Tuesday, February 14, 2012

காதல் கவிதைகள்


அனல் கக்கும் இறுக்கம்
மூச்சு கூட விட முடியாத
நெருசலான பேருந்து பயணத்திலும்
உன் புன்முறுவல்
பெருமூச்சுவிடச் செய்கிறது…
-----------------------------------------------
மெல்லிய சிரிப்பு
பார்த்தும் பார்க்காததுமாக
செல்லும் சுடிதார்
நினைவு படுத்துகிறாள்
பறி கொடுத்த காதலையும்
காதலியையும்…


----------------------------------------------------
பகலில் பெய்யும் மழையை
பிடிக்காததற்கு
பலருக்கு
பல காரணம் இருக்கலாம்
எனக்கு ஒரே காரணம் தான்
உன்னை பார்க்க முடியாமல் போதும்
ஆதலால்….
 ----------------------------------------------------
ஹாரன் அடித்து செல்லும் ஆட்டோ
தடுமாறி செல்லும் ஆம்னி கார்
முந்தி செல்லும் மோட்டர் சைக்கிள்
மெதுவாக முன்னேறும் மிதி வண்டி
ஒழுங்குப்படுத்தும் காவலர்
என எதுவும் தெரியவில்லை
நீ வரும் வரை…!


5 comments:

ஹேமா said...

அழகான காதல் உணர்வுகள்.சிறப்புப் பதிவாக இருக்கிறது.காதல் வாழ்த்துகள் !

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
காதலர் தினத்திற்கு ஏற்றாற் போல கலக்கலான கவிதைகள்!
காதலின் உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கிறது.

இப் பதிவினை தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறேன்.

Marc said...

அருமை கவிதை வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

மென்மையான காதல் உணர்வுகள் அழகாக வார்த்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன. கவிதைகள் மனதில் பதிந்து ரசிக்க வைத்தன. அருமை.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - காதல் கவிதை அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment