Tuesday, August 17, 2010

சொல்ல மறந்த கடிதங்கள்...

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ,
    
            வசதியாகத்தான் இருக்கிறது மகனே நீ என்னைக் கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.  
          
           பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நே வெளியேறிய போது, முன்பு நானும் இதுபோல் உன்னை வகுப்பில் விட்டுவிட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

           முதல் தர்மிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில் ... அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்று ஓடி அலைந்ததை
ஓப்பிடு செய்கிறேன்.

          இது வரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும், என்  பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மகிழ்கிறேன்!

         நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க ஆவல் இருந்தாலும் , படிபை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இது வென்று விளையாட்டாக நினைத்துக் கொள்கிறேன்.

         இளம் வயதினில் நீ சிறுகச் சிறுகச் சேமித்த அனுபவத்தை என் முதுமையில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்.

        ஆயினும் ....உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு ,
                               நான் கற்றுக் கொடுத்தேன் உனக்கு
                               வாழ்க்கை இது தானென்று...!      
                               நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு
                               உறவுகள் இது தானென்று....!

                                                                                        என்றும் அன்புடன்
                                                                                  உனக்காகவே வாழும் தந்தை.
            


    

3 comments:

புலவன் புலிகேசி said...

தந்தை பாசம்....இது தாய்க்கும் பொருந்தும்

ஷஹி said...

அருமையான கருத்து, சீரான நடை...உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு ,
நான் கற்றுக் கொடுத்தேன் உனக்கு
வாழ்க்கை இது தானென்று...!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு
உறவுகள் இது தானென்று....!"
அருமையான கருத்து

Post a Comment