Wednesday, June 1, 2011

அறுவடைக்கான கல்

இருள் அப்பிய வீடுகள்
இரவில் தூங்குகின்றன.
மேகங்களின் நகர்தலில்
நிலா ....
பயந்து ஒளிந்து
வெளிப்பட்டது
வயல்வெளியில்
எண்ணற்ற வெள்ளை பேய்களின்
நடமாட்டம் கண்டு...
நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டேயிருந்தன
இருளில் உறங்கும் மனிதனுக்கு
வீதிகள் எங்கும்
நாய்கள் தொடர்ந்து
குரைத்து எச்சரித்தன...
விதைக்கப்பட்ட கற்கள்
உன்னை அறுவடை செய்பவை.

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை நன்றாக உள்ளது.

//விதைக்கப்பட்ட கற்கள்
உன்னை அறுவடை செய்பவை.//

ஆஹா, எச்சரிக்கும் முத்திரை வரிகள்.

நிரூபன் said...

நாம் செய்யும் தீய செயல்கள் நம்மையே அச்சப்பட வைக்கும் என்பதனைக் கவிதையில் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Unknown said...

நிச்சயம் அச்சமூட்டும் நம்தீய செயல்...

புலவன் புலிகேசி said...

:)

G.M Balasubramaniam said...

யாரால் விதைக்கப் பட்ட கற்கள் , எப்போது விதைக்கப்பட்ட கற்கள், அவை ஏன் என்னை அறுவடை செய்ய வேண்டும் , கற்கள் என்று எதைக் கூறுகிறீர்கள் சரவணன் சொல்ல வருவது, புரிய வில்லை. தெளிவாகக் கூறுங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

புரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எச்சரிக்கை கவிதை

r.v.saravanan said...

நல்ல கவிதை

shanmugavel said...

//வயல்வெளியில்
எண்ணற்ற வெள்ளை பேய்களின்
நடமாட்டம் கண்டு...//

சிறப்பான கவிதை சரவணன்.

ஹேமா said...

நாங்கள் செய்யும் வினைகளை அறுக்கக் காத்திருக்கிறது காலம்.சொன்ன விதம் அழகு !

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

cheena (சீனா) said...

கவிதையிலே இறங்கியாச்சா சரவணன் - பலே பலே ! நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment