Wednesday, December 5, 2012

அஇஅதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற டெங்கு ஒழிப்பு பிரச்சாரம்

    எங்கள் பள்ளியை சேர்ந்த இருபது மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பின்பு , மாலை 4.40லிருந்து தொடங்கி மாலை ஆறு முப்பது அல்லது இருட்டும் வரை தெருமுனைப் பிரச்சாரம் மூலம்  டெங்கு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கள் முதல் இச்செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 








    தினமும் மக்கள் கூடும் இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நோட்டீஸ்களை வழங்கி , நாடகம் நடத்தப்போகிறோம் வாருங்கள் என அழைத்து, ஆடல் , பாடல் மூலம் மக்களை ஒருங்கிணைத்து ,  நாடகம், வில்லுப்பாட்டு, ஆடல் , பாடல் மூலம் பொது மக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியை மேற்கொள்கின்றோம். இப்பணிக்கு பங்குப் பெறும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ஆதரவு வெகுவாக கிடைத்துள்ளது. மாணவர்களும்  பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் மக்கள் பணியினை மேற்கொள்வது மகிழ்ச்சி தருகிறது என ஆர்வத்துடன் கூறுவது மதுரை முழுவதும் இப்பிரச்சாரத்தை கொண்டு செல்ல தூண்டுகிறது. 





     பள்ளி எஸ்.எம்.சி குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர் திரு. வி.சுரேந்திரன் (எ) பாபு தலைமையில் மதுரை 53வது வார்டில் இன்று 5-12-2012 டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  









     திரு. வி.சுரேந்திரன் பாபு அதிமுக 53வது வார்டு பிரதிநிதி என்பதால் மதுரை கிழக்கு மண்டல தலைவர் திரு ராஜபாண்டி அவர்களை அழைத்து தெருமுனைப் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்தார். 53 வது வார்டில் தாமரை நகர் சந்திப்பிலும், பங்கஜம் 1 வது தெரு முனையிலும், பங்கஜம் காலனி 2வது தெருவிலும், ஏ.ஏ. ரோடு பிள்ளையார் கோயில் அருகிலும் மாணவர்கள் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டனர். அதுசமயம்      மதுரை கிழக்கு மண்டல தலைவர் திரு ராஜபாண்டியன், திரு. வே.சுரேந்திரன் என்ற பாபு , மதுரை 53வது வார்டு அஇஅதிமுக பிரதிநிதி, திரு .பார்த்தசாரதி பாகச் செயலாலர் மற்றும் திரு. வள்ளி நாகலிங்கம் அஇஅதிமுக கழக பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டு , மாணவர்களுக்கு துணையாக இருந்து, தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக செயல்பட உறுதி செய்தனர். 










  முடிவில் மாணவர்களுக்கு அஇஅதிமுக 53வது வட்ட பிரதிநிதி மற்றும் எங்கள் பள்ளியில் எஸ்.எம்.சி குழு கல்வியாளர் திரு வி.சுரேந்திரன்(எ) பாபு அவர்கள் உணவு வழங்கினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றனர். 

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - இரண்டு மணி நேரம் சமூகச் சேவை செய்யும் மாணவச் செல்வங்களூக்கு உணவு அளிக்க வேண்டியது நமது கடமை - ஏற்பாடு செய்யலாம் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment