Saturday, March 5, 2011

காதல் கவிதைகள்

இருசக்கர  வாகனத்தை 
பின்தொடர்ந்தேன்
கருப்பு புகை துப்பிச் செல்கிறது 
உன்னை போல் ...

வண்டியை பார்க் செய்து 
பார்க்கில் பார்த்தேன் 
அழகு.... 
மனம் பறக்கிறது  
உயரே உயரே 
ஊஞ்சலில் நீ...

பார்க்கும் இடங்களில் எல்லாம் 
நீ ...
செடியிலும் கொடியிலும் 
மலர்ந்த மலரிலும் 
மலரா மொட்டிலும் 
காய்யிலும் கனியிலும்  
அயர்ந்து அமர்ந்தேன் 
மரத்திலிருந்து உதிர்ந்த இலை 
என் மடியில் 
நீ....     

மரம் 
காயம் பட்ட 
மரப்பட்டையிலிருந்து
வடிக்கிறது 
என்னை போல 
கண்ணீர் ....

  
வருடங்கள் கடக்கின்றன 
நான் நீ 
எழுதிய பெயர்கள் 
மரங்களில் அழியாமல் 
என் இதயம் போல் .....
நான் அமர்ந்திருந்த இடத்தில் 
புதிதாய் செடி முளைத்திருந்தது ...



16 comments:

ஹேமா said...

கடைசிப் பந்தியின் உணர்வு வலியாக !

Yaathoramani.blogspot.com said...

கடைசி இரண்டு வரிகள்
அதிகம் சொல்லிப்போகிறது
இதை காதலுக்கான வலை
என்றுகூட சொல்லலாமோ?
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! திரும்பி பார்த்திங்களா?

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

rmkgreat said...

உங்கள் கவிதைகள் அருமை !
என் தளம் வந்தமைக்கும்
எனை வாழ்த்தியமைக்கும் நன்றி !

அன்புடன் நான் said...

காதலில் .... எல்லாமே இதம்தான்.
கவிதை அழகு.

ம.தி.சுதா said...

ஃஃஃஃமரத்திலிருந்து உதிர்ந்த இலை
என் மடியில்
நீ...ஃஃஃஃ

நன்றீங்க.. இயற்கையை நெசிப்பதற்கு ஒர பரந்த மனது வேணும் அது தாராளமாகவெ தங்களிடம் இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

மனோவியம் said...

மரம்
காயம் பட்ட
மரப்பட்டையிலிருந்து
வடிக்கிறது
என்னை போல
கண்ணீர் ....

அருமை வரிகள்......வாழ்க வளமுடன்

G.M Balasubramaniam said...

எண்ணத்தில் உதித்த ஏற்கப்படாத காதலா.?உணர்வுகளிலும் உருவகங்களிலும் தேவையில்லாத காயமோ. ? இல்லை எனக்குத்தான் ரசிக்கத் தெரியவில்லையோ...ABSTRACT WRITINGS SOMETIMES CONFUSES, சரவணன் மனசில் பட்டதை சொன்னேன்.

Unknown said...

சார் சூப்பரா இருக்கு

Unknown said...

இயற்கையாய் இருக்கிறது... பசுமை மாறா வார்த்தைகள்..

ஆயிஷா said...

கவிதை அருமை.

தருமி said...

//புதிதாய் செடி முளைத்திருந்தது ...//

செடியாவது நல்லா வளர்ந்தா நல்லது !!!

ADMIN said...

சரவணன் சார்..! நல்லா எழுதியிருக்கீங்க...! முதல் தடவ என்னோடு வலைப்ப்பூவுக்கு கருத்து சொன்னது நீங்கதான்.. இப்போ எல்லாம் வர்றதேயில்லையே... எதையாவது சொல்லி என்னையும் கொஞ்சம் சீர்படுத்தலாமே..!

ADMIN said...

பார்த்து எதாவது சொல்லுங்க சார்..! www.thangampalani.blogspot.com

Jeyamaran said...

*/பார்க்கும் இடங்களில் எல்லாம்
நீ ...
செடியிலும் கொடியிலும்
மலர்ந்த மலரிலும்
மலரா மொட்டிலும்
காய்யிலும் கனியிலும்
அயர்ந்து அமர்ந்தேன்
மரத்திலிருந்து உதிர்ந்த இலை
என் மடியில்
நீ.... /*

nalla irukku sir...........

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் நீ
எழுதிய பெயர்கள்
மரங்களில் அழியாமல்
என் இதயம் போல் .....
நான் அமர்ந்திருந்த இடத்தில்
புதிதாய் செடி முளைத்திருந்தது ...//

அருமையான வரிகள், ஆனால் வலி தருவதாக.

Post a Comment