Monday, November 15, 2010

மதுரை மாலை




    ஞாயிறு காலைஆறு முப்பது மணிக்கு கா.பா என்னை அலைப்பேசியில் எழுப்பி இன்னும் கிளம்ப வில்லையா..? என்ற வினாவுடன் அன்றையப் பொழுது விடிந்தது. இதோ வந்துவிட்டேன்.. என விரைந்து குளித்து கிளம்பிய நிலையில்  என் நண்பர் திரு. ரவி ”சரவணா.. எங்கும் போய் விடாதீர்கள் .. இன்று நாம் பத்து மணிக்கு மதுரையில் உள்ள நக்கீரர் சமாதிக்கு அழைத்துச் செல்ல விருக்கிறேன்..” என எழு மணிக்கு அன்புக் கட்டளையிட, நான் கீழக்குயில் குடி செல்வதை தவிர்த்து, நக்கீரருக்காக காத்திருந்தேன்.






மணி பத்து ஆயிற்று, ரவியை அழைத்தேன்.. எப்பொழுதும் போல .. பிரபாகர் இன்று வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார். நீங்கள் மேல மாசி வீதிக்கு பன்னிரண்டு மணிக்கு வாருங்கள் என நேரத்தை தள்ளிப்போட... தில்லு முல்லு படம் பார்க்க உட்கார்ந்தேன். கா. பா இந்த தில்லு முல்லு தெரியாமல் மனதிலேயே திட்டி தீர்த்திருப்பார். (உண்மை.. நான் இன்று திங்கள் மதியம் பேசிய போது  கடிந்துக் கொண்டார்.. இன்னும் இரண்டு நாள் கழித்து சொல்லியிருக்கலாம்லா... போங்க அண்ணே...!) 

       பன்னிரெண்டு முப்பதற்கு நான் ரவியை மேலமாசிவீதி ஐயப்பன் கோவில் எதிர்புறம் உள்ள இரும்புக் கடை அருகிலுள்ள ஒரு வீட்டில் ஒரு பெரியவரை சந்திக்க செய்தனர். என்ன விபரம் என்றேன்...” மதுரை பற்றி செய்தி கேட்டீர்...  இது புதிது .. நீங்களே பிளாக்கில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் இவரை அறிமுகம் செய்யும் முதல் நபராக இருப்பீர்.. நான் சென்ஸஸ் டுட்டியில் இவரை சந்தித்தேன்..” என பிரபாகர் மாடியில் பெரியவர் திரு . சிவ சண்முகத்தை  அறிமுகம் செய்தார்.






 யார் இந்த சிவ சண்முகம் ? என்ற என் கேள்விக்கு மேலேயுள்ள படத்தைக் காட்டி என் தந்தை திரு எம்.எஸ். ரத்தின சபாபதி , அவரின் அப்பா , என் தாத்தா திரு மதுரையம்பதி மகாவித்துவான் சு. சபாபதி முதலியார் (1837-1898) .. நான் என் தாத்தாவின் தமிழ் ஆர்வத்தையும் , அவர் முதன் முதலில் செம்மொழி என்ற சொல்லை பயன்படுத்தியதையும் ஆராய்ந்துக் கொண்டுள்ளேன். நான் மிகவும் குறைந்த அளவே படித்துள்ளேன் என்று மிக ஞானத்துடன் பேசத்துவங்கினார். 



திரு . இர. சிவசண்முகம் தன் தாத்தாவை தமிழ் தாத்தா என்றே அழைக்கிறார். அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சபாபதி முதலியார் இயற்றிய மதுரை மாலை நூலை தேடிக்கண்டு பிடித்து  அதற்கு உரையும் தயாரித்து அதனை மறு வெளியீடு செய்ய முயற்சி செய்து வருகிறார். 


    பரிதிமார் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரி அவர்களால் 1901 ஆம் ஆண்டு இந்த மதுரை மாலை என்னும் தமிழ் தாத்தா சபாபதி அவர்கள் நூலை வெளியிட்டார். அந்நூலிலின் அணிந்துரையில் முடிவில் திருப்பரங்குன்றம் அந்தாதி விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். அந்நூலின் நகலைப் பெற அல்லது அதன் ஒரு பிரதியை எப்படியாவது பெற வேண்டுன் என்று ஆவலில் பல ஆவண காப்பகங்களுக்கு இந்த தள்ளாத எழுப்பத்தைந்து வயதில் அலைகிறார் என்பது அவருடன் பேசும் போது தெளிவாகத் தெரிகிறது.

     பரிதிமார் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரி மதுரை மாலை சபாபதி முதலியாரின் மாணவன் என்பது நம்மை மிகவும் பிரமிக்க வைக்கிறது.
சபாபதி அவர்கள் மதுரை எம். சி. பள்ளியில் செயல் பட்ட மதுரை நேடிவ் காலேஜ் ( மதுரை துரைத்தனத்தார் கலாசாலை) யில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இக்கல்லூரி சென்னை யுனிவர்சிட்டிக் கண்ட்ரோலில் செயல் பட்டது என்ற தகவலையும் நமக்கு தருகிறார்.   


        28 சிவ ஆகமங்களில் காமிக ஆகமம் இசையைப்பற்றி சொல்லுகிறது. இந்த காமிக ஆகமப்படி இசையுடன் பாடும் பாடலை பாடக் கூடியவர் என் தாத்தா என்கிறார்.  வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி -கலாசாலை வாழ்க்கையில் பக்கம் 29 ல் சாபாபதியை  தன் ஆசிரியர் என குறிப்பிடுகிறார். மேலும் அவர் இசையுடன் பாடம் நடத்தும் அழகு சிறப்பு வாய்ந்த்து. அவர் தமிழ் , ஆங்கிலம், தெலுங்கு ஆகியவற்றில் தேற்சிப்பெற்று விளங்கினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது போல அக்கால வித்துவான்கள் , தமிழாசிரியர்கள் சபாபதி முதலியார் அவர்களிடம் படித்த அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார்.  ஒரு மணிக்கு சந்தித்த சந்திப்பு மாலை ஐந்து மணி வரை ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்காமல் சென்றது என்றால் , அந்த எழுபத்து ஐந்து பெரியவர் தமிழ் மீதும் , அவர் தாத்தா மீது கொண்டுள்ள பாசத்தை பார்த்து என்னால் வியக்க முடிய வில்லை.

        
தமிழ் ஆர்வலர் சாபாபதி முதலியார் இயற்றிய நூல்கள்

-திருக்குளந்த வடிவேலன் பிள்ளைத் தமிழ் 1896

-திருப்பரங்குன்றம் அந்தாதி

-நளவிலாசம் (1872)

-பாரத விலாசம்

-மதுரை மாலை (!901)


மதுரை மாலையில் எனக்கு பிடித்தப்பாடல்

மானச்சங் கூடு மடவார்கண் டத்தொலிசெய்ம்
மானச்சங் கூடு மதுரையே-பானச்சம்
பூவணத்தா னத்தன் புரம்பாதி கொள்ளுமறைப்
பூவணத்தா னத்தான் புரம்”

5ஆம் பாடல் ஆகும் இது திருப்பூவணத்தைப்பற்றி சொல்லுகிறது.


”வைகையினே டேறு மலரிடைக்கா ழிக்கோன்முன்

 வைகையினே டேறு மதுரையே- யுய்கையரு
னம்பரம ராரனகர் நாடுமண கானரியார்
நம்பரம ராடனகர்”

மதுரை மாலை மொத்தம் 100 பாடல்களைக் கொண்டது . இதில் 50 பாடல்கள் சிலேடை , 50 எமக வடக்கு வாய்ந்தது அதாவது ஒரு பாட்டுக்கு பல பொருள் சொல்லும் அமைப்புடையது .


தஞ்சை மாவட்டம் நன்னிலம் பெருவட்டம், கொகந்தனூர் வட்டத்தை சேர்ந்த குமாரமங்கலம் கிராமத்தில் திரு. சுந்தரலிங்கம் , நீலாம்பாள் அவர்களுக்கு மகனாக 1837 ல் பிறந்தார். பின் மதுரை சோழவந்தானில் ருக்குமணி என்ற பாப்பம்மாளை மணந்தார்.  இவர் யாழ்பாணத்து நல்லூர் திரு . சின்னத்தம்பி  புலவர் எழுதியளித்த இறை வழிபாட்டு நூல் மறைசையந்தாதிக்கு ஒரு உரை எழுதியுள்ளார்.இது வேதாரண்யத்தில் கோயில் கொண்டுள்ள வேதபுரீஸ்வரர் அந்தாதி ஆகும் .  இவர் தம் 61 ஆம் வயதில் அதாவது விளம்பி வருடம் ஆனித்திங்கள் ஏகாதசி திதியில் (14-6-1898) காலமானார். அவர்  வாழ்த்த வீடு தான் நான் சென்ற அந்த வீடு. அன்றும் மாடி இருந்துள்ளது.
  
      
” சூரிய நாராயணருக்கு கிடைத்த அங்க்கீகாரம் , அவரின் ஆசிரியரான தன் தமிழ் தாத்தா சபாபதி முதலியாருக்கு கிடைக்க வேண்டும் , அவரின் பெயரில் ஒரு டிரஸ்டு ஆரம்பித்து , அவரின் பாடல்கள் இசையுடன் பாடப்பட வேண்டும் , தமிழில் போட்டிகள் நடத்தி குழந்தைகளுக்கு பரிசு வழங்க வேண்டும் , தமிழில் கருத்தரங்கங்கள் நடத்திட வேண்டும் ”என தன் பற்பல ஆசைகளை நம் முன் வைத்து நம்மை அசையாமல் உட்கார வைத்துவிடுகிறார்.
  

       மதுரை மாலை இயற்றிய சபாபதி அவர்களின் திருப்பரங்குன்றம் அந்தாதி புத்தகம் வைத்துள்ளேர் அவரை அணுகி அவருக்கு தன் தாத்தாவின் நூலினை படித்து மகிழும் மகிழ்ச்சியை தரலாம். எழுபத்து ஐந்து தமிழ் மீது ஆர்வம் கொண்ட இளைஞரிடம் பிரிய மணமில்லாமல் பிரிந்தோம்..       





 


 

5 comments:

சிவராம்குமார் said...

அருமையான தொகுப்பு!!!

Ahamed irshad said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html

G.M Balasubramaniam said...

அருமையான அனுபவங்கள் உங்களுக்கு. வாழ்த்துக்கள்

எம்.ஏ.சுசீலா said...

மின் அஞ்சல் தெரியாததால் இதற்குள் வந்து எழுதுகிறேன்.முடிந்தால் மின் அஞ்சலை மதுரைக்காரியான எனக்குச் சொல்லுங்கள்.
கல்விக்கென்றே தனி வலை எழுதும் உங்கள் பணி போற்றுதற்குரியது.
இத்துடன் இரு இணைப்புக்கள்.
கல்வி குறித்தஎனது ஒரு சிறுகதைக்கான இணைப்பு தங்கள் பார்வைக்கு
கண் திறந்திட வேண்டும்...!
http://www.masusila.com/2010/11/blog-post_5383.html
மேலும் சில இணைப்புக்கள்
ஒன்று மதுரை பற்றி,அடுத்தது யூனிசெஃப் பற்றி..
http://www.masusila.com/2010/11/blog-post_28.html

http://www.awaazdo.in/?name=Name&email=Email&city=%3Ccityid%3E&mobile=Mobile&cid=71

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அருமையான சந்திப்பு - நல்லதொரு செயலைச் செய்து - ஒரு இடுகையும் இட்டது நன்று - அவர் தேடும் புத்த்கம கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment