலியை எலி எனவும் ஒத்துக் கொண்டதெ பெரிய விஷயம் தான்! என்ன கருத்தை சொல்ல? புலி வேலை பார்ப்பது த்னியார் நிறுவனம் அல்லவா? வேலை கொடுத்திருப்பது எலியாக இருந்தாலும் ஆண் எலியல்லவா? இப்படித் தான் குடும்ப நலன் கருதியும், மரியாதைக்கு பயந்தும், நிறைய புலிகள் zoo வில் அடைபட்டிருகின்ற்ன. மீனாட்சி கிருபையால் நல்ல உயர் அதிகாரிகள் மட்டுமெ கிடைததுள்ளனர்.அதே கடவுள் கிருபையால் நேரடி எலிகளும் கிடைகட்டும்.அப்புறம் பாருங்கள்! புகார்களையும், நடவடிககைகளையும், வானவெடிகளையும்!

Post a Comment