Tuesday, November 2, 2010

மாற்றுத் திறனாளிகள்

  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் (Academic resource support for IED )என்ற தலைப்பில் பயிற்ச்சிகள் நடந்தது.அப்பயிற்ச்சியில் கலந்துக் கொண்டு , நான் அடைந்துள்ள பயன்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

IED என்பதன் விரிவாக்கம் inclusive education for differently able .


        இன்று மாற்றுத் திறனுடையக் குழந்தைகள் தமிழ்நாட்டில் சாதாரணக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களுக்கு உதவியாக பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் சிறப்பு ஆசிரியர்களை நியமித்து கண்காணிக்கிறது. மாற்றுத்திறன் உடைய மாணவர்களுக்கு தங்கள் உடல்நலம் தேர்ச்சியடைய சிறப்பு மருத்துவர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள் கொண்டு அவர்களுக்கு உடற்பயிற்சி, பேச்சு பயிற்சி , நடை பயிற்சி தர டே கேர் செண்டர் நடைபெறுகிறது. (மதுரை தெற்கு வட்டார வளமையத்திற்கு மாநகராட்சி மறை மலை அடிகள் பள்ளி தெற்கு வாசல் அருகில் உள்ளது.   இதுபோல ஒவ்வொரு  வளமையத்திற்கும் தனி தனி மையங்கள் செயல் படுகின்றன)

           பெற்றோர்களும் ஒரு சோர்சாக (source )பயன் படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு டே கேர்   மையம் உதவிகள் செய்கிறது. முற்றிலும் பாதிக்கப்பட்டக் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்கள் அவர்களை கவனிக்கும் பொருட்டு ஒரு சோர்சாகப் பயன்படுகின்றனர்.

          சாதாரணப் பள்ளிகளில் மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் படிக்கும் போது , சக மாணவன் துணைக்  கிடைக்கிறது. அவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மை அகற்றி , பிற மாணவர்களை போலத்  தாமும் படிக்க மற்றும் செயல் பட  முற்படுகின்றனர். இதனால் விரைவில் அவர்கள் தங்கள் குறைபாட்டில் இருந்து குணமடைவதுடன், சகஜ நிலை அடைந்து , கல்வியில் முழு திறனை பெறுகின்றனர்.

           ஆசிரியப் பயிற்றுனர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனியாக நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் பள்ளியை பார்வையிட வரும் பொழுது ,இந்த மாணவர்களையும் கண்காணிக்கின்றனர். டே கேர் சென்டர்களில் செல்லும் போது இவர்களின் உடல் நலம் பற்றி தெரிவித்து, சிறப்பு ஆசிரியர்களின் உதவிகளை பெற்றுத் தருகின்றனர்.


           சாதாரணப் பள்ளிகளில் பணிப் புரியும் ஆசிரியர்கள் . தங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதுடன். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பெறும் உதவிகளை பெற்று , அவற்றை முறையாகப் பயன் படுத்தக் கற்றுத் தருகின்றனர். . மாணவர்களின் முன்னேற்றத்திற்கு  சிறப்பு ஆசிரியர்கள் மற்றும்  மருத்துவர்கள் உதவிகளை பெற்றுத் தருகின்றனர்.

     மாணவர்களுக்கு காலிபர் ஸூ , பிரைலி சிலேட் , காது கேட்க உதவும்  கருவி , மூன்று சக்கர வண்டி, மற்றும் பல உபகரணங்களை அனைவருக்கும் கல்வி இயக்கம் தருகிறது.


     மாற்றுத் திறனாளிகள் என்பவர்கள் தங்கள் ஊனம் குறித்து மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும். நாற்பது சதவீதம் மேல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.  காது கேளாமை,லோ விசன், முழுமையாக பார்வை இழந்தவர்(குருடு) ,வாய் பேசாதவர், கை, கால் இயக்க குறைபாடு (போலியோ) , மன நலம் பாதிக்கப் பட்டவர்  
என  ஊனத்தின்  வகைகள் பிரிக்கப்படுகின்றன.

        சிறப்பு பள்ளிகளில் எட்டு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் மாணவர்கள் ஆசிரியர் வீதம் உள்ளது.சாதாரணப் பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியருக்கு நாற்பது. தற்போது முப்பது என்கின்றனர். 


இனி அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம் .

5 comments:

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க....

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!

மதுரை சரவணன் said...

சித்ரா மிக்க மகிழ்ச்சி.. உங்களூக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு.

erodethangadurai said...

நல்ல தகவல்கள் .... ! உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

G.M Balasubramaniam said...

உங்களது கல்வி சம்பந்தமான பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள்

Post a Comment