Wednesday, December 12, 2012

அட நாங்களும் டிவியில வர்றோம்ல்ல…



“காலையில் போகிற என் மவள் .. எப்ப வருவான்னு  தெரியாது… மெடிக்கல் பீல்டுல இருக்கா…பசங்க அருமையா டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் செய்யிறாங்க….”

“ ரெம்ப நன்றிங்க… “

“நான் ரிட்டையர்டு … ஆசிரியர் , என் பெயர் பிச்சையம்மாள். என் மகள் ஒரு மருத்துவர் , இன்னொரு மக இதே மெடிக்கல் பீல்டுல.. இருக்கா.. அதிகாலையில டெங்கு ஒழிப்பு முகாம் …க்கு சென்றால் எப்ப வருங்கன்னு சொல்ல முடியாது….அவுங்க பார்த்தா சந்தோசப் படுவாங்க..கொசுவை வளர முடியாம தடுத்தாலே… போதும் நல்லா அருமையா சொன்னாங்க… பிள்ளைகளுக்கு என் சார்பா  நூறு ரூபாயை கொடுங்க..” மாணவர் குழு தலைவி சத்தியபிரியாவிடம் வழங்க சொன்னேன். “நன்றி.. ரெம்ப தாங்க்ஸ் ..எல்லாரும் பார்த்து ரசிச்சாங்களா” என்று பீட் பேக் வாங்கி கொண்டே பெற்றுக் கொண்டாள். இது நேற்று மனதை தொட்ட நிகழ்வு.







இப்படி பிள்ளைகளின் தெருமுனைப்பிரச்சாரத்தை பார்த்து வாழ்த்து சொல்லியவர்களும் , அவர்களுக்கு தங்கள் வீடுகளில் இருந்து , மிட்டாயை அன்பாக கொடுத்தவர்களும் அதிகம். ஆனால் நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் கொசு இல்லா மதுரை. கொசுவால் பரவும் வியாதிகள் அற்ற மதுரை. சுத்தமான வீதிகள் நிரம்பிய மதுரை. குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படும்படி அறிந்து , குப்பைகளை உரிய இடத்தில் இட அறிந்த மக்கள் நிறைந்த மதுரை என்பது தான் லட்சியம்.   எங்கள் லட்சியப் பயணம் இன்று இருபத்தி ஐந்து என்ற இலக்கை எட்டியது. அதன் பரிசாக டி.டி. பொதிகை டிவி ரிப்போட்டர் எங்கள் தெரு நாடகத்தை படம் பிடித்தார்கள். மேலும் நாளை காலை 8 மணி செய்தியில் பொதிகையில் ஒளிபரப்பாகும் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. 





மதுரை, கீழச்சந்தைப்பேட்டை பள்ளிவாசல் அருகில் எங்களின் இருபத்தி ஐந்தாவது தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கினோம். வழக்கம் போல நோட்டீஸ் வழங்கி  தொடங்கப்பட்டது. மக்கள் கூட ஆரம்பிக்க , எங்களின் கொசு ஒழிப்பு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிய  சிறிது நேரத்தில் எங்களை ஒருவர் படம் பிடிப்பதைப் பார்த்து ஆச்சரியம், வியப்பு , நெருங்கி சென்று பார்த்த போது டி.டி. பொதிகை  என அறிந்தோம். மிக உற்சாகமாக வழக்கம் போல அசத்த தொடங்கினர்.
“அட அவங்க அப்படி தாண்டா சொல்லுவானுக.. நாம எப்பவும் போல ரோட்டில பீய பேண்டு வைப்போண்ட…”
“அட..வீட்டில பாத்ரூம் கட்டி இருங்கடா… தெருவெல்லாம் ஈ, கொசு மொய்த்து வியாதிய பரப்புது.. அதான் ஸ்கூல்ல பாத்ரூம் கட்டி கொடுத்து இருக்காங்க… அங்க போய்யாவது இருங்கடா..” என்ற கிழவி வசனங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன.
”ஒழிக்க நினைத்தால் ஒழிக்கலாம்…”என்ற டெங்கு ஒழிப்பு பாடல்கள் மக்களை சிந்தனையை துண்டும் விதத்தில் அமைந்துள்ளது பாராட்டப்பட்டது.
பள்ளி வாசல் பகுதியில் இருந்து விடைப்பெற்று, குருவிக்காரன் சாலை இறக்கத்தில் மக்களை ஒன்று திரட்டினர். குழாய் அடியில் கூடியிருந்த பொது ஜனங்கள் வேடிக்கை பார்க்க.. கூட்டம் எதிர்பார்த்ததை விட அருமையாக கூடியது. உரக்க வில்லுப்பாடலை பாடியபடி அனைவரும் ஆச்சரியப்படும் படி கருத்துக்களை முன்வைத்தனர்.
“அட பசங்க சொல்லுறது ..வாஸ்தவம் தானே… அத புரிஞ்சு நடந்தாலே போதுமே..” என பொதுமக்கள் முணுமுணுக்க , மாணவர்கள் , “ சார், நீங்க நினைச்ச படி , நம் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்” என்றனர் மாணவர்கள். 




பின்பு துரைராஜ் மிச்சர் கடையில் அனைவருக்கும் சிலேபி வழங்கப்பட்டது. மாணவர்களில் செயல் வியக்க வைத்தது என்று வெகுவாக பாராட்டி சிலேபி ஜெயராஜ் வழங்கினார்.
எஸ்.எம்.சி உறுப்பினர் திரு. வி.சுரேந்திரன்(எ) பாபு மாணவர்களை பாதுகாப்பாக ரோட்டை கடக்க உதவிட.. அவரின் தலைமையில் பங்கஜம் காலனி 1 வது தெருவில் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். மாடி வீடுகளில் இருந்தும் , தங்கள் வீடுகளின் மெட்டை மாடிகளில் இருந்தும் , வீடுகளின் ஜன்னல்களில் நின்று கொண்டும் மாணவர்களின்  தெரு நாடகத்தை கண்டு களித்தனர். மாணவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பொது ஜன்ங்களில் ஒரு பெண்மணி மாணவர்களுக்கு மிட்டாய் வழங்கினார். 




எஸ்.எம்.சி உறுப்பினர் திரு. வி.சுரேந்திரன்(எ) பாபு மாணவர்களை பாதுகாப்பாக ரோட்டை கடக்க உதவிட.. அவரின் தலைமையில் பங்கஜம் காலனி 1 வது தெருவில் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். மாடி வீடுகளில் இருந்தும் , தங்கள் வீடுகளின் மெட்டை மாடிகளில் இருந்தும் , வீடுகளின் ஜன்னல்களில் நின்று கொண்டும் மாணவர்களின்  தெரு நாடகத்தை கண்டு களித்தனர். மாணவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பொது ஜன்ங்களில் ஒரு பெண்மணி மாணவர்களுக்கு மிட்டாய் வழங்கினார். 





அங்கிருந்து புறப்பட்ட மாணவர்கள், எஸ்.வி.எஸ் கல்யாண மகால் தெருவின் கடைசியில் மக்களை ஒன்று திரட்டி, மீண்டும் தெருமுனைப் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். அங்கும் தெருமுனை நாடகத்தையும் வில்லுப்பாட்டு, ஆடல் பாடல் என அனைத்து நிகழ்ச்சிகளையும்  சிறப்பாக முடிக்க .. இருட்ட ஆரம்பித்தது..
“சார்.. இன்னைக்கு நாம் முப்பதாவது தெருமுனை பிரச்சாரத்தை தொட்டுவிடுவோம் .. இன்னும் இரண்டு இடத்தில் தெருமுனை நாடகம் போடலாம்” என்ற மாணவிகளின் ஆர்வத்தை தடை செய்து.. திரு. ஆத்தியப்பன் ( எங்களின் தெருமுனை பிரச்சாரத்தை பார்த்து மாணவர்களுக்கு உணவு வழங்க தயார் என அன்புடன் உதவியவர்) அவர்களால் ஆறு மணிக்கே தயாரான சூடான இட்டிலிகளை சாப்பிடலாம் என மகாலட்சுமி அழைக்க, அருமையான சுவையான இட்டிலியை உண்ட பின்பு அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டோம். சுரேந்திரன் அவர்களும் , நானும் வண்டிகளில் மாணவர்களை பத்திரமாக அவர் அவர் வீடுகளில் விட்டப்பின்பு இன்றைய நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது.
நாளை அனுப்பானடி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெறும்.

  

4 comments:

மாதவன் said...

Good service. My wishes to you and your students.

Yoga.S. said...

நல்ல முயற்சி!மாணவ/மாணவி மணிகளின் உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது.தொடரட்டும் டெங்கு ஒழிப்புப் பணி!

jgmlanka said...

இந்தப் பதிவுக்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

Post a Comment