Friday, March 18, 2011

கார்டூன் சித்திரங்கள்


வயது குறைந்த
சிறுமியின் கற்றல்
கூண்டுக்குள்
சிறகுகள் வெட்டப்பட்ட
பறவையாய்
பற்ற இயலா விரல்களில்
சுண்ணக் கட்டிகள்
உதடுகளை வண்ணமாக்குகின்றன
வகுப்பறைச் சுவற்றில்
வரையப்பட்ட கார்டூன் சித்திரங்கள்
நிஜங்களாய்
வகுப்பறை முழுவதும் சிதறிக்கிடக்கின்றன
சிறுநீர் கழித்து அழுகிறது
வடிவமுறக் காத்திருக்கும்
களிமண் பொம்மை ....
பள்ளியின்
பிரதான வாயிலில்
காத்திருக்கிறாள் அம்மா..!

12 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிருக்கு சார்.

jothi said...

சான்சே இல்லை,.. அருமை

தனிமரம் said...

அழகான கவிதை இன்று நாமெல்லாம் ஓவ்வாத கல்வியின் பின் ஓடுகிறோம் 

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
ஹேமா said...

குழந்தைகள் குழந்தைத்தனத்தை இழந்துதானே வருகிறார்கள் !

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை. ஆனால் இரண்டு வயதில் பள்ளியில் கொண்டு போய் தள்ளி விடுகிறார்கள். பாவமாக இருக்கிறது.
நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான கவிதை...நல்ல கருத்தை உள்ளடக்கியுள்ளது.


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

Anonymous said...

நிதர்சனக் கவிதை சரவணன்!

G.M Balasubramaniam said...

சொல்லிப் புரிவதை விட சொல்லாமல் விடுவதே அதிகம். புரிதல் அவரவர் பாடு.

Balakumar Vijayaraman said...

நல்ல மாற்றம் தெரிகிறது, இப்பொழுதெல்லாம். :) வாழ்த்துகள் அண்ணே !

(நேசன் அண்ணன் என்ன சொன்னாரோ!)

குறையொன்றுமில்லை. said...

நல்ல கருத்தான கவிதை. இவ்வளவு சீக்க்ரமே அந்தபிஞ்சுகளை நசுக்கனுமா?

Anonymous said...

சுண்ணக் கட்டிகள்
உதடுகளை வண்ணமாக்குகின்றன
kulanthaikkurumbu....

Post a Comment