Sunday, October 24, 2010

சாம நத்தம் 2



  கீழக் குயில் குடி சமணமலையை பார்க்கும் போது சாமநத்தம் கழுவேற்றம் மிகவும் பாதிக்கவே ,சாமநத்தம் எங்குள்ளது என விசாரிக்க தொடங்கி விட்டேன். மதுரை மஹால் அருகில் செயின் மேரீஸ் பள்ளியின் பின் புறம் சிந்தாமணி ரோடு செல்கிறது அதன் வழியாக பயணம் செய்தால் நெடுங்குளம் செல்லும் வழியில் ஆறு கிலோ மீட்டருக்கு முன்பாக வலது புறம் ஒரு கிளை ரோடு பிரிகிறது, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாம நத்தம் கிராமம் உள்ளது. ஊர் செல்லும் வழியில் சாய பட்டறை காணப்படுகிறது.அக் கிராமத்தில் முதலியார்கள், யாதவர்கள் , ஒரே ஒரு சைவ குடும்பம் என கலந்து வாழ்கின்றனர். கிராமம் தெருக்களுக்கு செல்லும்  முன்பாக இடது புறம் செல்லும் பாதையில் அய்யனார் கோவிலின் வலப்புறம்  காமராசர் திறந்து  வைத்த அரிஜனக் காலனி . அதன் உள்ளே ஐம்பத்து ஐந்தாயிரம் செலவில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் என ஒரு கட்டுப்பாடான கிராமமாகவே திகழ்கிறது. 


            இருளப்பர் கோவில் முன் மதுரை சாரவணனும் , கற்பூர சொக்கும்

    சாம நத்தம் கழுவேற்றம் செய்யும் முன் சமணர்களுக்கும் , சைவ சமயத்தை சார்ந்த திருஞான சம்பந்தருக்கும் அனல் வாதம் , மற்றும் புனல் வாதம் நடந்தது. அதாவது அவர்கள் பாடிய பாடல்கள் உள்ள ஏடு அனலில் அதாவது தீயில் போடும் போது அது எரிந்து போகாமல் , அதில் உள்ள செய்திகள் அப்படியே வெளிப்படுமாம். அதே போல் தண்ணீரில் போடும் போது , அது நீரை எதிர்த்து தன் உரையை வெளிப்படுத்துமாம்  . நான் ஏற்கனவே சொன்னது போல திருஞான சம்பந்தர்  ஏடு வைகை நீரில் எதிர்த்து சென்று திருவேடகம் அடைந்ததாக வரலாறு சொல்லுகிறது.



எல்லை காக்கும் அய்யனார்  கோவில் முன் ரவி, பிரபாகர் மற்றும் பெரியவர் கற்பூர சொக்கு 


கூன் பாண்டியன் நோய் தீர்க்க சம்பந்தர் பதிகம் பாடியதாக வரலாறு கூறுகிறது. புறச் சமயம் மறுப்பில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரம் எழாம் நூற்றாண்டை சார்ந்தது. அதில் ஒவ்வொரு பத்து பாடலிலும் சமண , பௌத்த மதத்தை எதிர்த்து பாடல்கள் உள்ளன. 

  முதல் பதிகத்தில் புத்தரும் , அறிவில்லாத சமணரும் நேர் நின்று பேச முடியாது, புறம் கூறவும், வரம்புக்கு உட்படாமல் ஒரே கருத்தை சொல்லவும் செய்வர் ,உலகத்தே பிச்சை ஏற்று என்  உள்ளம் கவர்ந்த கள்வன் சிவன் ஏறும் பாடுகிறார். 

பாடல் வரிகள் இதோ...
"புத்தரோடு பொறி யில் சம ணும்புறங் கூற நெறி நில்லா      
ஒத்தசொல் லவுல கம்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன் "

                                              சாம நத்தம் இருளப்பர் படுக்கை 

     பெரியவர் கதை சொன்னது மட்டும் அல்லாது  எங்களுடனே வந்து , அதோ அய்யனார் கோவில் இருக்கிறதே , அதன் மேற்கே உள்ள திடல் தான் சமணர் கழுவேற்றப்பட்டு , பின் எரித்த புதைக்கப்பட்ட இடம் . இது முழுவதும் நான் படிக்கும் காலத்தில் ஒரே சாம்பல் திட்டாக இருக்கும் என்று தன் நினைவலைகளை பின்னோக்கி செலுத்தி எங்களையும் அந்தக் காலத்திற்கு அழைத்துச் சென்றார். 



   சீர்வாகனம் தூக்கும் ஒருவர் மீனாச்சி அம்மன் கோபுரம் உச்சில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான் என்ற வரலாறு , மதத்தின் மீது மனிதனுக்கு  உள்ள பிடிப்பை எடுத்துக் கூறியது . சமணர்களுக்கும் , சைவர்களுக்கும் சண்டை வந்த போது , சமணர்கள் சைவக் கோவில்களை இடித்து  , அவைகளை சேதப்படுத்தியதாகச்  சொல்கிறார்கள். அவ்வாறு  வரும் போது மீனாச்சி அம்மன் கோவிலை நெருங்கி அழிக்க  முற்படும் போது ,சீர் வாகனம் தூக்கும் ஒருவர் கோபுரத்தின் மீது ஏறி , தன் மண்டை சிதறி ரத்தம் தெறிக்கும் வண்ணம் தற்கொலை செய்து கொண்டானாம் , அதை பார்த்தவர்கள் ஏற்கனவே ரத்தம் சிந்திய கோவிலை அழிப்பதில்லை என்பதால் , அப்படியே விட்டு விட்டு சென்றனராம்.இது ஐதீகம் என்கின்றனர்.




          உச்சத் திடல் உள்ள பகுதி பணிக்களுக்கு பின்னால் காமராஜர் திறந்த காலனி

இவ்வொரு மதத்தின் மீது  பற்றுக் கொண்டு தன்னை தானே அழித்துக் கொண்ட சீர்வாகணனுக்கு , உத்திர பூஞ்சை இரண்டு ஏக்கர் ஆகவும், சாவன் செய் இரண்டு ஏக்கர் ஆகவும் மன்னனால் வழங்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. அந்த நிலங்களை அவர்களின் வழித் தோன்றல்கள் விற்று விட்டதாகவும் சொல்கிறார்கள்.



      நாயக்கர் காலத்தில் இந்த சீர் தூக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் , தற்போது அது திருவாப்புடையார் கோவில் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள். 


                                                                                  சாம நத்தம் கிராம் பற்றி செய்திகள் சாம்பல் பறக்க தொடரும்..... 

5 comments:

ம.தி.சுதா said...

மீளும் நினைவுடன் சிறந்த பதிவொன்று வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

நேசமித்ரன் said...

பதிவின் பின் இருக்கும் உழைப்பும் தகவல்களும் . தொடருங்கள் . பறக்கட்டும்

erodethangadurai said...

வரலாற்றுத் தகவல்களை அழகாகத் தொகுத்து கொடுத்துளீர்கள்... ! வாழ்த்துக்கள்.

Ganesan said...

அருமை சரவணன்.
மதுரகாரங்களுக்கே தெரியாத விசயங்கள்.

அந்த பகுதியே பார்த்தீர்களானால் பொட்டல் காடாய் இருக்கும், கருவேல மரங்கள், பனை மரங்கள் தான் இருக்கும்.மதுரையின் மற்ற பகுதிகளில் விவசாயம் இருக்கும், இந்த பகுதியில் இருக்காது

Post a Comment