Friday, February 4, 2011

அறுபது என்பது ஆகாது !

     அரசு ஊழியரின் வயது அறுபது என்ற அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் . ஆனால் என்னைப் போன்ற இளம் ஆசிரியர்களுக்கு , அது ஒரு ஆபத்தானதாகவே படுகிறது. உனக்கும் வயசாகும் , அப்ப வேலையை விட்டுப் போ என்று கழுத்தைப்பிடித்து தள்ளும் போது தான் அதன் அருமை புரியும் என்று நீங்கள் சாடுவது புரிகிறது.
                     இன்று தலைமைப் பதவி வகிக்கும் அனைவரும் ஏறக்குறைய ஓய்வுப்பெறுவதற்கு ஒரு சில வருடங்களே உள்ளவர்களாக உள்ளனர். மேலும் அவர்களை அடுத்து பதவிக்கு வரும் ஆசிரியர்களும் அதேப்போல அதே வயதில் ஒத்துவுள்ளதால், அவர்களும் சில வருடங்களிலே பணி ஓய்வு பெறும் நிலை உள்ளது.

       அதுசரி , வயதுக்கும் வயதை அதிகப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் ? என்றும், அதனால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்றும் கேட்பது புரிகிறது. இன்று தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில், அனைத்து புள்ளி விபரங்களும் சி.டி போட்டுத் தர வேண்டியுள்ளது. மாணவர்களும் நவீன தொழில் நுட்பங்களை தங்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர். ஆனால், வயதின் முதுமைக்காரணமாக பணி ஓய்வு நிலையில் உள்ள இவர்களின் மனது, இந்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள முன்வரவில்லைஅல்லது ஒத்துழைக்க வில்லை. மேலும், அவர்கள் அந்த தொழில் நுட்பத்தின் நுணுக்கங்களை தெரிந்துக் கொள்வதில் அல்லது புரிதலில் தடுமாற்றங்கள் உள்ளதால், அவர்கள் அரசுக்கு புள்ளி விபரங்கள் கொடுப்பதற்கு ஒரு இளம் ஆசிரியரின் உதவியையே நாடியுள்ளனர். இதனால், அந்த ஆசிரியரின் வகுப்பு பாதிக்கப்படுவதாக உள்ளது. ஒரு இளம் நிலை உதவியாளர் இருந்தாலும், திடீரெனக் கோரப்படும் , தகவல் உரிமைச் சட்டம் சார்ந்த புள்ளி விபரங்களை ஒரு ஆசிரியரைக் கொண்டு , அதுவும் தொழில் நுட்பம் தெரிந்த ஆசிரியரைச் சார்ந்தே தயாரித்துப் தலைமையாசிரியர் பெற வேண்டியுள்ளது.

       தலைமைப்பொறுப்பில் உள்ள இவர்கள் , அவர்களைச் சார்ந்தே உள்ளதால், அவர்களும் இவர்களை மிரட்டவும் செய்கின்றனர். சில ரகசியங்களை , அல்லது கமுக்க நடவடிக்கைகளை தெரிந்து கொண்டு , வேலையை ஏமாற்றும் ஏமாளிகளாக இருக்கின்றனர். அதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு வகுப்பு மட்டுமே யுள்ளதால், அவ்வகுப்புகளில் பிற இளம் ஆசிரியர்கள் நடத்துவது போல தொழில் நுட்பங்களை பயன்படுத்த முடிவதில்லை. அதனால், மாணவர்கள் மத்தியில் இளம் ஆசிரியர்களின் மதிப்பு அதிகரிப்பதால், தலைமைப் பொறுப்பில் உள்ள மூத்த ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் மதிக்கப்படாமல் போகவும் சந்தர்ப்பம் உள்ளது.

       அப்படியே சில விபரங்களை தெரிந்து வைத்திருந்தாலும் , பள்ளியில் அவ் வேலைகளைச் செய்வதில்லை. ஏனெனில் , மாதச் சம்பளம் போன்ற புள்ளி விபரங்களை அக்கணினி கொண்டுள்ளதால், அதனை ஆப்பரேட்டு செய்து ஏதாவது கோளாறானல் , தன்னை சக ஆசிரியர்கள் அவமானம் பார்ப்பார்கள் என்று நினைத்தும், அதனால் ஏற்படும் செலவுகளை எந்த ஹெட்டில் இருந்து எடுப்பது என்று குழப்பம் நேரிடும் என்பதாலும், எப்படியும் அச்செலவினங்களை தான் தன் சொந்தச் செலவில் பார்க்க நேருவதாலும், தன் வீட்டில் உள்ள கணினியில் இயக்க செல்கின்றனர். இதனால் , பள்ளிக்கு பிற பணி ஆகிவிடும். இதனால், அப்பள்ளி அதற்கடுத்த ஆசிரியரை வைத்து இயங்குவதால், தலைமையில்லாமல் தள்ளாடுகிறது.அதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு, பள்ளியின் தேர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, அறுபது ஆகவே ஆகாது . அனேகமான அரசு பள்ளித் தலைமையாசிரியர்களின் நிலமை இதுவே.

   அப்படியே அவர்களின் பணி அனுபவம் முக்கியம் எனக் கருதுவேமேயானால், அவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் சார்ந்து இளம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க தனியாக நியமனம் செய்து ,விருப்பம் உள்ளவர்களைப் பணியமர்த்தலாம். வங்கிகளில் பணி ஓய்வு பெறும் அதிகாரிகளின் சர்வீஸைப் பயன்படுத்திக் கொள்வதற்கு , பணி நிறைவு பெற்றவர்கள் மேலும் உழைக்கத் தயாரானல்,பணி நீட்டிப்புக்கு  விண்ணப்பித்தால், அவர்கள் புதிய அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அளிக்க வகுப்புகள் எடுக்க அமர்த்தப்படுவார்கள்.அதே போன்று முறையை நாமும் கைப்பற்றலாமே... அதற்காக பள்ளியிலேயே மீண்டும் பணி அமர்வது என்பது மாணவர்களின் நலனைக் கெடுப்பதாகும்.

       ஒரு குறிப்பிட்ட ஆசிரியருக்கு மட்டுமே சலுகைகள் தருவதாலும், சில சமயங்களில் தமக்குரிய சில சலுகைகளையும் அனுபவிக்க முடியாமல் , சிக்கலில் தவிக்க ஆளாக நேரிடும். இப்படித்தான் , ஒரு அரசு  மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தகவல்களை தயாரிக்க ஒரு சிலரை மட்டுமே நம்பவேண்டியுள்ளதால் , அவர்களுக்கு சில சலுகைகள் தர, இளம் ஆசிரியர்களில் ஒரு பிரிவினரும், அடுத்து பதவிக்கு காத்திருக்கும் சில ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரின் மீது கோபம் கொண்டுள்ளனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த ஆசிரியர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தது, அதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.


       ஒரு  சனி கிழமை  பள்ளி வைத்துள்ளார். விடுப்பு கடிதத்தைப் பள்ளி வாட்ச்மேனிடம் கொடுத்து அனுப்ப , அவரும் உதவி தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கையொப்பம் இடும் இடத்தில் த. வி. (தற்செயல் விடுப்பு) குறிக்க வில்லை. மறுநாள் , வேலை மும்மரத்தில் தலைமையாசிரியர், திங்கள் அன்று கையெப்பம் இட்டுள்ளார். சனிக்கிழயைப் பார்க்க வில்லை. மறு நாளும் அப்படியே சனி கிழமை பிளாங்காக இருக்க ,வில்லங்க ஆசிரியர்கள் அதனை செல்போனில் பதிவு செய்து , வைத்து விட்டு , அந்த இடத்தில் ஒரு கேள்விக் குறியினை இட்டு வந்துள்ளனர். இதனைப் பார்த்த தலைமை யாசிரியர்கள் ஆசிரியர்கள் பிரச்சனையை எடுக்கின்றனர் எனத் தெரிந்து , அதில் த. வி. குறிக்க, அதையும் அந்த ஆசிரியர் செல்லில் பதிவு செய்து பிரச்சனை மாவட்ட தலைமை அதிகாரிக்கு செல்லப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அதிகாரி வரை பிரச்சனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.

      நல்ல ஆசிரியர் தகவல் தொழில் நுட்பம் தெரியாததால், முறையாக பள்ளிக்கு வந்து , கடமையாற்றும் ஆசிரியர், பிரச்சனையில் மாட்டி விடப்பட்டுள்ளார். ஒரு த. வி யை முறைப்படி இடாததால், அதுவும் அவர் விடுப்பு எடுத்த நாளில் உதவி ஆசிரியர் குறிக்காமல், வேண்டுமென்றே மாட்டி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம். இப்போதாவது புரிகிறதா அறுபது என்பது ஆகாது !  

8 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல அலசல் இது பெரிய பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கே உண்டான பிரச்சினை. சமயத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு எதிராக இளம் ஆசிரியர்கள் அரசியலும் செய்வதுண்டு. ஆனால் அந்தப் பொறுப்புக்கு வரும்போதுதான் தலைமை ஆசிரியர்களின் வலி இளம் ஆசிரியர்களுக்குத் தெரியும்

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

அறுபது ஆகாது !

Ramesh said...

மீண்டும் நல்லபதிவு. உணர்கிறேன் இதில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை நிஜங்களில்.

ENGLISH TUTELAR said...

IS NOT 60 THEN WHAT?

Asiya Omar said...

வருகைக்கு நன்றி.கல்விக்கான சிறப்பு வலை நல்லாயிருக்கு.

Unknown said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும்..

உணவு உலகம் said...

உண்மை சுடும். உரைக்கும்போது வலிக்கும்.

Murugeswari Rajavel said...

அப்பட்டமான உண்மை சரவணன்.எங்கள் பணி அரைப்பணியாய் இருப்பது இத்தகைய சிக்கலால் தான்.
தலைமைப் பொறுப்பேற்கும் காலமே எங்கள் பணி அறப்பணி ஆகும் காலம்.

Post a Comment