Thursday, July 29, 2010

தலைவிதி

  "வகுப்பறைகள் ஒருவனின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன. " ஆம் , அதை விட உண்மை மாணவனின் தலைவிதியை  அந்த வகுப்பறையின்  ஆசிரியரே நிர்ணயிக்கிறார். "
  
எங்கள்  பள்ளியில் சர்வ சிக்க்ஷா அபியான் சார்பாக நான்கு மாணவர்களுக்கு காது கேட்கும் கருவி கொடுக்கப்பட்டது. முறையாக ஆசிரிய பயிற்றுனர்களான திரு கண்ணன் மற்றும் சகாய ராணி அந்த வகுப்பு ஆசிரியர்களிடம் அதை செயல் படுத்தும் விதத்தை எடுத்து கூறி , மாணவர்களுக்கு வகுப்பிலேயே ஒரு வாரத்திற்கு அதன் பயன்பாட்டை எடுத்துக் கூறி , நன்கு அக் கருவியை  பயன்படுத்த தெரிந்த பின் அவனின் பெற்றோர்களை அழைத்து கொடுக்க வலிறுத்தி  சென்றனர். நன்கு வேலைசெய்யும் மாற்றுதிறன் மாணவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் கல்வி வழங்கும் ஆசிரியரக்ளுக்கு அரசு பணி நிரந்தரம்  செய்யாது இருப்பது வருந்ததக்கது.  காலை எழு மணிக்கு அரசு ராஜாஜி  மருத்துவமனை  சென்று , மாணவர்களுக்காக காத்து இருந்து , அவர்களுக்கு உரிய அடையாள அட்டை வாங்கி கொடுக்க , கால் கடுக்க நிற்பதை பார்க்கும் போது அவர்கள் பணியை கை எடுத்து கும்பிட வேண்டும் போல் இருக்கிறது. அரசு கருணையுடன் அவர்களை பார்க்க வேண்டும். (எட்டு மணிக்கு  நான் அனுப்பிய பெற்றோரும் , என் பள்ளி ஆசிரியரும் செக்கப் முடிந்து பள்ளிக்கு ஒரு மணிக்கு  தான் வந்தனர்.அது வரை இருவரும் குறைந்த ஊதியத்திற்காக ஏனோ தானோ என்று இருக்காமல் வேலை பார்க்காமல் , சேவையாக செய்வதை பார்க்கும் போது , என் போன்ற ஆசிரியர்களின் கடமை இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்)

        அனைத்து ஆசிரியருக்கும் அக்கருவி கொடுக்கப்பட்டது.அனைவரும் அனைத்து மாணவர்களுக்கும் கொடுத்தனர்.அனைவரும் பயன் படுத்தினர். மீண்டும் தலைப்புக்கு வருகிறேன். ஆசிரியர்கள் தான் மாணவனின் தலை எழுத்தை நிர்ணயிக்கிறார்கள்.


     "எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்குமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக்  கால்களில் நிற்கச் செய்யுமோ,  அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மனிதனுள் புதைந்து கிடக்கும் பூரணத்துவத்தை வெளிபடுத்துவதே கல்வி. " என்றார் விவேகானந்தர்.



      கருவி வாங்கிய ஆசிரியர்களுள் ஒன்றாம்  வகுப்பு அ பிரிவு ஆசிரியர் மட்டும் என் அறிவு கண்களை திறந்து விட்டார்.

      நான் ஆசிரிய பயிற்றுனர்கள் தான் விளக்கமாக சொல்லிவிட்டனரே ,என்று காலையில் வந்தவுடன் கடந்த வாரம் முழுவதும் ஆசிரியர்களிடம் கருவியை கொடுங்கள்   என்று சொனதுடன் நிறுத்தி கொண்டேன். யாரும் அதை பற்றி எதுவும் சொல்ல வில்லை. ஆனால் மேற் குறிப்பிட்ட ஆசிரியர் மறு தினம் வந்து ,"சார், உண்மையிலேயே  நல்ல பயனுள்ள கருவி சார்,பழைய கருவி மாதிரி இல்லாம ,இது கையாடக்கமா இருக்கு சார்" . "அப்படியா, ரெம்ப சந்தோசம் ...மாணவர் வருகை சாராசரி முடிக்க சொல்லுங்க..." என மழுப்பலாக முக்கியத்துவம் தராமல் பேச்சை மாற்றி விடுவேன். இதுவரை பிற மாணவர்களின் ஆசிரியர்கள் அதை பத்தி பேசியதில்லை, நானும் கருவி கொடுங்கள் என்பதுடன் நிறுத்திக் கொள்வேன்.


      இரண்டாவது நாள் அந்த ஆசிரியர் வந்து, "சார், இந்த எஸ். எஸ். ஏ வந்து மற்று திறன் உள்ள மாணவர்களுக்கு ரெம்ப பயனா இருக்கு சார், என் கிளாஸ் பயன் இப்ப 'ப ' ன்னு சொன்னா வாய் அசைத்து 'ப'   சொல்லுறான் சார் ...." என மகிழ்ந்து சொன்னார்.

      மூன்றாம் நாள், " சார், இப்ப நான் கூப்பிட்டா திரும்பி பார்க்கிறான் , சார், ...கொஞ்சம் இந்த கருவியை காது அருகில் வைத்து கேளுங்க நல்லா மைக்கில பேசின மாதிரி இருக்கும் ..." என அக் கருவியின் மகத்துவத்தை பற்றி சொன்னார். மெதுவாக சற்று தொலைவில் நின்று ஹெலோ என்றார் என் காதுகளில் ஒலி பெருக்கி கேட்பது ..."பாருங்க சார், எவ்வளவு அந்த பையன் செவிடா இருந்திருப்பான்.....சார் அடுத்த வாரம் நானே அவங்க வீட்டுக்கு போய் இந்த கருவியின் பயன் , எப்போதும் அணிந்து இருக்க வலியுறுத்தி வருகிறேன்..." என அனுமதி  கேட்டார்.

   ஐந்தாம் நாள் அவரின் வகுப்பறையில் ..."சார், பேர் சொல்லி கூப்பிடுங்க்களேன் ...எப்படி பார்க்கிறான்,,,இதுக்கு முன்னாடி இப்படி திரும்ப மாட்டான், இப்ப நல்ல கவனிக்கிறான்...படம், பட்டம், பம்பரம் நல்ல சொல்லறான் சார், முன்னாடி நான் எது சொன்னாலும் கவனிக்க மாட்டான்..நான் எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான், இப்ப நல்ல பேசுறான்....என் பக்கத்திலேயே வைத்து பார்த்துக்கிறேன்...."


இந்த வாரம் முதல் நாள் ..." சார், சாதாரண பையன் மாதிரி பேச முயற்சி செய்ய வைத்திருக்கிறேன் ....கூட படிக்கிற பசங்க கிட்ட அவனுடன் பேச சொல்லிருக்கேன்....நீங்களும் என் வகுப்பில் வரும் போது பேசுங்க சார்...."


இந்த வாரம் இரண்டாம் நாள் " சார், நான் மட்டும் அல்ல , பிற பசங்களும் பேசினா பேசுறான் ...நிறைய சொல்லித் தர சொல்லுகிறான்..... அவன பாருங்க சார் குறையே தெரியாத அளவு பயிற்சி தருகிறேன் பாருங்க...."

புதன் காலை ...." சார், தப்ப நினைக்கலைன்ன...அந்த பிற பையன்களையும் என்னிடம் தாருங்கள் அனைத்து மாணவர்களையும் நானே பார்த்துக் கொள்கிறேன்...அனைவரயும் பேச வைக்கிறேன்...மத்த பசங்க எப்படி பேசுறாங்க இந்த மிஷின் அவங்களுக்கு பயண இருக்கன்னு பாக்கவா...சார்..."


   என் செவுல்களில்  அறைந்த  மாதிரி இருந்தது. பிற ஆசிரியர்களிடம் ஏன் இந்த ஒரு துடிப்பு இல்லை. பிற ஆசிரியர்களை நான் ஏன் தூண்ட வில்லை ....பிற வகுப்புகளுக்கு சென்றேன் ...கருவி பயன்படுத்தப் படுகிறாதா என்று பார்த்தேன் ...ஆனால் அதன் பயன்பாட்டை கேட்க முடிய வில்லை,உணர முடியவில்லை. தாயுள்ளத்துடன் பார்க்கும் ஒரு சில ஆசிரியர்களால் தான் நம் இந்தியா நற்பண்புகளுடன் ,வளர்ச்சி அடைந்து வருகிறது.

     மாணவனின் தேவைகளை நிறைவேற்றும் ஆசிரியர்கள் மட்டுமே என்றும் நம் மனதில் இடம் பெறுவார்கள். மாணவனின் தேவைகளை அறியாது, தம் அதிகாரத்தால் மாணவனை அடக்கி வைக்கும் ஆசிரியர்களை மாணவன் பிற்காலத்தில் ஒரு ஜெயில் வார்டனைப் போன்றே பார்க்கிறான்.

    சுதந்திரமாக கற்றல் நடைபெற வேண்டும். ஒரு கட்டுக்குள் மாணவனை அடக்கி வெறும் தகவல்களை அள்ளித் தரும் ஒரு கூடமாக இருக்குமானால் , மாணவன் பள்ளியை ஒரு சிறை சாலையாகவே எண்ணி புறக்கணிக்க ஆரம்பிப்பான்.

"சுதந்திரமான சிந்தனைக்கும் , அறிவாற்றலுக்கும் தடையாக  இருப்பது இன்றைய கல்வி முறை" -என்ற ரஸ்ஸல் கருத்து என்றும் உண்மையாகி  விடாது , அனைத்து ஆசிரியர்களும் மாணவனின் தேவைகள் உணர்ந்து , சுதந்திரமான கற்றலை உருவாக்கவேண்டும்.    
    
       நான் உணர்ந்த மாதிரி என்று பிறர் உணர்வார்கள்...? கல்வியில் , கல்வி கற்று தரும்  முறையில் மாற்றம் வர வேண்டும். கல்வி மதிப்பெண் உத்திகளை மறந்து உண்மையான மதிப்பிடல்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
 

Tuesday, July 27, 2010

மறக்க முடிய வில்லை

       நான் சுறுசுறுப்பாக இயங்கும் தமிழ் நாடு பாலிடெக்னிக் சாலையில் வழக்கம் போல் மெல்ல  பயணித்தேன். திருப்பரம் குன்றம் பேருந்து புகை கக்கி என்னை முந்தி சென்றாது. காலையில் உதித்த ரோஜாவை  போன்று சிவப்பாய், வெளுப்பாய், மஞ்சளாய் பலவிதங்களில் கலர் கலராய் மதுரை கல்லூரி நோக்கி பிகர்கள் பயணித்தனர். நானும் ஆனால் ரோடு கிராஷ் செய்து அவர்களுடன் பயணிக்க முடிய வில்லை.... கையில் உளியுடன் எப்படி ...?
      
    "டேய் , பிராக்கு பார்க்காம ...ரோட்ட  பாத்து நட ..." என வார்த்தைகள் வந்த திசை நோக்கி பயணித்தேன். கத்தி சென்ற சைக்கிள் காரன் ...குடை பிடித்த பெண்ணை பார்த்து சிரித்து சென்றான்.திரும்பி பார்த்தான். "கண்கள் இரண்டும் ..." பாடல் என் கண் முன்னே ..."வீட்டில சொல்லிட்டு வந்திட்டியா..."தவறுதலாக சென்ற பைக் காரனை பார்த்து ஆட்டோ காரன்.

     இவை எதையும் பொருட்படுத்தாது ,தனி உலகில் சைக்கிள் காரன் திட்டியதை கூட  காதில் வாங்காது ..."டேய், நேத்து கரண்டு போச்சா ...நம்ம மொக்கை வீட்டுக்கு வந்தானா...எங்க ஆத்தா....ஒரு சவண்டு விட்டுச்சு பார்க்கணும் ....துண்ட காணாம் துணிய காணாம் என பயந்து ஓடிட்டான்..."என ஆண்டாள் புரம் பாலத்தின் கீழே  பொதிகளுடன் கழுதைகளை போன்று,ஆனால் விருப்பத்துடன்  மெல்ல நடந்த சிறுவர்களை நோக்கி என் பயணம் தொடர்ந்தது.

  ' படிப்பு கூடினால் புத்தகம் , நோட்டு தேவை இல்லை' என பல நாட்கள் கல்லூரி செல்லும் பெண்களை பார்த்து நினைத்ததுண்டு. என் பழைய வீட்டு அருகில் வசித்த பையன் என்னை போன்று பொதி சுமைக்கு பயந்து , கொத்தனார் வேலைக்கு அன்று கல் சுமக்க என்றது நினைவுக்கு வருகிறது.

     "அக்கா, அந்தாள பார்த்தாலே பயமா இருக்கு , அதுவும் புத்தகம் கொண்டு போகலைன்னா...கைய நீட்ட சொல்லி பிரம்பா வச்சி ஓங்கி ஒரு அடி அடிப்பான் பாருங்க ...
 வலி உயிரு போயிரும்..."

"புத்தகம்  கொண்டு போகலைன்ன படிப்பு எப்படிடா சொல்லி தர முடியும்.....அடிச்சா தாண்டா..படிப்பு வரும்... வாத்தியார குறை சொல்லக்கூடாது...எல்லாம் உன் நல்லதுக்கு தான் இந்த அக்கா சொல்லுவேன் ...நாளைக்கு மண் சுமக்க வராம ..படிக்க போடா...."


"உனக்கு என்ன அக்கா தெரியும் ...அவனை கண்டாலே பிடிக்கல...அவன்கிட்ட சொல்லி தர நிறையா பேரு இருக்கானுங்க...லீடாராம்..சனியன் பிடுச்சவணுக...எப்ப பார்த்தாலும் என்ன மாட்டி தந்து அடிவாங்கி குடுக்கிறது தான் வேலை ....இவன்கிட்ட கேளுக்கா.."


"அக்கா...படிப்புக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது....எப்ப திட்டுறானுக, இல்லை அடிக்கிறானுக...இதை கூட தங்கிக்கலாம் ...அந்த மூக் கொழுகி ...சிரிக்கிறா....வீட்டுல வந்து போட்டு கொடுக்கிறா... "

"மர மண்ணடை உனக்கு எதுக்கு படிப்பு பேசாம மூடை தூக்க போன்னு அந்த வாத்தி திட்டினதுக்கு , மூக்கொழுகி சிரித்ததுக்கு, அந்த வாத்தி முன்னாடியே கல்ல தூக்கி மண்டையில்ல போட்டு வந்துட்டான்...இனி படிக்கிறது எங்க இரண்டு பேராலையும் முடியாது .."

     என் நினைவலைகள் சீறி சென்ற லாரி சத்தத்தில் கலைந்தது. அவர்கள் மிக்க மகிழ்ச்சியில்....என் காதுகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. 

"டேய் , நான் குரங்கு அட்டை ஐந்து வரேன்..."

"நான் , நேத்து பத்து அட்டை படிச்சேன்.....இந்தா இந்த பேனா....கொடுத்தாங்க ...நம்ம பாண்டியன் சாரு "

"அவரு மட்டும் இல்லைன்னா ...நம்ம பாண்டி வெல்டிங்கு பட்டறைக்கு போயிருப்பாண்டா..."

"சும்மா பள்ளிக்கூடம் வாடான்னு...நித்தம் அவனுக்கு தன் சாப்பாட்டை கொடுத்து .. . அவன் போக்கிலேயே போயி ..."

"அவனுக்கு சாப்பாடு கொடுத்து ...சாரு எத்தனை முறை வெளிய போயி சாப்பிட்டு இருக்காரு  தெரியுமா...?".

"டேய் ...அவன் முதல்ல ஒரு படி நிலை கூட  வரல இப்பா பார்த்தா நம்ம விட ரெம்ப பாஸ்ட்டா படிக்கிறாண்டா..."

" நேத்து ஒரு பெரிய கதை புத்தகம் எடுத்து படிச்சு ...கதை சொல்லுறான்..அந்த குட்டச்சியும் ....அவனுடன் சேர்ந்து அலட்டுராட...."

"அட விடுடா...இன்னைக்கு  நாம சிறுசா பத்து புத்தகம் படிச்சு பத்து கதை சொல்லுவோம்டா ..தன்னால அந்த குட்டாச்சி, பல்லி ,எலி எல்லாம் நம்ம பக்கம் வந்துரும்டா....இன்னைக்கு மதியம் படிக்கிறோம்...கலக்குறோம்..."


    அவர்கள் நிறைய விலங்குகள், பறவைகள், பூச்சிகள், விளக்குகள், வாகனங்கள் பற்றி பேசினார்கள் ....புரிய வில்லை.அட்டை வைத்து படிப்பதாக சொன்னார்கள்.அன்று பரீச்சை அட்டை கொண்டு செல்லவே வெறுப்பாக இருக்கும் , இவர்கள் இத்தனை அட்டை சொல்லுவது வியப்பாக இருக்கிறது. எது எப்படியோ என்னை போன்று படிப்புக்கு பயந்து , அடிக்கு பயந்து, செங்கல் தூக்காமல் நல்லபடியாக படித்தால் நல்லது தான்.

     பையின் சுமை தெரியாமலே ....அவர்களை கால்கள் பள்ளி நோக்கி சென்றன.நான் மட்டும் எதையோ இழந்தவன் போல உணர்ந்தவனாக மெல்ல அவர்கள் பின்னே பயணித்தேன். ஆசிரியரை பற்றி மாணவர்கள் பேசியது , என் ஆசிரியரை நினைத்து வருந்த செய்தது. ஒரு வேலை நான் சீதா டீச்சரிடம் படித்திருந்தால் என் கால்களும் கல்லூரி நோக்கி பயணித்து இருக்குமோ...!


       கிழிந்த டவுசருடன் வந்தவனுக்கு புது சட்டை , டவுசர் எடுத்து கொடுத்து , தலை வாரி, சாப்பாடு கொடுத்து ,கதை சொல்லி , அரவணைத்து பாடம் சொல்லும் சீதா டீச்சர் அவர்கள் வகுப்புக்கு எத்தனை முறை செல்ல முயன்றும் , அந்த வாத்தியார் வகுப்பில் மாட்டி , வாட்டி என்னை தொலைத்ததை இன்னும் மறக்க முடிய வில்லை.

"என்ன அண்ணே ....உங்களுக்கு தெரிந்த பையன் படிக்கிறானா....பள்ளி கூடத்தையே வெறித்து பார்க்கிறீங்க....எங்க சார் ...உங்களை  ...கூப்பிட்டார்...." என்ற மாணவன் குரல் என்னை தடுமாற வைத்தது.

"இனி வந்து என்னப்பா செய்ய போறான்..." எதையோ இழந்தவனாக கடையை நோக்கி பயணித்தேன்.    



 

Monday, July 26, 2010

பசுமை பாரதம் ....!

மரங்களை  விறகுகளாக்கும்
விரல்களை நெருப்பிலிடுவோம்
கோடரி பிடிக்கும் மனிதா...
தன்னை காப்பாற்றவே
பல மரங்கள் பாவாடை கட்டி
மூட நம்பிக்கையின் சின்னமாக ...!

நரகம் தேடி
மா நகரும் ...
காற்றில்லாமல்,
காய்ந்த வெளியாய்
வெப்புக் கூட்டி
பால் வெளியில்
இதய ஓட்டை....
பல்லாக்கில் பவனி
பாடை என்று அறியாமல் ...!

மானிடா தேவை
உடனடி அறுவை சிகிச்சை
மர அறுவை நிறுத்தி
மனித சரிவை தடுக்க
விதைப்போம் ...
அறம் செய்
மரம் செய்
பசுமை பாரதம் ....!

Sunday, July 25, 2010

குழந்தைகளை அடிக்க உரிமை இல்லை

   இன்று பெற்றோர்களே தம் குழந்தைகளை அடிக்க உரிமை இல்லை என சட்டம் உள்ளது. சமீபத்தில் இலங்கையை சேர்ந்த ஒரு பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வந்த போது தன் மகனை கண்டித்துள்ளனர் , அதை அந்த பையன் தன் நண்பனிடம் அதாவது உடன் படிக்கும் மாணவனிடம் சொல்ல, அந்த மாணவன் தன் நண்பனை அவரின் தந்தை அடிப்பதாகவும் , மிரட்டுவதாகவும் போலீசில் புகார் செய்ய, உடனே போலிஸ் தந்தையை இரண்டுநாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து, டின் கட்டி அனுப்பி உள்ளனர்.

    
      அவர் ரிலீஸ் ஆனவுடன் , அவசர அவசரமாய் இலங்கைக்கு பிலைட் பிடித்து , மாணவனை பிலைட்  தரை இறங்கியவுடன் ஆசை தீர அடித்துள்ளார்.

       மதுரையில் உள்ள பார்வையற்றவர்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டு பிரைலி கணினிகளை திரு குமரன் சனியன்று வழங்கினார்கள். அது மட்டும் அன்று அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பிரியாணி வழங்கினார். அந்த நல்ல விசயத்திற்கு நம் சீனா அய்யா ஏற்பாடு செய்து இருந்தார்கள். உடன் என்னையும், மதுரை பிலாக்கர் ஜெய மாறன் அவர்களையும் அழைத்து சென்றார். பார்வையற்ற மாணவர்களைப் பார்க்கும் போது நாம் பார்வையிருந்தும் எவ்வளவு பார்வையற்றவர்களாக இருக்கிறேம் என்பதை உணர முடிந்தது.

         அப்போது குமரன் அவர்களுடன் அமெரிக்க கல்வி முறையினை பற்றி பேசும் போது ,"அமெரிக்காவில் குழந்தைகள் ஐந்து வயது பூர்த்தி அடிந்தவுடன் தான் , இந்தியாவில் செர்ற்பது போன்று சேர்கின்றனர். வயது படிப்புக்கு ஒரு எல்லையாக இருக்காது . ஐந்து வயதில் சேரும் ஒருவன் கிரேடு முடித்துவிட்டால், அவன் ஆசிரியர் அவனை அடுத்த கிரேடுக்கு அனுப்பிவிடுவார். அதேபோல், ஆறு கிரேடு முடிய ஆசிரியரே வயது ஒரு பொருட்டாக கருதாமல் மாணவனுக்கு அனுமதி அளிக்கலாம். அதற்கடுத்து போர்டு வந்து விடும் முறையாய் பாஸ் செய்து மட்டுமே அனுமதிக்கப்படுவான், மேலும் அதிலும் வயது ஒரு பொருட்டல்ல . பதினான்கு வயதில் டிக்ரீ படித்தவர்கள் சாதாரணம். நம் திட்டத்தில் அது சாத்தியம் அன்று. " என்றார்.

      
        பிறந்த தேதி தவறுதலாக கொடுத்து , பிறந்த சர்டிபிகேட் உள்ள தேதி போல் பள்ளி சான்றிதழை மாற்றி தர சொல்லி வரும் பெற்றோர்களை அதிகம் பார்த்திருக்கேறேன்.
பிறந்த தேதியில் தான் சரியாக மாணவனை சேர்க்க வேண்டும் ,பெற்றோர்கள் மாணவன் வீட்டில் தொதரவாக இருக்கிறான், அல்லது கவனிக்க ஆள் இல்லாததால் , பள்ளியில் தவறான தேதி கொடுத்து சேர்த்து விடுவது . பின்பு பத்தாம் வகுப்பு  சேரும் போது பிறந்த சான்றிதல்  கேட்கும் போது உண்மையான் சான்றிதழை கொடுத்து தொந்தரவு செய்வதை பார்த்திருக்கிறேன். இவை வயதுக்கு தகுந்த படிப்பு என்பதால் வரும் விளையுகலாகவே கருதுகிறேன்.

  
       நம் கல்வி முறை மாணவனுக்கு வளைந்து கொடுப்பதாக மாற வேண்டும். மாணவனை மையப்படுத்துவதாக அமைய  வேண்டும். மாணவனின் உண்மையான அறிவை வளர்பதாக இருக்கவேண்டும். மாணவனுக்கு அறிவு சார்ந்த விசயங்களுடன், உளவியல் சார்ந்த விசயங்களுக்கும்  முக்கியத்துவம் கொடுப்பதாக  இருக்கவேண்டும்.
விஞ்ஞான அறிவு வளர்ச்சி எனபது அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால், அதாவது செவ்வாய் கிரகம் நோக்கி சென்று கொண்டு இருக்கும் இவ்வேலையில்,மனித வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், உலக அமைதியை நிலை நாட்டவும், உளவியல் அறிவுகளை நாம் கற்றுத்தர வேண்டும்.
    
          மாணவனை அடிக்கும் விஷயம் என்பது உளவியல் சார்ந்தது என்பதாலே சாதரணமாக அதட்டினாலே மாணவன் மனம் உடைந்து போகிறான். ஆகவே தான் ,கல்வி யாழ்வியல் சார்ந்த அறிவை வளர்ப்தாக இருந்தால், மாணவனும் , ஆசிரியரும் தம் எண்ணங்களை மாற்றி, உண்மையான புரிதலை , கற்றலை உருவாக்கித்தருவார். ஒரு தகப்பனுக்கே மகனை அடிக்க உரிமையில்லை என்னும் போது மூன்றாவது நபர்களாகிய
ஆசிரியர்களுக்கு படிக்கவில்லை என்பதற்கு உரிமை இருக்கிறதா...? அடிப்பதால் படிப்பு வரும் என்றால் ஒரு பிரம்பு போதுமே படிக்க வைக்க . ! ஆசிரியர்கள் உணர்வார்களா....?


 u




  

Friday, July 23, 2010

அடித்தால் தான் படிக்கும் !

      இன்று கிராமக் கல்விக் குழு தினம் என் பள்ளியில் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் வந்திருந்தனர் . பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்கள் வாசிப்புத்திறன் , வில்லுப்பாட்டு, நாடகம் , ஆங்கில உரையாடல் , செய்தித்தாள் வாசித்தல் போன்ற பாடம் சார்ந்த நிகழ்வுகளை செய்து காட்டினர். பெற்றோர்களிடையே கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. 

       ஒரு பெற்றோர் தன் மகளை இரண்டாம் வகுப்பு ஆசிரியை அடிக்கிறார் என்று புகார் செய்தார். அந்த ஆசிரியர் நிர்வாகத்துக்கு வேண்டப்   பட்டவர். உடனே அருகில் இருந்த நிர்வாகி , பள்ளி செய்யலரையும் மீறி அந்த குழந்தையிடம் ஆசிரியர் உன்னை எதற்கு அடிக்கிறார் என்று வினவினார்.  அதற்கு அந்த குழந்தை பாவமாய் படிக்கலைன்னு அடிக்கிறார்கள் என்றார்.  நான் , "எந்த ஆசிரியரும் குழந்தைகளை அடிக்கக்  கூடாது , இருப்பினும் கண்டிக்கிறேன் ..." என்றேன். உடனே அவர் உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமா ...? அடித்தால் தான் படிக்கும் என்றார். உடனே .அருகில் உள்ள பெற்றோர்களும் "ஆமாம் , ஆமாம்...உன் பிள்ளை நல்ல படிக்கலைன்னா ...அடித்து படிக்க வைக்கிறது தான் சரி,,," என ஆமோதித்தனர். 

        மாலை என் தோழியிடம்," குழந்தைகளை அடிக்கலாமா..? கூடாதா..?"என்றேன்.    

        அருகில் அவரின் பல ஆசிரிய தோழிகளும் இருந்தனர். "என் தோழி படித்தல் அடித்தலை சார்ந்தது அன்று. ஆனாலும் , இன்று செய்திகள் ஆசிரியர் அடிக்கிறார் என்பதை ஒரு சமுக குற்றமாகவே சித்தரிக்கின்றனர். குழந்தைகளும் டி.வி. மூலம்  அடிப்பதை சமூகம் அங்கிகரிக்கவில்லை என்பதை உண்ர்ந்து ,வீட்டில் ஆசிரியர் அடிப்பதை பெரிது படித்துகின்றனர். "என்றார்.


      அருகில் இருந்த மற்றொரு ஆசிரியர் ,"அடிக்கிறவங்க அடிச்சா ...குற்றமில்லை என்னை போன்ற ஏப்ப சாப்பைகள்  அடித்தால் தான் தவறு ...அதுவே நிர்வாகத்தால், பெற்றோர்களால் , ஏன் சக ஆசிரியர்களால் கூட பெரிதுபடுத்தப்பட்டு ,, கை , கால், கண் , காது , மூக்கு  முளைத்து   செய்தியாகி விடுகிறது ..."


" சரி , முடிவா என்ன சொல்லுறீங்க ....அடிக்கிறது தவறா ..? சரியா..? ” மீண்டும் நான்.

        "சார், இன்னைக்கு தின தந்தி செய்தி ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியர் ...தவறுதலாக எழுதிய மாணவியை திட்டி, 'எழுத்தே தெரியலை உனக்கு என்ன படிப்பு வரப்போகிறது ' என சொல்ல , அதை தவறாக புரிந்த மாணவி பெற்றோரிடம் வேதனை பட்டுள்ளது , பின் தனிமையில் தன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டதாம் . அதே போல் ஒரு பள்ளியில் ஆசிரியர் படிக்கவில்லை இன்று காதை சேர்த்து கன்னத்தில் அரைய ...காது செவிடாகி விட்டது. அந்த பையனின் தந்தை போலிஷ் ஏட்டு ,வாத்தியார் மீது போலிஸ் கேஷ் ...இப்படி வாரச் செய்திகளை அடிக்கினால் , மாத செய்திகளை கொண்டு ஒரு தனி வார இதழ் நடத்தலாம் ...." என்றார் தோழி.

       "சார் ... பட்டியலிட்டது உங்களிடம் ஒரு கேள்வியை கேட்பதற்கு தான்....அடிப்பது தவறு ஒத்துக் கொள்கிறேன். நானும் ஒரு ஆசிரியர் மாணவன் படிப்பிற்காக கண்டிப்பது வருந்த தக்கது ...ஆனால் மாணவன் சேட்டைகள் , ஒழுக்க கேடான விசயங்களை அன்பால் திருத்த முடியாத பட்ச்சத்தில், ஆசிரியர் மனம்  ஒடிந்து அடிக்க வேண்டிய சுழலுக்கு தள்ளப்படுகிறார்.....மாணவனுக்கு ஆசிரியர் மீது பயம் என்பதே போய் விட்டது.... கண்டித்தல் தவறு என்பது ஆசிரியர் பணியினை செய்ய விடாமல் தடுப்பது போன்றதாகும் ..."        என கடுமையாக பேசினார்.

       " ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்தி பார்க்கட்டும் , அவன் நாய் குட்டி போன்று நாம் வீடு செல்லும் வரை நம்மை சுற்றியே வருவான். அவனை குச்சி எடுத்து தண்டித்தால் தான் படிப்பான் என்றால் , நாம் மந்திர வாதி போன்று ஒரு அழகான குச்சி வைத்து வித்தைகள் செய்யலாமே...! நம்மை பார்த்தாலே மரியாதை வர வேண்டும் , கை எடுத்து கும்பிட சொல்ல வேண்டும், அதை தவிர்த்து தலை தெறிக்க ஓடச் செய்யக் கூடாது .படிப்பு மீது ஒரு படிப்பு வர அன்பு ஒன்றே நல்லது ...கனிவான நாலு வார்த்தைகள் அவனை நம்மிடம் பேச வைக்கும் ,அதுவே கற்றல் சுழலை இனிமையாக்கி , நம்மை சாராமல் மன்னவனை சார்ந்த கற்றலை தரும்.." என்றேன் நான் .


     " சார்...அடிக்காம இருந்தா இந்த சமுகம் வன்முறையான ஒரு பாதையை தேடுவதை போன்று உணர்கிறேன்... சாதாரண உனக்கு படிப்பு வராது எனக் கூறிய வார்த்தை மனதை பாதிக்கிறது ,அதனால் தன் வாழ்வையே தீ வைத்து பொசுங்கச் செய்கிறது . தண்டித்து வளர்க்காத பிள்ளை வன்முறையை ஒரு ஆயுதமாக எடுக்க இது வழிவகுக்கிறதோ என்ற பய உணர்வு உள்ளது . அரசும் ஆசிரியர்கள் மாணவனின் நலனில் அக்கறை கொண்டு தண்டிப்பது என்பது குற்றமல்ல என தீர்ப்பு கொடுத்து , வன்மையான தாக்குதல் நடத்தும் ஆசிரியர்கள் மீது மட்டும் கடுமையான தண்டைனையை அளிக்க ஆவணம் செய்ய வேண்டும்... மாணவன் மனதில் அடித்தல் தவறு என விதைத்தால் அது நளைய சமூகத்தினை வன்முறையில் நாமே ஈடுபடுத்துவதாகும்  ...." என்றார் தோழி .

a
   "சார், மாணவனை தண்டிக்க , அடிக்க ஆசிரியருக்கு உரிமை உண்டு என பகிரங்கமாக கல்வித் துறை அறிவிக்க வேண்டும் .ஆசிரியர்கள் பயந்து பயந்து மாணவனை தண்டிப்பதால் ,மாணவன் அதை தவறான பாதையில் பயன்படுத்தி , ஆசிரியரை கண்டிக்கிறான் ..பெற்றோர்களும் இதை ஆமோதிப்பதாலும், மாணவன் சமுக பொறுப்புள்ளவனாக வாழ்வதை விடுத்து கோழைகளாய் தன்னை தானே அழிப்பவர்களாகவும்  , ரவுடிகளை போன்று பிறரை காயப்படுத்துதளையும் நடத்துகின்றான். ஆசிரியர்கள் சுதந்திரமான கற்றலை கொடுப்பது போன்று ,வகுப்பில் மாணவனை நல்ல குடிமகனாக உருவாக்க தண்டித்தல் வேண்டும்...."என தோழி உரைத்தாள்.


       "கற்றல் கருத்து திணிப்பாக இருக்காமல், கசக்கும் வேப்பங் கொழுந்தாக  இல்லாமல்
மாணவன் விரும்பும் விதமாக , கருத்துகளை மையபடுத்தி பாடமுறை செயல் திட்டமாக படிக்கப்பட்டு, விளையாட்டு முறையில் ,மாணவனை மையபடுத்தி , கற்றல் இனிப்பாக          மாறினால் பிரம்புக்கு வேலையில்லை. புரிந்து கற்றல் , ஆசிரியர் இடைவெளி குறைத்து ,மாணவனை நோக்கி நகர்தலை செயல்படுத்தும் " என்றேன் நான்.


      "நம் கல்வி திட்டம் மாணவனை மையப்படுத்துவதாக அமையாவிட்டாலும்  பரவாயில்லை மாணவனை கோழைகளாக வளர்க்கும் முறையாக இல்லாமல் இருந்தால் அதுவே நல்லதாகும் .இன்று ஒழுக்க கேடான தவறுகள் ஆசிரியர் மீத பயம் இல்லாததால் உண்டாகிறது.  மாணவனை தண்டித்தல் ஆசிரியர் உரிமையாக்கப்பட வேண்டும் .அதற்காக இரத்தம் வழியும்  வரை அடிக்கக் கூடாது .ஆசிரியர் மீது எக்காரணம் கொண்டும் மாணவனை அடித்தார் என்ப்தற்காக  காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது குற்றம் பதிவு செய்தலை வன்மையாக கண்டிக்கிறேன் . எந்த ஆசிரியரும் மாணவன் மீது வன்கொடுமை நடத்துவதில்லை என்பதால் அரசு , பொதுநல அமைப்புகள் தம் நிலைமைகளை மாற்றி அமைத்து கொள்ளவேண்டும்..." என்றார் தோழி.



      "என்னை பொறுத்தவரை கற்றல் இனிமையாக , செயல் வடிவில் இருந்தால், மாணவன் தன் பொறுப்புணர்ந்து படிக்க ஆரம்பிப்பான், மாணவன் ஆசிரியர்கள் மீது பாசம் பொழிவார்கள். அடித்தால் தான் படிப்பானா ? தவறு. உணர்ந்து படித்தால் நல்லது. உணர்த்துதலை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். கற்பனைக்கு வேலை கொடுத்தால் நாளைய சமுகம் நம்மை வாழ்த்தும். மாணவன் எப்போதும் எதாவது ஒரு ஆக்க பூர்வமான  செயலை செய்ய , ஆசிரியர்கள் முயன்றால் , நாமும் வல்லரசாவோம்..." என்றேன்.

        எது சரி...?    எது தவறு....? கருத்திட்டு கல்வி கண் திறக்கவும். 

Thursday, July 22, 2010

மதுரையில் நைஜீரியா ராகவன் 4

   "எந்த இறப்பும் இறப்பல்ல, ஏனெனில் ஒவ்வொரு இறப்பும் ஒரு புதிய கதவை திறக்கிறது. அது ஒரு துவக்கம் , வாழ்க்கைக்கு முடிவு கிடையாது. எப்போதும் ஒரு புதிய துவக்கம் , ஓர் உயிர்த்தெழுதல் தான் உண்டு" -ஓசோவின் வார்த்தைகள்.

    
       வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வராமல் ஒரு புதிய துவக்கமாக ஒவொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்தால் ,ராகவன் மாதிரி மகிழ்ச்சியாக வாழலாம்.

   "ஆசை, கோபம், கனவு கொள்பவன், பேசத் தெரிந்த மிருகம்...அன்பு, நன்றி, கருணை ,  க௦கொண்டவன் , மனித வடிவில் தெய்வம் !"_ கண்ணதாசன் . ஆம். ராகவன் அன்பு, நன்றி கருணையின் வடிவமாய் மனித உருவில் கடவுளாக தெரிகிறார். தன்னை ஒரு அடையாளப்படுத்தும் விதமாக தன் பேச்சில் , செயலில் நடக்காமல் , கடவுளை போலவே  மர்மமாக நம்மை கவர்கிறார். 

          
       வாழ்வில் சுவை என்பது மிகவும் முக்கியம் . சுவையாக இல்லாமல் இருக்கும் எதையும் நாம் வாழ்வில் விரும்புவது இல்லை. உணவில் சுவை என்பது முக்கியம் . உப்பு , புளி , காரம் சரியான அளவு கலந்து இருக்க வேண்டும் . ஏதேனும் ஒன்று கூடினாலும் , குறைந்தாலும் நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. குப்பையிலே வீச வேண்டிய ஒன்றாகும்.

         "கனி இருப்ப காய் கவர்ந்தற்று". பேசுவது என்பது ஒரு கலை.அதுவும் இனிமையாக பேசுவது என்பது நமக்கு கிடைத்த அற்புதம். ராகவன் பத்து பேர் பேசினாலும் , தன் இனிமையான பேச்சால் நம்மை கவர்கிறார். நொடியில் நம்மை சிரிக்க வைத்து அசத்துகிறார் . அவர் இலக்கியம் பேசவில்லை , ஆனாலும் அவரின் பேச்சு இலக்கியமாகவே விளங்குவது அதிசயம்.


       தன் குலதெய்வத்தை பற்றி பேசுகிறார். எதார்த்தமாக இருக்கிறார் . பார்க்க வேண்டிய கோவிலின்  லிஸ்டுக்களை நமக்கு தந்து உதவுகிறார். பக்த்திமானாக தெரியாவிட்டாலும் பய பக்க்தியுடன் இருக்கிறார். ராகவன் ஒரு மதவாதியாக இருக்கிறார். ஆம்! செல்போன் மணியடித்ததும் பவ்வியமாக வெளியில் செல்லும் என்னை கலாய்கிறார். குரலின் பணிவு மனைவியின் பயம் என்று ...நானும் அப்படிதான் என்று அசர வைக்கிறார்.

            "அன்பின் கலையை அறியாத ஒரு மனிதனைத்தான் நான் பொருள் முதல் வாதி என்று அழைக்கிறேன். கடவுளை நம்புகிறவனை நான் மதவாதி என்று நினைக்க மாட்டேன். யார் தன்னுடைய நேசத்தில் , தன்னுடைய நம்பிக்கையுணர்வில் வளர்கிறானோ- தன்னுடைய ஆனந்தத்தை பிரபஞ்சம் முழுவதும் பரப்புகிறானோ-அவனையே நான் மதவாதி என்று அழைக்கிறேன்."-ஓஷோ .

       நைஜீரியாவில் இருந்து வந்து வழி நெடுகிலும் , தன் நம்பிக்கையான உணர்வில் , தன் நண்பர்கள், குடும்பத்தார், உற்றார், ஆசிரியர் மற்றும் நம்மை  போன்ற முகம் தெரியாத பிளாக்கர்களை  சந்தித்து , தன்னுடைய சந்தோசத்தை வெளிபடுத்துவதுடன் , மகிழ்ச்சியை பரப்பும் ராகவனை நானும் ஓஷோ பார்வையில் ஒரு மதவாதியாக தான் பார்க்கிறேன் .

      சோப்புக்  குமிழ்களை பார்ப்பது போன்று , பட்டம் பூச்சியின் பறக்கும் அழகைப்  போன்று , விரிந்து மலர காத்திருக்கும் மொட்டுக்களை பார்த்து ரசிப்பது போன்று தருமி , கார்த்திகை பாண்டியன் , ஸ்ரீ , தேனீ சுந்தர், பாலா , ஜெர்ரி, சீன , மெய்யம்மையார் ஆகியோருடன் நானும் ராகவனை ரசித்தேன்.

        அரவிந்த் மகா புத்திசாலி . அது என்ன மகா  புத்திசாலி ..? ஆமாம் , ராகவன் ஒரு போட்டவை ப்ரி வியுவ் செய்து இது புத்தரா ?மாகா வீரரா...? என்ற சந்தேகத்தை கிளப்பியவுடன். அனைவரும் திகைத்து புத்தராகத்  தான் இருக்கும் என விவரிக்கும் முனே , இது புத்தா தான் ..மகாவீரர் தலையில் கர்வுகள் இருக்கும் என்றவனை நான் அப்படிதான் அழைக்க முடியும் ..! சிறந்த அறிவாளி.

       தன் அடுத்த  பயணம் குறித்து பேசும் போது ...அது அரவிந்த் தான் எங்கள் கைடு . அவன் தான் எங்களை வழிநடத்துவான் என்று ஆச்சரிய படுத்துகிறார். நீ பிறந்தாய் , வாழ்ந்தாய், இறந்தாய்- ஆனால் நீ தவற விட்டுவிட்டாய் . நீ மிக பெரியதை இழந்து விட்டாய் என்ற நினைப்பு வாராமல் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் வாழ்கிறார்.


   " பேசுவதற்குத் தகுதியானவர் என்று தெரிந்தும் , பேசாமல் இருந்து விட்டால் நீ ஒரு நல்ல மனிதரை இழந்து விடுகிறாய். பேசுவதற்குத் தகுதியற்றவர் என்று புரிந்தும் நீ பேசிவிட்டால் , உன் வார்த்தையை இழந்து விடுகிறாய். அறிவுள்ளவன் மனிதர்களையும் இழப்பதில்லை; வார்த்தைகளையும் இழப்பதில்லை !" -கன்ஃபூஷியஸ்.

       நான் என் வார்த்தைகளையும் இழக்கவில்லை, ராகவன் போன்ற நல்ல நண்பர்களையும் இழக்க விரும்பவில்லை ...ஆகவே பதிவு தொடரும்...        

Wednesday, July 21, 2010

மதுரையில் நைஜீரியா ராகவன் 3

       "மனித குலத்தை எது ஒன்றுபடுத்துமோ , அதுவே நல்லது. மேலானது. அழகானது. எது பிரித்துச் சிதைக்குமோ , அது கேடானது. தவறானது , இழிவானது"- டால்ஸ்டாய்
  

       வலைப்பக்கங்கள் மனித குலத்தை ஒன்றுபடுத்துவதுடன் , நல்ல உதவிகளையும் , நல்ல நண்பர்களையும் அறிமுகப்படுத்துகின்றன.

        "வாழ்வு ஒரேயொரு நொடி அல்ல .ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும். ஒவ்வொரு  நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும் "- புத்தர் .


     ராகவன் தன் வாழ்வை ஒவ்வொரு  நொடியிலும் வாழ தெரிந்தவர். அவர் அதை பிறருக்கும் பழகி தருகிறார். நாம் அதை ஒரு நான்கு சுவருக்குள் அடங்கிய இறுக்கமான கற்றல் செயலாக  அமையாமல்   கற்றுத் தருவதை உணராமலே கற்கிறோம். வகுப்பறைகளும் இம்மாதிரியான எளிமையான கற்றலை வெளிபடுத்தினால் மிக அருமையாக இருக்கும்.
  
        ராகவன் அப்படி என்ன கற்றுத்தருகிறார். ..? வாழ்வியல் எதார்த்தங்களை தன் வாழ்வு முறைகளில் , தன்னை வெளிப்படுத்துதலில் , மகனுடனான உறவு முறைகளில் , மனைவியை தோழியாக பாவிக்கும் எண்ணங்களில்  , தன் காரோட்டியிடம் கட்டும் இனிமையான புன்முறுவலில் கண்டித்தலில் , இளையவர்களை வழிநடத்துதலில் , நினைவலைகளில் , இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

         ராகவன் இறந்தகாலத்தில்  வாழாமல், அதே சமயம் தன் இறந்தகாலத்தை மறக்காமல் , அந்த நினைவுகளை நிகழ்காலத்தில் பொருத்தி , புதுமைகளுடன் வாழ்கிறார்.எதிர்காலத்தை நினைத்து நிகழ்கால நிஜத்தை இழக்காமல் , எக்காலத்தையும் வென்றவராய் நிகழ்கால புத்தரை வாழ்கிறார்.

        இன்றைய சந்ததியினருக்கு தாத்தா , கொள்ளு தாத்தா, எள்ளு  தாத்தா வரை தான் தெரிகிறது...என பேச ஆரம்பித்தவர் தன் நகைச்சுவை உணர்வால் அனைவரயும் பேச்சில் தன் பக்கம் கட்டி இழுக்கிறார். உண்மை ..நாளைய புதிய தலைமுறை அப்பா, அம்மா என்ற வரிசையுடன் நின்றாலும் ஆச்சரியம். ஆனால் அவர் பணிபுரியும் நைஜீரியாவில் பெயரை வைத்து அவனின் சந்ததியினரை கண்டு பிடித்து விடலாம் என்கிறார். உ.ம் பாத்திமா பெர்னாண்டோ என்றால் இரண்டாவது வரும் பெயர் அவரின் குடும்ப பெயர் . என்கிறார்.

       சௌராஷ்டிரா மக்களுக்கு இது போன்று குடும்ப பெயர்கள் உண்டு. அவை ஒருவனின் பூர்விகத்தை கண்டு பிடிக்க உதவும். இன்றும் நடைமுறையில் உள்ளன. குமரனிடம் கேட்டால் இன்னும் விளக்கமாக தெரியும்.

       டாக்டர்  தேவன் மாயன் அவர்கள் தன் பூர்விக கோவிலை பற்றி சொல்லி வியப்பூட்டினார். அதாவது நம் முன்னோர்கள் பணம் சம்பாதிக்க தங்கள் பூர்விக இடம் விட்டு வந்து விட்டாலும் , அவர்களில் பழக்க வழக்கங்களை அப்படியே விட்டு விடுவதில்லை, அவர்கள அதை சுமந்து வந்து, அவர்கள் குலதெய்வங்களை அவர்கள் குடிபெயர்ந்த இடங்களுக்கு எடுத்து சென்று தம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்கின்றனர் என்றார். இது ராகவன் இறந்தகாலத்தை நிகழ காலத்தில் கொண்டுவந்து    பொருத்தி வாழ்வதற்கு உதாரணம். 

         கற்றல் இனிமையாக இருக்க தருமி அய்யா என் கல்லூரி பருவத்தில் இப்போது போன்றே நெருங்கி இருந்திருந்தால் , இன்னும் நிறைய கற்று இருக்க வாய்ப்பு உண்டோ என்று எண்ணத்தை  ஏற்படுத்தினார். மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள இடைவெளி குருவாக இருந்தால் கற்றல் எளிமையாக இருந்து , வாழ்வு செம்மை பட்டு இருக்குமோ..?
      
        அதனால் தான் இன்று செயல் வழிக்கற்றல் முறை , மாணவனை மையப்படுத்தி அமைந்து, ஆசிரியரை மாணவனுடன் அமரச் செய்தல் மூலம் பிரம்பை எடுத்து மிரட்டுதலை தடைசெய்வதாக உள்ளது.


       “நிற்காதே, அங்கே பார்க்காதே, வாய மூடி உட்கார் ” போன்ற அதட்டல்களை தடுத்து மாணவன்  ஆசிரியரை ஒன்றாம் வகுப்பு முதல் ஒரு நண்பனாக பார்க்க உதவி செய்கிறது. சுவருகளில் கிறுக்கல்கள் அன்று தடை செய்பட்டு இருந்தது. ஆனால் இன்று சுவர்கள் கீழ் மட்ட கரும்பலகைகளாக மாற்றப்பட்டு ,கிறுக்கல்களை நிஜமாக்கி உண்மையான கற்றலுக்கு வலுவுட்டுகிறது.

        ராகவன் தன் கும்பகோண பள்ளியை சென்று பார்த்ததை மிக அருமையாக சொல்கிறார். அதவும் ஆசிரியருக்குள்ள மரியாதையை தன் ஆசிரியரை பார்க்க சென்றபோது , அவரின் தந்தையின் மாணவன் என்றவுடன் தன் ஆசிரியரின் முக பாவங்களை செய்து காட்டியது அவர், தன் எதிர்காலத்தை நிகழ காலத்தில் கொண்டு வந்து வாழ்கிறார் என்பதை காட்டுவதாக இருக்கிறது..தம் பள்ளியின் கணினி வசதி பற்றி சொல்லும் போது அவரே அங்கு இன்னும் படிப்பது போன்ற உணர்வை வெளிபடுத்துகிறார்.

       எப்படி பட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன் ஆரம்ப பள்ளி வாழ்க்கையை யாரும் மறக்க முடியாது. ஆகவே , ஆசிரியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து , மாணவர்களை நான்கு சுவர்களுக்கு மத்தியில் புதைத்து விடாமல் , வாழும் இடமாக உணர்த்த செய்யுங்கள். இல்லை என்றால் நிகழ்காலத்திலேயே மாணவர் இதயங்களில் நாம்  புதைக்கப்பட்டு , வாழ்ந்த சுவடு இல்லாமல் மறைந்து விடுவோம்.


                ராகவன் அனுபவம் தொடரும்.......

மதுரையில் நைஜீரியா ராகவன் 2

       சிலரை பார்த்தவுடன் பிடித்து போய்விடும். சிலரை பார்க்க பார்க்க பிடித்து போய்விடும். இன்னும்  சிலரை கேள்வி பட்டவுடனே  பேச பிடிக்கும்...இதில் ராகவன் எந்த ரகம் ..இந்த அறிவியல் ரீதியான போட்டிக்கு பதில் அளிப்பவர்களுக்கு ராகவன் நேரில் வந்து பரிசு வழங்குவார் என்று மட்டும் நினைத்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம். . இது மதுரை பதிவர்களுக்கான போட்டியல்ல ...ராகவனை அறிந்த அனைவருக்குமான போ  ட்டி...

  களத்தில  குதிங்க ...அடுத்த சுவையான பதிவு ரெடி பண்ணுகிறேன்..அதுவரை ராகவன்

Tuesday, July 20, 2010

நைஜீரியா ராகவன் மதுரையில் ..

    மதுரை காலையிலிருந்து மந்தமாகவே காணப்பட்டது. வெயிலின் கொடுமை தணிந்து காணப்பட்டது. கார்த்திகை பாண்டியன் "இன்று மதுரை ராயல் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு பிளாக்கர் சந்திப்பு ,ராகவனுடன் கலந்துரையாடல் "என்று சொன்னவுடன் மனம் மகிழ்ச்சியில் துடித்தது .
      
       மதுரை மந்தமாக இருக்க காரணம் ,இருவர். ஒருவர் அமெரிக்கவில் கணினி துறையில் பணிபுரியும் மதுரையில் பிறந்த  திரு எம். என். குமரன் . அவர் கூடல் நகர் என்ற வலைப் பக்கத்தின் சொந்தக்காரர். "செய்யாமல் செய்த உதவிக்கு சொந்தக்காரர் ".

    "வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதை பிறருக்குக்  கொடுப்பது. அடுத்தவரிடமிருந்து எதையும் எடுப்பது அன்று." பிரஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹுயுகோ.
    
       உண்மை .மதுரையை மறக்காமல் , மதுரைக்கு வரும்போதெல்லாம் தன் துணைவியாருடன் திருமதி ஸ்ரீலேகா குமரன் ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்பவர். வாழ்க்கையில் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ்வதில் அன்னை தெரசாவை நினைவு படுத்துகின்றனர். இம்முறை என் பள்ளியை சார்ந்த நூற்றி இருபது குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கி உள்ளார்கள்.இதுபோன்று மதுரையில் இருக்கும் வரை தன் பெற்றோர்களை சந்தித்தது போக மீதி நேரங்களில் சீனா அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் பல உதவிகளை செய்ய காத்துள்ளனர். அவர்களின் குடும்பத்தை வாழ்த்தவே சூரிய கடவுள் தன் வெப்பத்தை தணித்தது போல இருந்தது.


      மற்றொருவர் நைஜீரியா ராகவன் . பார்பதற்கு எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர்.  

         "அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்கள். அவர்கள் பேசும் பேச்சு , ஜீவனில்லாத கிண்கிணி ஓசை" -பேகன்.

       அன்பு வேற்றுமை பார்ப்பதில்லை, பகைமை நினைப்பதில்லை, ஆணவம் கொள்வதில்லை, சுயநலம் புரிவதில்லை  ... இவை எல்லாம் உண்மையாய் அன்பாய்  ராகவன் வடிவில் .

        புதியவனான என்னை ஒரு பழகிய நண்பனை போல் குடும்பத்துடன் வரவேற்பதில் மேற்கண்ட அனைத்தையும் பார்த்தேன். "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " இது ராகவன், சீனா, குமரன் ,தருமி ,ஜெர்ரி ஆகியோரின் வாழ்க்கையில் வரமாகவே அமைந்துள்ளது. ஆகவே ,தான் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள். நானும் இந்த வரிசையில் அமர என் மனைவியும் காரணம் ....(திருமணமானவர்களை பேச்சு இல்லர் என்ற ஸ்ரீ  க்காக )


      மனிதன் பிற உயிர்களிடம் இருந்து மாறுபட்டு இருப்பது .... பேச்சை வைத்துதான்.
மொழி வடிவம் கொடுத்து ,தான் நினைப்பதை , மனதில் பட்டதை வடிக்க பேச்சு உதவி புரிகிறது. பேச்சு வாழவும் வைக்கும். வீழவும் வைக்கும்.

   "ரத்தம், உழைப்பு, கண்ணீர் , வியர்வையைத் தவிர , என்னிடம் தருவதற்கு வேறொன்றும் இல்லை. ....நம் லட்சியம் எது என்று நீங்கள் கேட்டால், ஒரே வரியில் என்னால் பதில் சொல்ல முடியும் . வெற்றி, எவ்வையாயினும் எடுத்த காரியத்தில் வெற்றி, அதற்கான பாதை எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் வெற்றி ஒன்றே நம் இறுதி லச்சியம் .வெற்றி இலையேல் நமக்கு வாழ்க்கை இல்லை " என்ற சர்ச்சிலின் பேச்சு இரண்டாம் உலக போரில் பிரிட்டனை ஹிட்லருக்கு எதிராக வீறு கொண்டு எழச் செய்து 
போரில் வெற்றி பெறச் செய்தது.

       மதுரை பிளாக்கர்களின்  சிந்தனையை வெற்றி கொண்டதாக அமைந்தது ராகவனின் கனிவான பேச்சு . யாரையும் புண்படுத்தாத அவரின் பண்பு. நகைச்சுவை கலந்த பேச்சு .
"மதுரை கார பசங்க பாசக்காரங்க ..."என்ற எதார்த்தம். மனைவியை தோழியாக நடத்தும் பாண்பு ,பொறுப்பான கணவனாக காட்டுகிறது. எதையும் சுவைபட சொல்லும் விதம் ...ராகவனை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது.

      "வாய்க்குள் போனது எதுவும் மனுஷனை தீட்டுப்படுத்தாது . வாயிலிருந்து வருவது தான் தீட்டுப் படுத்தும் " -ஏசுநாதர். எதை பேசுவது என்பதை விட எதை பேசக்கூடாது என்பதே  அறிவின் அடையாளம்  . அதை நன்கு புரிந்தவராக ராகவன் உள்ளார்.
   
             இப்படிப்பட்ட  ஒருவர் மதுரையில் இருந்தால் சூரியன் எப்படி தன் வெப்பத்தை வெளிபடுத்தும் . ராகவனின் மதுரை சந்திப்பு சுவாரசியங்கள் தொடரும்....

Monday, July 19, 2010

அறிவை புகட்டுவதா கல்வி ...?

         அறிவை புகட்டுவது மட்டும் கல்வி அல்ல. கல்வி மாணவனிடம் கற்க வேண்டும் என்ற பொறுப்பை விட்டு விட வேண்டும். அவர்கள் கற்பதற்கு ஒரு வழிகாட்டுதலை அமைப்பதாக கல்வி இருக்க வேண்டும். மாணவனை மையப்படுத்துவதாக கல்வி அமைய  வேண்டும்.

        ஆசிரியர்கள் மாணவனின் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும் . மாணவர்களை கட்டுப்படுத்துபவர்களாக ஆசிரியர்கள் இருக்க கூடாது. ஆசிரியர்கள் செய்வதை அப்படியே பின்பற்றுபவர்களாக மாணவர்கள் இருக்க கூடாது. அதாவது பயனில்லா கற்றல் முறையை பின்பற்றுவதை தவிற்க வேண்டும்.

      தகவல்களை அளிப்பவர்களாக ஆசிரியர்கள் இருப்பவதை தவிர்த்து, தகவல்களை திரட்டி ,மாணவர்களின் இயல்பான ஆர்வத்தை தூண்டுபவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கண்முடித்தனமாக ஆசிரியர்களை கூறுவதை நம்பி மாணவன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டிய  அவசியமில்லை.மாணவனின் மாறுபட்டக் கருத்துக்களை அனுமதித்து தொடர்முடிவுகளை எட்டச் செய்யாலாம்.


       செயல் அடிப்படையில் கல்விமுறை அமைந்து , கற்றலின் உண்மையை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.அனுபவத்தின் வாயிலாக முடிவுகளை கண்டறிய வாய்புகள் தர வேண்டும். தத்துவ ரீதியான ஆன்குமுரைகளை தவிர்த்து , நவீன காலத்திற்கு ஏற்ற அறிவியல் ரீதியான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும். கல்விமுறைகளில் சீரிதிருத்தங்க்களை அனுமதிக்க வேண்டும்.

  மாணவர்களின் கற்றல் அவன் சார்த்த சமூகத்துடன் தொடர்புடையாதாக இருக்க வேண்டும். பள்ளியை மையப்படுத்தி கற்றல் நிகழ்வுகள் அமைவதை தவிர்க்க வேண்டும். கற்றல் பள்ளி , வீடு , தெரு, நண்பன் ,உறவு என விரிந்து சமூகத்துடன் தொடர்பு உள்ளதாக அமைந்து , அது அவனுக்கு வாழ்வியல் பண்புகளை போதிப்பதாக அமைய வேண்டும்.

    மாணவர்களிடம் தனிமனித  அறநெறியின்    முக்கியத்துவம் ,சமுகத்திற்கு உகந்தது என்பதை இளமையில் உணர்த்துவதாக இருக்க வேண்டும் . தனிமனித தன்முனைப்பு தவிர்த்து , கூட்டுறவான வாழ்க்கை முறையை பின்பற்ற கல்வி கற்றுத் தருவதாக அமைய வேண்டும்.

   மாணவன் மொழிப்போதனை அவனின் அன்றாட  வாழ்வில் அவன் பயன் படுத்தும் சொற்களை கொண்டு அமைய வேண்டும். எளிதில் தொடர்பு கொள்ள உதவுவதாக மொழி போதனை அமைய வேண்டும்.  மொழி கற்றுக் கொள்ளுதல் என்பது எழுத்தக்களை சொல்லிதருவதன்று , அது பேசுதல் , எழுதுதல் , தகவல்களை   பிறர் உணரும் வண்ணம் பரிமாறுதலாகவும் , எடுத்தியம்புவதாகவும் அமைய வேண்டும்.
      
      அறிவியல் பாடம் மாணவன் இயற்கையோடு தொடர்பு படுத்துவதாக அமைய வேண்டும் . இயற்கையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி , இயற்க்கை மாற்றத்தை சரி செய்பவனாக  மாணவனை உருவாக்க வேண்டும். இயற்க்கை மீது நம்பிக்கை கொண்டவனாகவும்  ,அதனை காப்பவனாகவும் நம் அறிவியல் மாணவன் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    மேற்கண்ட அனைத்தும் நம் தமிழகத்தில் செயல் வழிக்கற்றல் முறையில் இருக்கிறது. இருப்பினும் ஆசிரியர்கள் அதை உணர்ந்து கல்வியின் மாற்றத்தை உணர்ந்து , பழைய முறையான மனப்பாடம் செய்தலை விட்டு ஒழித்து, புரிந்து கற்றலை முழுமையாக செயல் படுத்த முன் வரவேண்டும். நமக்கு செயல் வழிக் கற்றலில் ஏற்படும் அசொளகரியங்களை மறந்து , புதுமைகளை கடைபிடித்து வருங்கால  இந்தியாவின் வளமைக்கு உதவ வேண்டும்.

     


.

Friday, July 16, 2010

ஆடி நம்பிக்கை ...!

         ஆடி  பிறந்தாச்சு இனி புதுமண தம்பதிகள் விருந்து என்ற பெயரில் பிரிப்பு நடக்கும் ...இது ஒன்றும் காலாச்சாரம் அல்லது நடைமுறை சம்பிராயம் அல்ல . இதுவும் ஒரு மூட நம்பிக்கை தான்.

         குழந்தை பிறப்பு  நம்பிக்கைகளில் இதுவும் ஒரு மூட நம்பிக்கை. குழந்தை கொடி சுற்றி பிறந்தால் வீட்டிற்கு ஆகாது. கழுத்தில் மாலை சுற்றி பிறந்தால் மாமனுக்கு ஆகாது. கர்ப்ப காலத்தில்  இரட்டை வாழைப்பழம் தின்றால் , இரட்டை குழந்தை பேற்றை தரும்.

      கரு உற்ற  தாய் கேட்பதை வாங்கி தராவிட்டால் , பிறக்கும் குழந்தைக்கு காதில் சீல் வடியும் . மாதவிலக்கு உள்ள பெண் குழந்தையை தொட்டால் குழந்தைக்கு பால் செரிக்காமல்  வந்தி எடுக்கும் . இரவில் முழங்காலையும் , கையையும் ஊன்றி படுக்கும் குழந்தை வீட்டில் ஆடு , மாடு நோய் பட்டு தங்காது.குழந்தை தலையில் இரட்டை சுழி இருந்தால் வீட்டுக்கு ஆகாது. ஆறு விரலுடன் பிறந்தால் அதிர்ஷ்டம் .


      நட்சத்திர பலன் தான் ஆடி தம்பதிகளை பிரிக்கிறது. மூல ,ஆயில்யம்  நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் பெண்ணாக இருந்தால் மாமியாருக்கு ஆகாது. (மாமியார் அம்மாவா மாறிட்ட எப்படி ஆகாது ). "உத்திரத்து தாலி உறியிலே " உத்திர நட்சத்திரத்தில் பிறக்கும் பெண் குழந்தை கணவனுக்கு ஆகாது. சித்திரை நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது .
.
   சித்திரை அப்பனுக்கு ஆகாது . ஆகவே ஆடியில் கலவி சித்திரையில் குழந்தை பிறப்பை தருமாதலால் ஆடி அழைப்பு நடைமுறை படுத்தப் பட்டு , விருந்தளிப்பு என்ற பெயரில் பிரிப்பு நடைபெறுகிறது . சித்திரையில் குழந்தை பேற்றை தடுக்கவே தாய் வீட்டு அழைப்பு ஆடியில்

 .
      கடையில்
ஆடித்  தள்ளுப்படி
ஆகுமே வீட்டிற்கு...!
  ஆகாதே வீட்டிற்கு ஆடி
 தள்ளிப் படு டி... !

     ஆடி பாடி சொல்லிட்டேன் ....நம்பிக்கை  வீணடிக்க விரும்பலை ...ஆகவே இன்னும் மாமியார் வீட்டு அழைப்பு இன்றே கிளம்பி விட்டேன். புது துணியாவது கிடைக்குமில்லை. கொஞ்சம் நிம்மதியும் கிடைக்குமில்லை.

Thursday, July 15, 2010

பள்ளிக் கூடம் சோறு போடுமா...?

கல்வி  வளர்ச்சி  நாள் இன்று என் பள்ளியில் சீறும் சிறப்புமாக அன்புள்ள சீன அவர்கள் சிறப்புரையுடன் என் பள்ளியில் நடைபெற்றது. சீன அவர்கள் முயற்ச்சியில் என் பள்ளியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை வழக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு , இன்று பத்து மாணவர்களுக்கு சீருடை சீனாவின் பொன்னான கரங்களால் வழங்கப்பட்டது.


   "தான் ஒரு பேச்ச்சாளர் இல்லை "என்று தொடங்கினாலும் குழந்தைகளுக்கு காமராசரின் கல்வி பணிகளை மிக அருமையாக சொன்னதுடன் , இம்மாதிரி விழாக்களில் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் . அனைத்து வகுப்பிலும் பேச்சுக்  கலை  வளர்க்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளை பிறப்பித்தார் .

        "ஆசிரிய பணி அறப்பணி அதற்கே நீ உன்னை அற்பணி"  சீனாவின் வார்த்தைகளின் உண்மை நிலைமையை நான் நினைத்ததன் விளைவு இந்த பதிவு.
  
     இன்று அற்பணிப்பு என்பதை விட ஆசிரிய பணியை ஒரு தொழிலாக கொண்டு காசுக்கு வேலை பார்க்கும் ஒரு தொழிலாக நினைப்பதன் விளைவு தான் ஆசிரியர்களை பற்றி தவறான செய்திகள் பத்திரிகையில் வருகின்றன. ஆசிரியர்கள் கருத்து திணிப்பாக பாடம் கற்பிப்பதை  கருதாமல் , ஒரு சிறந்த குடிமகனை , நல்ல ஒழுக்க சீலனை உருவாக்குவதாக தம் பணியை நினைத்தால் ,கருத்து திணிப்பு என்பது மறைந்து உண்மை உணர்த்துதல் என்ற நிலை பிறக்கும்.


       ஒரு கொத்தனார் போல் காலை ஒன்பது மணிக்கு கரண்டி பிடித்தோம் , மாலை ஐந்து மணிக்கு கரண்டி கீழே வைத்தோம் என்ற நிலையில் ஆசிரியர்கள் காலை சாக்பீஸ் பிடித்தோம் கருத்துகளை , கொத்தனார் கலவையை அள்ளி பூசுவது ,திணிப்பது போல்  மாணவர்களிடம் திணித்தோம் என்று இருப்பார்களேயானால் , கல்வி திட்டத்தில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் கல்வி வளராது , பின் கல்வி வளர்ச்சி நாள் எப்படி உண்மையாகும் .

    நான்கு பாட திட்டம் ஒருங்கிணைந்து சமசீர் கல்வி முறை கொண்டுவந்தாலும் ,கல்வி சென்று அடையும் முறையிலும்  சமசீர் வேண்டும் அல்லவா...?

   தனியார் பள்ளி ஆசிரியர்களை போல் அரசு,அரசு உதவி பெறும்  பள்ளி ஆசிரியர்களும் பணி புரிய வேண்டும் . குறைந்த சம்பளம் அதிக உழைப்பு தரும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் காட்டும்  அற்பணிப்பு போல் அனைத்து போர்டு ஆசிரியர்களும் உழைக்க வேண்டும் .அதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி முறையிலும் , பாடதிட்டத்திலும் பொதுவான கட்டமைப்பை நோக்கும் கல்வியாளர்கள் தரமான கற்றல் மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   சமச்சீர் என்பது எல்லா விதத்திலும் இருக்க வேண்டும் .


       சமீபத்தில் மாறுதலுக்கு சென்று வந்துள்ள என் நண்பர் ," பணியிடங்கள் மறைக்கப் பட்டு , அரசியல் செல்வாக்குடன் பணம் கொடுத்து ஆசிரியர்கள் தனக்கு வேண்டிய இடம் பெறுகின்றனர் "என்று  கூறினார். '' நான் அரசு எந்தவித ஒளிவு மறிவு இல்லா மாறுதலை நடத்துவதாகவும் , இது போதுமான பணியிடம் இல்லாததால் , கிடைக்காதவர்கள் சொல்லும் கருத்து" எனவும் கூறி சமாதானப் படுத்தினேன்.  

     சரி நீங்கள் கூறுவதையும் ஒப்புக் கொள்கிறேன் .நான் சென்றபோது ஒரு ஆசிரியருக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை , அது அவருக்கு கிடக்கும் பணியிடம் தான் ஆனாலும் காசு கொடுத்து பெற்றுள்ளார். ஆணை அவர் கலந்துகொண்டு பெற்றதாக அந்த மாலையே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு இன்னும் பணி மாறுதலுக்கான ஆர்டர் வரவில்லை என்று ஆதங்கப்பட்டு சொன்னாலும் அவரின் வாதம் எனக்கு பிடித்தது.

   காசு கொடுத்து மாறுதல் பெறும் ஒரு நபர் அரசு இயந்திரம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று நினைத்து , பள்ளிக்கு செல்லாமல் சம்பளம் வாங்கும் வாய்ப்பு இருக்கும் , அல்லது நீங்கள் அடிக்கடி சொல்லுவது போல் கொத்தனார் வேலை மாதிரி தொழிலாக செய்வான், உண்மையான அற்பணிப்பை கொடுத்த காசு எடுக்க டுயுசன் வரச்சொல்லி பிழைப்பு நடத்துவார்.அல்லது காசு கொடுத்து வாங்கிய சோகத்தில் பாடமே நடத்த மாட்டார். அதை விடுங்கள் உண்மையான இடம் கிடைக்காதவன் இதே மன நிலையில் பாடம் கர்ப்பித்தலில் ஆர்வம் காட்ட மாட்டான். கல்வி இதனாலும் பின் தங்கும் என்கிறார் .  அவரின் பேட்ச்சில் உண்மையும் உள்ளாது . அரசும் இது மாதிரி தவறுகள் நடக்காமல் பர்ர்க்க வேண்டும் . கல்வி வளர்ச்சியில் இதுவும் தேவை  .

  மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற, சரியான பாதையை தேர்ந்த்தெடுக்க ,   காமராசர் போன்ற நாட்டுக்குளைத்த பெரியவர்கள் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப் பட வேண்டும். தலைவர்களின்  இளமை வரலாறு தான், அவர்களை பிற்காலத்தில் தேசத்திற்கு உழைக்கும்  தலைவர்களாக உயர்த்தியது என்பதை உணர்த்த வேண்டும்.


காமராசர் பிறரை பார்த்து எழுத்தாத (காப்பி யடிக்கத) இளமை பழக்கம், வரிசையில் சுண்டல் வாங்கிய பழக்கம், சுதந்திர போராட்ட பேச்சுக்களை  கேட்க கடையை அடைத்து சென்றது, சமயோகித புத்தியால் யானையை அடக்கியது போன்றவைகள் தான் காமராசரை பெரும் தலைவராக்கியது என்பதை குழந்தைக்களுக்கு உணர்த்த வேண்டும் .

"பள்ளிக் கூடம் சோறு  போடுமா...? ஆடு மாடு சோறு போடும் ." என்று சேரன்மாதேவி ரயில்வே கிராசிங்கில் ஆடு மேய்ப்பவன் மூலம் கிராசான வியாசம் ,காமராசர் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி , மதிய உணவு திட்டமாக உருவாக்கியது. குல கல்வி முறை எதிர்த்த காமராசர் பட்டி , தொட்டி எல்லாம் பள்ளிகளை நிறுவ கட்டளையிட்டவர். அண்மைய கல்விக்கு அச்சாணியாக விளங்கியவர் நம் கருப்பு காந்தி காமராசர்.

    காமராசர் பிறந்த நாளில் அரசு வயது மூப்பு கருத்தில்  கொண்டு பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் . அதற்கு தனி திறமை வெளிப்படுத்த  , பிராஜெக்ட் தயாரித்தல் தான் பதவி உயர்வு என ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும் .அனுபவம் மட்டுமே ,அதாவது பணியின் எண்ணிக்கையை கொண்டு மட்டுமே , பதவி மூப்பு என்பது தவறானது ,மேலும்  முட்டாள் தனம் என்பதை ஆசிரியர்களும் உணர்ந்து செயல் பட வேண்டும் .அனுபவத்துடன் ஆசிரியர்கள் திறமையை நிருபிக்க வேண்டும் .


     காமராசரின் கே பிளான் போல் இளையவர்களுக்கு வழிவிடும் திட்டம் ஏற்படுத்த வேண்டும். வயது ஒரு தடையாக இருக்க கூடாது. குறைவும் ,கூடுதலும் கல்வி பணியில் பார்க்க கூடாது.நேரடி கல்வி அலுவலர் பணிக்கு குறைந்த பட்சம் வயது நிர்ணயம் பணி அனுபவம் உள்ளவர்களை தடுப்பதாக உள்ளது. இக் குறைகள் கல்வி வளர்ச்சி நாளில் குறைக்க பட வேண்டும்.


     காமராசர் பிறந்த நாளிலாவது நாம் நம் பணியை சிறக்க சமச்சீராய் பணி புரிந்து, மாணவர் அறிவு கண் திறப்போம். 

Wednesday, July 14, 2010

கல்வியும் பொதியாய்

அவசர அவசரமாக
புத்தகத்தை திணித்து
பொதியாய்  பையுடன்
குழந்தையை பேருந்தில்
திணித்து அனுப்புகிறாள் அம்மா...
அங்கே
கல்வியும் பொதியாய்
திணிக்கப்படுகிறது ...!


படிப்பும் இனிப்பாய்
புகுத்தாமல்
புரிய வைக்கும் போது ....
சமச்சீர் கல்வியால்
இது சாத்தியமாகட்டும்..!

Tuesday, July 13, 2010

மனிதா மாறிவிடு ..!

 அம்மா அணில் பாடுமோ
 இனி வரும் குழந்தை ...
 அழிகின்ற மரத்தோடு
 அழிவது அணிலுமே ...!

  அலைபேசி
     கோபுரங்கள் சாய்வதில்லை
  சாய்ப்பதெல்லாம்
    காக்கை ,குருவிகள் தான்
  குயில் பாட்டும்
    அனிமேசன் காட்டும்
  குயில் குரல் இனிமை அறியா
   வளரும் நம் சந்ததி ...!
  மனித முயற்சி
    இனி
  இயற்க்கைக்கு ஏற்படுத்துமோ அலர்ச்சி..?

 அறிவியல் வளர்ச்சியில்   
 கடல் நீரும் குடிநீராய்
 ஆறு , ஏரி , குளத்து நீரும்
 மீன்களின் கண்ணீராய்
 சில துளிகள் மட்டும் ...!
            
 மரங்களின் நிழலில்
இயற்கையோடு சுதந்திரமாய்
இருந்த மனிதன்
நிலை கதவுகளாலுக்கும் 
ஜன்னல்களுக்கு இடையே       
அடைபட்டு கிடக்கிறான்
வெயிலின் வெப்பு தாங்காமல்  ...!

 மரங்களின் வேர்காளால்
 துளைக்கப்பட்ட பூமி
 பிரசவித்தது
தூய காற்றையும் ,மழையையும்
மேகம் கூடாமல்
கலைந்ததால் .....
பூமியும் மலடியாய்
வெடித்து பிளவுபட்டு
எரிமலை குளம்பாய்
சுனாமியாய்
வடிக்கிறது கண்ணீர் ....
மனிதா மாறிவிடு
இல்லை இயற்க்கை
உன்னையே மாற்றி விடும்
புதைத்து விடும் ...!

Monday, July 12, 2010

வெறிக்கான விதை

இருள் கவ்வி ....
ஒளி மங்கும்
வாழ்வினில் கஷ்டம்
மட்டும் நினைப்பவனுக்கு ....!
கஷ்டமாகினும் நஷ்டமாக
கருதாமல் ...
படிப்பினையாக கருதுபவனுக்கு
இருள் மங்கி
ஒளி பெருகும்
வாழ்வினில் கஷ்டம்
இஷ்டமாய் நினைப்பவனுக்கு ...!

பாதைகள்
வெண்சாமரம் வீசி அழைப்பதில்லை ...
முட்களாலும்  கற்களாலும்
நிரம்பி ...
நம் கால்களை ரணப்படுத்தியவை
இருப்பினும்...
நாம் நடைபயில பயில
உருவானவை தான்
இன்றைய பளிங்கு சாலைகள்
வெற்றியாளனின்  முகம் போல ...

சூரிய கதிரும்
மேகக் கூட்டத்தை கிழித்து தான்
பூமியை முத்தமிடுகின்றன...

பூமியில் பிறக்கும்
ஒவ்வொரு குழந்தையும்
அழுகிறது ....
வலியுணர்த்தும்
சுவாசம் சீர்படவே ...

நீயும்
அவதாரமெடு
அக்கினி பிழம்பாய்
தடைகளை பொசுக்கி....
நடைகளில் வேகம் கூட்டி
விடை காண் தோல்விக்கு ...!

தோல்வியும் பயந்து நடுங்கும்
உன் வியர்வை வெப்பில்
நீராவி விசைபோல்
மன ரயிலை இயக்கு
வெற்றியே உன் இலக்கு ...!

உன் உழைப்பு
விழலுக்கு இறைத்த நீரா..?
இல்லை... இல்லை ...
அது
இலை விடும் நீராவி போக்கு
ஒளி சேர்க்கைக்கு உதவும் பச்சையம்
 உனக்கு வெற்றி நிச்சயம் ...!  
  
இலை உதிர்தல்
இழப்பல்ல
இளவேநீர்க்கான ஆரம்பம்
நீ இழப்பதெல்லாம்
 புது பொலிவுடன்
பெறுவதற்காகவே ...
தோல்வி வெற்றிக்கான சூரியான்
ஆகவே
உதிக்க விடு
மன அழுத்தத்தை பறக்க விடு ..!


வெறிக்கான  விதை
மனதில்  புதை
தோல்வி களை நீக்கி

உளி பட்ட கல்லாய்
குயவன் கை பட்ட
களிமண்ணாய்
தோல்விகளால் உன்னை உருவாக்கு ...!

 

Sunday, July 11, 2010

பழகிய தெரு

        நாங்கள் குடி இருந்த  பழைய வீட்டிற்கு சென்றேன். இருபது வருடம் குடி இருந்த  வீடு,இன்று அதை விட்டு சென்று ஆறு வருடம் இருக்கும் .  சொந்த வீடு அல்ல , இருந்தாலும் அப்பகுதியின் அனைத்து வீடுகளும் மாறி இருந்தன. ஆட்களும் ஒரு சிலரை தவிர அனைவரும் மாறி இருந்தனர். சொந்த வீட்டு நபர்களும் , வீட்டை விற்று குடி பெயர்ந்து இருந்தனர்.
      
           பழகிய தெரு , முகங்கள் புதிது. மொழி தெரியாத ஊரில் வழி தவறி வந்தவன் போல் , அறிமுகமான ஆள் தேடி அலைந்தேன். மாகாதேவன் தென்பட்டவுடன் , பெரு முச்சு விட்டேன் . "வா சரவணா, பழைய ஆள் யாரும் இல்லை , நானும் காலி பண்ணிட்டு போயிட்ட , நம்ம பாஸ்கர் வீடு மட்டும் தான்..." என பழமையை நினைவு ஊட்டினார்.

      மதுரை மாநகராட்சி தெருக்களை அருமையாக சிமிண்டு கற்கள் கொண்டு அழகு படுத்தி உள்ளது. நான் படிக்கும் காலங்களில் தெருக்கள் மணல் மற்றும் கற்களால் ஆனவை. . சாக்கடை வாரத்தில் ஒருநாள் வெளியேறி விடும். நான் என் நண்பர்களுடன் தெருக்களில் தான் தெரு விளக்கின்  கீழே படிப்போம். படித்த பின் அதன் அடியிலே படுத்து உறங்குவோம்.

      மதுரை தூங்க நகரம் என்பதற்கு ஏற்ப நாங்கள் படிக்கும் நாட்களில் தெரு விளக்கின் அருகில் உள்ள அடி குழாயில் , பத்து மணிக்கு ஆரம்பித்து இரண்டு  மணி வரை தண்ணீர் எடுத்து கொண்டு இருப்பார்கள்.ஆண்களும், பெண்களும் உலக விசயங்களை   பேசிக்கொண்டும் ,அரட்டை அடித்து கொண்டும் தண்ணீர் பிடிப்பது ஒரு பொழுது போக்கு .சில சமயங்களில் பக்கத்து தெருவில் இருந்தது வரும் போது சண்டையும்  நடக்கும். தமிழ் அகராதியில் அர்த்தம் தேடும் வார்த்தைகள் தான் அதிகமாக பேசப்படும்.

    தண்ணீர் பற்றாக்குறை என்பது இல்லை. பகலில்  மணலூர் தண்ணீர் வரும், அது மண்  வாடை அடித்து இருக்கும் என்பதால் குடிக்க விரும்ப மாட்டார்கள். இரவில் கோச்சடை தண்ணீர் வரும் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் . எங்கள் பகுதியில் ஜார்ஜ் பூங்காவில் புதிதாக குடி நீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்ததால் , அதற்கு இரண்டு பட்குதியில் இருந்தும் தண்ணீர் நிரப்ப பட்டு வந்தது.
    
    சி. எம். ஆர். ரோட்டில் உள்ள அந்த பூங்கா தான் எங்களின் பகல் படிப்புக்கு ஒரு புகலிடம். தண்ணீர் தொட்டி கட்டும் போது , பூங்காவின் பாதி இடம் சுருங்கி விட்டது. காலை , மாலை ரேடியோ கேட்டு இருக்கிறோம். பெரியவர்களுக்கு தங்களின் கதைகளை பேசுவதற்கு தனி இடங்களாக இருந்தது. நான் பேச்ச்சு போட்டுகளில் கலந்து கொள்ளும் போது அந்த பார்க்கில் தனிமையில் பேசி இருக்கிறேன். யாரும் நம்மை பார்பதாக உணரப்பட்டால் காக்கை விரட்டி சமாளித்தும் இருக்கிறேன். பல மாணவர்கள் சத்தமாக படிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தாலும் அவர்கள் யாரும் பேச்சு போட்டியில் கலந்து     
கொள்வதில்லை என்பது ஆச்சரியம் .

      பேச்சு மிகவும் முக்கியமான ஒன்று. பேச்சு மிகவும் சக்தி வாய்ந்தது. கவர்ச்சியான பேச்சு ஆட்சியையே   மாற்றி விடும். "என் இரத்தத்தின் இரத்தங்களே .." "என் உடன் பிறப்பே ..."என்ற கவர்ச்சி அழைப்புகள் தமிழகத்தில் எத்தனை மாற்றங்களை  ஏற்படுத்தி உள்ளன.   
  
      சாக்ரடீஸ் பேச்சு கிரேக்க மனிதனை சுய சிந்தனைக்கும் , பகுத்தறிவுக்கும் அழைத்து சென்றது. இங்கர்சால் பேச்சு மக்களை மதத்திலிருந்து மாறுபட்டு சிந்திக்க தூண்டியது. வல்டோர் பேச்சு பிரஞ்சு புரட்ச்சிக்கு வித்திட்டது. சீன மக்களின் விடுதலைக்கு சன்யாட் சென்னின் சமத்துவ பேச்சு உதவியது. துருக்கியின் புத்தெழுச்சிக்கு கமால் பாட்ஷா வின் பேச்சு . இந்தியாவில் சமுக புரட்சிக்கு பெரியார்.பெரியார் கொள்கைகளை மேடைகளில் முழங்கி எழுச்சி ஏற்படுத்தினார்.

    இன்று தெரு விளக்கின் கீழே யாரும் படிப்பதில்லை.தெரு விளக்கும் கண்ணீர் விட்டு தன் ஒளிக்கதிர்க்களை பாய்ச்சுகிறது.   பேச்சு துணைக்க ஏங்குகிறது. தெருவும் வெறிச்சோடி இருக்கிறது. தெருவில் ஓரத்தில் எங்கோ ஒரு மூளையில் ஒரு பெண் தன் கண்களால்  எனக்கு பின்னல் நின்றிருக்கும் பெயர் தெரியாத கல்லூரி மாணவனிடம் பேசுவதை மட்டும் அறிய முடிந்தது. "உள்ளே போடா.." என கனத்த குரல் கேட்டு அதிர்ந்தது விசாரித்தேன் . "இன்று பசங்க யாரும் முன்ன மாதிரி தன் தெருவில் உள்ளவர்களிடம் சகோதர  உணர்வுடன் பழகுவதில்லை , பெண்களும் பசங்களை கவுத்திவிடுகிறார்கள் ,வெட்டியாக பெரியவங்க தான் சண்டை போடா வேண்டிஉள்ளது.இப்ப போன பையன் , அதோ வெளிய நின்று கொண்டு ஏக்க பார்வை பார்க்கும் பெண் வீட்டிற்கும் பெரிய தாகறாரு ...."என கதை சொல்லி முடித்தார்.

அதற்காக காதலிக்க கூடாது என்று அர்த்தமில்லை.   என் காலங்களில் யாரும் காதலிக்க வில்லை என்று சொல்ல வில்லை,என் வீட்டி ஓனரின் மகளும் பின் வீட்டு கிருத்துவ பையனும் மொட்டை மாடியில் காதலித்தனர் . வீட்டில் பிரச்சனை வரும் என்றவுடன் நாசுக்காக ஒதுங்கி கொண்டனர். இது தான் காதலுக்கு மரியாதை.       

    இன்று பேப்பரில் வரும் செய்திகளை பார்க்கும் போது காதல் கொலைகள் பெருத்து விட்டன. சங்க இலக்கியங்களில் காதல் பேசும் நாம் இன்று இலக்கணம் தவறி பெற்ற மகனையோ , மகளையோ கொலை செய்யும் அளவிற்க்கு கோபம் வெளி படுத்துபவர்களாக உள்ளோம்.

     "பூத்த பொங்கர் துணையோடு வதிந்த
      தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
      மணிநா ஆர்த்த மாண் வினைத் தேரன் "
என்ற அகநாநூற்று   தலைவன் பெரு வேட்கையோடு தலைவியை காணும் போது சாலை மருங்கே இன்பம் துய்க்கும்  வண்டுகளுக்கு தன் தேர் மணிகள் துன்பம் கொடுக்கும் எனபது அறிந்து அதை அறுத்து எரிந்தது செல்லும் தலைவன் தான் தமிழன் . ஆனால் இன்று தன் பெண்டு பிள்ளைகளின் இன்பம் பொறுக்காமல் தலை கொய்தி விடும் அவலம்  .
      பெற்றோர்கள் காதலிக்கும் முன் காதலை தடுங்கள் . பிறப்பின் மகிமை உணர்த்துங்கள். மீறி காதலித்தால் தயவு செய்து  காதல் கொலைகள் செய்யாதீர்கள்.

     பழைய நினைவுகளுடன் நான் புதிய சாலையில் பயணிக்கிறேன். பயணம் தொடரும். 

Saturday, July 10, 2010

வாசிப்பு திறனுக்காக ...

  இன்று காலை புதிய சமச்சீர் கல்வி திட்டத்தின் வாசிப்பு திறனுக்காக என் ஆசிரிய தோழன்களுடன் உருவாக்கிய குறுந்தகட்டின் மேம்பாடு குறித்தும் அதனை மாணவர்களுக்கு எடுத்து செல்வது குறித்தும் கருத்துரையை கேட்க அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியின் மூத்த பேராசிரியர் சாந்தி அவர்களை பார்க்க சென்றேன். இனிமையான வரவேற்பு.

     தமிழர்களின் சிறப்பு பண்பு வரவேற்று உபசரிப்பது. இன்றைய சூழலில் வீட்டிற்கு அழைத்து உபசரிப்பது  என்பது கேள்விக் குறியாக இருக்கிறது . பார்ட்டி என்பது அனைவரையும் அழைத்து ஏதேனும் ஒரு ஓட்டலில் கொடுப்பதாகவே இருக்கிறது.

       ஊரை கூட்டி தெருவில் பந்தலிட்டு, நாலு பேரு பார்க்க , நாற்காலி போட்டு உட்கார்ந்து , உற்றார் உறவினருடன் பேசி, "ஏய், ராமு , இது என் மக புள்ள பேரன் ,சீமையில இருக்காகன்னு சொன்னேல...பெரிய படிப்பு படிச்சுருக்காக..." என நம் பாட்டி சொல்லும் போது  , வெட்கி தலை குனியும் இனிமை எவ்வளவு பணம் கொடுத்தாலும் கொண்டு வரமுடியாது.

     இன்று கையடக்க உலகம் போல் ,சொந்தங்களும் கைக்குள் சுருங்கிவிட்டன.ஆகவே , வீட்டில் வரவேற்று உபசரிப்பது என்பது மறைந்து கொண்டிருக்கும் ஒரு பண்பாகவே உள்ளது.  பெற்றோர்களும் வீட்டிற்கு வேற்று மனிதர்கள் வருவதை தவிர்க்க வலியுறுத்துவதால், நாம் உறவுகளற்று உறங்கி கொண்டிருக்கும் சுவர்களுக்கு மத்தியில் வாழ்கிறோம்.இதுவும் நம்மை தனிமைபடுத்தி , நம் சிந்தனைகளை கரப்பான் பூச்சி போல் அழுகியவைகளை திண்ணும், அருவருக்க தாக்கதாக மாற்றிவிடும்.

       கை அலை பேசி வந்த பின் உறவுகள்  பலப்பட்டதாக நாம் உணர்ந்தாலும், அவை கட்டணங்கள் மூலம் , இலவச அழைப்புகள் மூலம் நம்மின் துரங்களை தான் குறைத்தன. ஆனால் ,உறவுகளின் பந்தங்களை வலுப்படுத்த நேரடி தொடர்பை தவிர்க்க உதவியாக இருந்தன என்பது தான் உண்மை. நேரடியாக சந்திப்பது என்பது உண்மையான அன்பின் வெளிப்பாடாக இருக்கும். நேரடியாக ஒருவரை வீட்டில் அழைத்து பேசுவது என்பது அவருடன் சாதாரணமாக பேசுவதாக இருக்காது .அங்கு வாய் மட்டும் பேசாது, கண், உடம்பு என அத்துனையும் பேசும். ஏன்?,உதிரமும் பேசும்.

   கலைஞ்ர் டி.வி பேச்சாளர் விநாயக மூர்த்தி சந்திப்பு கிடைத்தது. நல்ல ஒரு தமிழ் பேச்ச்சாளர் . அவரின் உரையாடலின் போது தெரிந்தது. அனைவரும்  கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவர்கள் தான் , கஷ்டம் என்பது வெற்றியின் ஆரம்ப புள்ளி என்பது அவரின் பேச்சு வெளிபடுத்தியது.வைர வரிகள் அவரின் பேச்சின் ஒவ்வரு வார்த்தைகளிலும் தெரிகிறது.

 இந்த சமுகம் ஒரு பொறாமை படைத்தது , நல்ல சட்டை போட்டாலே , இது அந்த வருமானத்தில் தானே கிடைத்தது என காது படவே பேசுகின்றனர்.நண்டு கதை அதற்கு தான் சொல்லி வைத்தான் போல என அவருக்குரிய நகைசுவை உணர்வுடன் பேசினார். அவரின் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினார். "நானும் தான் ஒரு தமிழாசிரியன் , எனக்கும் சங்க இலக்கியம் தெரியும், புறநானுறு, அகநானுறு கரைத்து குடித்திருக்கிறேன் , பெரிதா அவன கூப்பிடுராங்க ,அதுவும் சம்பந்தமில்லாமல் ஏதோ நாலு ஜோக் சொல்லுறான் , அவனுக்கு பத்தாயிரம் கொடுத்து மரியாதை .." என நீண்ட அவரின் மனவருத்தம் ,அவரை பற்றி பிறர்  கூறும் கருத்துக்கு அவரின் பதிலடி ,"பேச்சு அவை அறிந்த ஒன்றாக இருக்க வேண்டும், அது படித்ததை கொட்டியாதாக இருக்க கூடாது, இது தான் வித்தியாசம் ..."


   பேச்சு வாக்கில் அறிஞ்ர் அண்ணா , இந்திரா காந்தி ஆகியோரின் வாசிப்பு திறன் பற்றி செய்தி புதியாக இருந்தது. இந்திரா காந்தி உலகத்திலேயே வேகமாக வாசிக்க கூடியவர் மேலும் அவரின் பெயர் இதற்காக கின்னசில் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் அறிந்தேன்.

      " பன்முக திறன் கொண்டவரே ஆட்சி பீடத்தில் அமர முடியும் . சாதாரணமாக முதல்வர் கனவுகாணும் எவரும் அமார முடியாது. பதவியில் உள்ள அனைவரும் நிட்ச்சியாமாக அரசியல் பின்னனி மட்டும் இருக்காது , பன்முக திறமையே அவர்களை வெற்றி அடைய செய்திருக்கும் . ஆகவே உங்கள் முயற்ச்சியில் சோர்ந்து விடாதீர்கள் , , மாணவர்களுக்கு நல்ல ஒரு வாசிப்பு பயிற்சி ஏற்படுத்தி கொடுக்கும் உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன் . மேலும் என்னாலான உதவியை உங்களின் முயற்சிக்கு செய்கிறேன் "என்ற ஆறுதல் வார்த்தை சாந்தி ஆசிரியையின் வெற்றிக்கு டானிக். என்போன்ற வளரும் ஆசிரியர்களுக்கு ஒரு உற்சாக பானம்.     

பள்ளி வாழ்க்கை ...

பைகள் கனக்கிறது
கைகள் வலிக்கிறது
மனம் விட்டு சொல்லி அழுகிறது 
மூளை சூட்டில் ...
பள்ளி கூடம் பிடிக்கவில்லை ...!

வண்ணமையமான வாழ்வு எண்ணி
எண்ண  இருட்டில் ...
வெள்ளை ஒளி பூசி
பிரகாசமாய் தான் ஆரம்பிக்கிறது
பள்ளி வாழ்க்கை  ...
இருப்பினும் சிவப்பு மையிட்டு
சிதைந்து போகிறது
இருட்டில்  தொடங்கி இருட்டிலேயே
முடிகிறது ....
வண்ணம் எண்ணங்களிலும் இல்லை
வாழ்விலும்  இல்லை
இருப்பினும் நம்
கல்வி மட்டும் மாறாத நிறத்தில் ...!

Thursday, July 8, 2010

இன்றைய காதல்

ஜன்னல் ஓரம்
ஆரம்பித்த காதல்
இரயில் பாதைபோல்
விலகி இருத்தாலும்     
இணையவே துடித்தது...!

காக்கை இட்ட
எச்சம் ஒட்டிய சட்டை போல்
அவள் வாழ்வும் கரையாய் ....

கோப்பை மதுவும் சிந்தியது
குமட்டி வருகிறது வாந்தியும் ..!

இனி மறைக்க ஒன்றும்  இல்லை
என்பதால்
புணர்ந்து முடிந்த நாய் காதலாய்
ஜன்னலோரமே முடிந்தது ...
இருப்பினும்
நாய்கள் துரத்துதல் தொடர்கிறது
அதிக தூரத்துதலுடனும்
முனகங்களுடனும்......!

Wednesday, July 7, 2010

கற்பிழந்த கன்னி

மனிதன் வாழ்வை வண்ணமாக்குகிறான்
காய்ந்துபோன தூரிகைகளைக் கொண்டு ...
கற்பிழந்த கன்னியாய்
இந்த பூமி ....
சல்லடை துளையாக்கி
ஒசோனை உடைத்து
சிவப்பு  தீ  கக்கி
கொல்லி வைக்க வருகிறான்
சூரியன் நகைத்து ....
தனக்கு தானே கொல்லி வைக்கும் மனிதன் .

பிறக்கும் முன்னே தன்
சந்ததிக்கு பால் ஊற்ற
படைத்தானோ  பாலித்தீன் ...!
அடித்தானோ  மண் துளையை
தண்ணீருக்கான யுத்தம்
தடுக்கத்தானோ வேற்றுக் கிரக பயணம்..!

கார் கக்கும் புகை
சூடாக்கும் ....
சுட்டிலே புகைகிறது
மனித இஞ்சினும் ...!

பதைக்கிறான் உண்மை மனிதனும்
விதைக்கிறான் மரங்களை ...
இன்னும் நம்பிக்கையில்
நாளைய உலகமாவது நலமாய் இருக்கட்டும்..!

நகரமையமாதல்
நரகமையமாதலாய்
ஆறு , ஏரி , குளம் , கம்மாய்
மூடி ...
காய்கிறேன்
நுனி நாக்கு வறட்சி  போக்க...!




Tuesday, July 6, 2010

மாணவர்களை அடிப்பது சரியா...? தவறா..?

 மாணவர்களை அடிப்பது சரியா...? தவறா..?

இது இன்று அனைவர் மனதையும் உறுத்தும் கேள்வி. அதுவும் எல்,கே.ஜி.குழந்தையை முதுகில் அடித்ததை நாளிதழில்  படத்தில் பார்த்ததும் ...மனம் பதைக்கிறது.

   என் முதல் கேள்வி .....பிஞ்ச மனம் சேட்டை அறியுமா...?நல்லது கெட்டது அறியுமா...?
        கல்வி என்பது பாடத்தை திணித்தல் என்பது தவறான எண்ணம் .கல்வி என்பது உணர்த்துதல், புரியவைத்தல் என்பதை என்று அறிவர்..?
  

        படிப்பு என்பது அடித்தல் மூலம் தான் வரும் என்றால் வீட்டிலேயே பிரம்பால் அடித்து பெற்றோர் படிக்க வைக்க மாட்டார்களா..?
  ஆசிரியர்கள் அடிப்பதை தவிர்த்து , அன்பு , பண்பு , கனிவு, பணிவு , ஒத்துபோதல், தவறை எடுத்து உரைத்தல்,தைரியம் போன்றவற்றை வளர்ப்பவர்களாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
      கற்றல் என்பது புரிய வைத்தல் என்பதை உணராமல் இன்னும் திணித்தல் என்று இருந்தால் , அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆசிரியர்கள் கட்டுப்பட வேண்டும் .மனித உரிமை மீறலும் பாயும் என்பதை எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்  . 
       பாட சுமைகள் தான் நீங்கள் அடிப்பதற்கு காரணம் என்றால் தைரியமாக அரசுக்கு உங்கள் கோரிக்கைகளை வைக்கவும். யஷ்பால் கமிட்டி சுமையில்லா  கற்றலை வலியுறுத்துகிறது. சமச்சீர் கல்வியில் இன்னும் பட சுமைகளை குறைக்க வழியுண்டு. அதிகம் என்று உணர்ந்தால் எடுத்து சொல்லலாம். உங்கள் கோரிக்கைகளை அடுத்து
புத்த்தகம் வெளி வரும் முன் எடுத்து கூறலாம் .முத்து குமரன் கமிட்டி எடுத்து்ச்சொல்வது சுமையில்ல சுவையான கல்வி என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்.
           அடித்தால் தான் படிப்பு வரும் அடியுங்கள் என கூறும் பெற்றோர்கள் கண்டிக்க தக்கவர்கள். பெற்றோர்கள் தம் பிள்ளைகளும் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக அடிக்க தூண்டினாலும் , அடிப்பதால் படிப்பு வராது , வெறுப்பு தான் வரும் என்பதை எடுத்து சொல்லுங்கள். தம் பிள்ளைகளை அரவணைத்து அன்பால் ,மதிப்பெண் அவசியத்தை எடுத்து சொன்னால் நிச்சயம் உணர்ந்தது படிப்பான் . அது தான் நிரந்தரம்.

        கல்வி என்பது மதிப்பெண் சார்ந்ததாக இருக்கும் வரை பெற்றோரும் , ஆசிரியரும் தன்னையறியாமல் இத் தவற்றை  செய்வார்கள் என்பது தான் உண்மை. ஆகவே , நாம் அடிப்படை தேவையான கல்வியில் மாறுதல் உண்டாக்க சிந்திக்க வேண்டும். கல்வியாளர்கள் மதிப்பெண் அடிப்படையிலான மதிப்பிடுகளை தவிர்த்து புதிய உத்திகளை கையாள சிந்திக்க வேண்டும்.

      ஆசிரியர்கள் நவீன கற்றல் முறையின் அடிப்படையில் மாணவர்களுடன் நல்ல இணக்கத்தினை ஏற்படுத்தி , மாணவர்களுடன் ஒரு நட்பு ரீதியான தொடர்பை ஏற்படுத்தும் போது அடித்தல் என்பது மறைந்து , படித்தல் என்பது தானாக நிகழும் .

      ஆசிரியர்களைப் பார்த்தால் மாணவர்களுக்கு ஒரு வித பயம் ஏற்படாமல் , பக்தி  உண்டாக்க வேண்டும். மன இறுக்கம் தளர்ந்து , மன நெருக்கம் உண்டாக்க வேண்டும். அதுவே ஒரு வித கற்றல் செயல் தான். இக் கற்றல் முறை அனைத்து வித கருத்து திணிப்புக்களையும் தானாக செயல் படுத்தும். மாணவர் மன நிலை தானாக கற்றல் சூழலுக்கு மாறும். மன சுருக்கம் தவிர்த்து , அறிவு விரிவாக்கத்திற்கு பலன் தரும்.


   பிரம்பை தவிர்த்து ,மாணவ்ர் சுணக்கம் இன்றி படிக்க , மாணவரிடத்தில் இணக்கம் உண்டாக்கி , நம்மிடமும் , படிப்பின் மீதும் உள்ள பயம் தவிர்ப்போம்.

   கல்வி கற்பித்தல் முறை ஆசிரியரை மையப் படுத்துவதாக அமையாமல் , மாணவனை மையப்படுத்தும் விதத்தில் அமைப்போம். அதுவே மாணவனை நம்மிடம் பிரியமாக பழக சொல்லும் , சக மாணவன் உதவியை நாடச் செய்து , நிரந்தரமாக பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கும். ஒருங்கிணைத்து செயல் படுத்தும் தன்மையை ஏற்படுத்தும்.

   அடிப்பதை தவிர்த்து , படிப்பதை மேம்படுத்த முயற்சி செய்வோம். எதிர்காலம் வலுவுள்ளதாக அமைய வலுவான சிந்தனையை ஏற்படுத்த ஆசிரியர்களாகிய நாம் , நமக்குள்ளாக ஒரு விவாதம் செய்து கல்வியில் புதுமைகள் படைப்போம்  .

Friday, July 2, 2010

பள்ளி இயங்கும் இடத்தை நல்ல விலைக்கு விற்பனைச் செய்ய முயற்சிக்கின்றன .

      கல்வி செய்தி ஒன்று பிரபலாமான நாளிதழில் வாசிக்க நேர்ந்தது.” தனியார் பள்ளிகள் வருமான இல்லையென்பதால், அவற்றின் அரசு அங்கிகாரத்தை ரத்து செய்து , பள்ளி இயங்கும் இடத்தை நல்ல விலைக்கு விற்பனைச் செய்ய முயற்சிக்கின்றன . மேலும் இவற்றிக்கு உடந்தையாக ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கைக்கு செல்லாமல் , பள்ளி மூட முயற்சிக்கின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு அரசு வேறு பள்ளிகளில் வேலைக்கு அனுப்பாமல் அரசு வேலை இல்லை என தெரிவிக்க ஆணை யிட வேண்டும் “ என்பது தான் செய்தியின் விசயம்.

1.  இன்று தனியார் கல்வி நிறுவனங்களில் தான் மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அதிகம் படிக்கும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் அதிகம் என்பதால் , அனைவரின் கூட்டு முயற்சியிலும் , நிர்வாகத்தின் திறமையின் காரணமாகவும் ,வேன் ,பஸ் மூலமாக மாணவர்களை அதிகம் சேர்க்கின்றனர். ஆக, நல்ல தரத்துடன் (மாணவனுக்கு அதிக மதிப்பெண் பெற்றுத்தரும் கல்வி நிறுவனம்)பள்ளிகள் எந்த வித பிரச்சனையும் இன்றி மாணவன் அதிகம் சேர்ந்து, வருமானத்துடன் நல்ல நிலையில் இயங்குகின்றன.


2.  குறைந்த அளவு ஆசிரியர் எண்ணிக்கை கொண்ட தனியார் பள்ளிகள் தங்களை தக்க வைக்க போதிய மாணவர்கள் அந்த பகுதியில் இல்லாததாலும், அம்மாதிரியான தனியார் பள்ளிகள் வருமானம் பெருக வலியில்லாததாலும்,பஸ், வேன் வைத்து மாணவர்களை சேர்க்க முடிவதில்லை. ஆக , ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால்,ஆசிரியர்களும் சோர்வாகி , பள்ளியை இழுத்து மூடும் நிலைமையில் உள்ளது.

3. பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதால், அதாவது மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 40:1 என்ற நிலமையில் மாணவர் எண்ணிக்கை குறைவதால், அதிகமாக உள்ள ஆசிரியர்கள் வேறு தனியார் பள்ளிகளுக்கு பணி மாறுதலில்செல்கின்றனர்.
இவ்வாறு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனக்கதையாகி பத்து குழந்தைகளைக் கொண்டு இயங்கும் பள்ளியாக மாறுகிறது. இந்நிலமையில் மூடுவதே மேல் என முடிவெடுக்கும் பள்ளி செயலர் பள்ளி இடம் அதிகம் விலை போவதால் விற்பனைச் செய்கின்றனர் என்பது தவறான கருத்தாகும்.


4. பத்து குழந்தைகள் இருந்தாலும் அரசு குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் கட்டாயம் வேலை வாய்ப்பு வழங்கி , பணி பாதுகாப்பு அடிப்படையில் மாத ஊதியம் வழங்க வேண்டியது உள்ளது. ஒருவருக்கு குறைந்தது பதினெட்டாயிரம் இருக்கும். பளி மூடுவதால் ,அந்த ஆசிரியர்கள் கூடுதலாக மாணவர்கள் உள்ள பள்ளிக்கு செல்கிறார்கள் அங்கு அதிக மாணவனுக்கு பாடம் கற்பிக்கின்றனர். மேலும் , மூடும் பள்ளி மாணவர்கள் பக்கத்து பள்ளியில் சேர்ந்து படிக்க செய்கின்றனர். இதானால் அரசுக்கும் லாபம், ஆசிரியரும் , மாணவ்ரும் பாதிக்கப்படுவதில்லை.


5. யாரே ஒருவர் சதியால் தவறான செய்தி வெளியிட்டுள்ளனர்.இன்று நகரமாதல் காரணமாகவும் இடத்தின் மதிப்பு அதிகரித்து உள்ளது . இக்காரணத்தினால் மட்டுமே ஒருவர் தன் பள்ளியை மூடுகிறார் என்பதும் தவறானப் பார்வை. அதற்காக பள்ளியே மூடிவிட்டது பின்பு எதற்கு ஆசிரியருக்கு வேலைவாய்ப்பு என்பது தவறான கருத்து .அப்பள்ளி எந்த அளவு இதற்கு முன்னால் சேவை செய்திருக்கும், இநத ஆசிரியர்கள் எவ்வளவு அற்பணிப்பு செய்து உழைத்து இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் .

6. அப்படி விலைக்கு விற்பனை நோக்கம் உள்ளவர் பள்ளியின் அங்கிகாரத்தை மட்டும் விற்பனை செய்யலாம், இடத்தை தனியாக விற்கலாம்.அல்லது பள்ளியினை இடமாறுதல் செய்து , இடத்தை விற்பனை செய்யலாம். நீண்ட நிறுவனத்தை மூட அவர் மனம் என்ன பாடுபட்டு இருக்கும். ..?மாற்று சிந்தனையுடன் செயல் படுவோம்.

7. இட பிரச்சனைக்காக ஆசிரியர்கள் வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம். அவர்களும் இந்த செய்தியை படித்து எவ்வளவு பதைத்து இருப்பர். இனியாவது கல்வி சம்பந்தமான விசயங்களை வெளியிடும் போது என் போன்ற விசயம் அறிந்த அல்லது தனியார் பள்ளி சட்ட விதியை அறிந்து செய்தி வெளியிடுவது நலம்.


8. கிராம மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளதால், அதாவது மக்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து இருப்பதாலும் , வீட்டிற்கு ஒரு குழந்தை மட்டுமே உள்ளதாலும், அதுவும் ஆங்கில வழிக்கல்வியை நாடுவதாலும் , பள்ளியில் மாணவர் சேர்க்கை மிகவும் றைவாகவே உள்ளது. அதுவும் தேய்பிறைச் சந்திரனைப்போல வருடம் வருடம் தேய்ந்த நிலமையில் உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

      முடிவாக ஆசிரியர் மனம் நோகாமல் இருந்தால் தான் நாடும் வளம் பெறும் , சமூகமும் நலம் பெறும் , வீடும் , வீதியும் அமைதி தவழும் எனபதை சுட்டிக் காட்ட விருப்புகிறேன். அதேபோல் ஆசிரியரும் கெட்ட விசயங்களுக்கு துணைப்போகாமல் நம் பொறுப்பை உணர்ந்து செயல் படல், நமக்கும், சமூகத்திற்கும் நல்லது.  

Thursday, July 1, 2010

காசே தான் கல்வி அய்யா...!

  
உண்மை என்பது
எப்போதும்
அறியப்படவேண்டியது
சில போது
வாய்விட்டு உரக்கச்
சொல்லப்பட வேண்டியதாகும் !
                                                     -கலீல் ஜிப்ரான்

  இன்று இதை வாய்விட்டு உரக்க சொல்லப்பட வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது.
ஒருபுறம் அரசு கல்வி சாலைகளுக்கு குறைந்த பட்சம் கட்டணம் நிர்ணயத்திற்கு  பாராட்டும் , மறுபுறம் "கல்வி தந்தையர்" களின் எதிர்ப்பும் நிரம்பி வலியும் காலம் இது.
எதுவாயினும் காசு கொட்டிப் படிக்க வைக்க தாயாராக இருக்கும் பெற்றோர் !என்ன அவலம் இது !


   ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு இலவச கட்டாயக் கல்விக்கான சட்டம் பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு , இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்தும் வரலாற்று சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்வேளையில் சில விஷயங்களை நாம் வாய் விட்டு பேசித்தான் ஆக வேண்டும்.

1. ஒன்று முதல் எட்டு வரை பெயில் ஆக்காத இலவசக் கட்டாயக் கல்வி எதற்கு?

          ஐந்து முதல் பதினான்கு வயது நிரம்பிய அனைத்து மழலைச் செல்வங்களுக்கும் கட்டாய இலவச கல்வி கொடுப்பதனால், "மாணவன் மொழி வளமை " பெற்று , நன்கு எழுத படிக்க தெரிந்தவனாகி  விடுகிறான்.
        அத்தோடு கல்வியின் கடமை முடிந்து விட்டதா? இல்லை. ஆசிரியர்கள் மாணவனுக்கு "நற்பண்புகள்" வழங்கி இந்த பருவத்தில் தான் நல்ல குடிமகனாக   வளர்ந்து விடுகின்றனர்.
           நவீன அறிவியல் யுகத்தில் மாணவனுக்கு "ஆய்வு மனப்பான்மை"ஏற்படுத்தி, அவனின் எதிகால திட்டத்தினை அவனே தேர்ந்தெடுக்க  உதவுகின்றனர் .

   இவை யாவும் யாரும் மறுக்க முடியாத உண்மை.  உண்மை நிலைமை நீங்கள் தான் கூற வேண்டும் ?

2. அரசு தரும் அனைத்து இலவச திட்டங்களையும் வரிந்து கட்டி வரிசையில் நின்று வாங்கி செல்லும் பொது ஜனங்கள் , இலவச கல்வியை மட்டும் வாங்க மறுப்பதேன்...?
    
      இருப்பவன் , இல்லாதவன் என அனைவரும் இலவச டி.வி. , இலவச அரிசி, இலவச கேஸ் ஸ்டவ் , இலவச காப்பீடு திட்டம் என அனைத்து இலவசங்களையும் பெற சண்டையிட்டு , முட்டி மோதி வாங்குவதில் முனைப்பு காட்டுவதுடன், சாலை மறியல், வெளி நடப்பு , முற்றுகை போராட்டம் என பல வழிகளில் அரசின் கவனைத்தை தன் பக்கம் திருப்பி, இலவச சலுகைகளை பெறும் மக்கள்,இலவச கல்வியை மட்டும் பெற ஆர்வம் காட்டாமல் இருப்பதேன்...?

     அது மட்டுமா, வட்டிக்கு கடனை வாங்கி , படிக்க வைப்பது ஏன்...?
     தன் மகன் படித்து நல்ல உயர் கல்வியினை பெற்று கை நிறைய சம்பாதிக்க வேண்டும் , வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று சுயநலமாக சிந்திப்பதன் விளைவு தான் வட்டிக்கு கடன் வாங்கி படிக்கச் செய்கிறது.

3.  காசு கொட்டி படித்து கைநிறைய பணம் சம்பாதிக்கும் மகனால் என்ன பலன்..?

       "எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்"

"காசு கொட்டி படிக்க வைச்சுருகேண்டா.."
"யாரு , யாரு கைய காலை பிடிச்சு சீட்டு வாங்கி கடன் வாங்கி படிக்க வைக்கிறேண்டா...கடனை அடைக்க உன்னை தான் நம்பி இருக்கோம்டா..."
"உன்னை படிக்க வைக்க காச தண்ணியா செலவழிச்சுருகேண்டா  ...."

என சாதா காசு பற்றி பேசி மாணவன் மனதில் விதைப்பது எல்லாம் காசின் அறுவடையை மட்டுமே.

   காசு வாங்கிய நிறுவனமும் வாங்கிய காசுக்கு துரோகம் செய்யாமல் , தன் கவுரவத்துக்கும் தன் நிறுவனத்தின் தரத்திற்கும் குறைவில்லாமல், மாணவனை நிறைய மதிப்பெண் பெறும் இயந்திரமாக்கி , அவன் பெற்றோர் நினைத்தை விட அதிக மதிப்பெண்களை பெற்றுத் தருகின்றனர்.
 
  மாணவனும் மதிப்பெண் முக்கியத்துவ கல்விக்கு அடிமையாகி , அயராத முயற்ச்சியால் இயந்திர தன்மையான உழைப்பால், படித்து , படித்ததை வாந்தி எடுத்து , நிறைய மதிப்பெண் பெற்றதால் அரசு உத்தியோகத்தில் சேருகிறான்.

    வேலைக்கு சென்றவுடன் தான் செலவழித்த பணத்தை எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற அடிமன உந்துதலில் , அரசு பணியினை செவ்வனே செய்ய , கையூட்டு பெறும் ,அதாவது "மூலதனத்திற்கு வட்டி தேடும் இயந்திரமாக " மாறி விடுகிறான்.
  
    " லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் " லஞ்சம் கொடுப்பதை தடுத்தால் அவன் அரசு இயந்திரத்தை முறையாக பயன்படுத்துவான் என என்னை குறை கூறும் முன் ஒன்றை நினைவு படுத்துகிறேன்.

     நாம் அனைவரும் காசு கொடுத்து கல்வியினை பெற்றவர்கள் . ஆரம்ப கல்வியிலேயே காசு கொடுத்து பழகிய நமக்கு (எல்.கே.ஜி .முதலே )...எப்படி அய்யா கொடுப்பதை நிறுத்த மனது வரும் ...? நாம் தான் தானியங்கி பணம் தரும் இயந்திரமாக (டெல்லர் மிஷின்) கொடுக்க பழகி விட்டோமே , பின் நாம் கொடுப்பதை நிறுத்துவோமா...?

   அரசே  குறைந்த பட்சக் கட்டணம் என்று மறைமுகமாக எதை திணிக்கிறது ....?
 என நீங்கள் தான் கூற வேண்டும்.

4.   காசு கொட்டி படிக்க வைத்த பெற்றோருக்கு பயன் உண்டா...?

  இதற்க்கான பதில் கொஞ்சம் கற்பனை கலந்த மாதிரி இருந்தாலும் . நிஜம் அதுவே.

என் மகன் எல்.கே.ஜி .லிருந்து காசு கொட்டி படிச்சவன், இன்னைக்கு வேலைக்கு காசு கொடுத்து இந்த இடத்தை பிடிச்சு இருக்கான்.அதுனால நல்ல கழுத்து நிறைய நகையும் ,பெட்டி நிறைய பணமும்   கொண்டு  வருகிற  மருமகளா பாருங்க என அடுத்த படலமும் காசிலேயே ஆரம்பிக்கிறது.
     மறைமுகமாக காசு கொடுத்து பெற்ற கல்வி வரதட்சனையை ஊக்குவிக்கிறது. காசு கொடுத்து பெற்ற கல்வி ஒரு சமூக கரை. இது அக்கறை இல்லை.

    காசு கொட்டி வாழ்வு பெற்ற மருமகளும் , காசை காரணம் காட்டியே , மாமியாரை விரட்டுகிறாள். இன்று பெற்றோர்கள் வீதியில் நின்று முதியோர் இல்லங்களை தேடுவது இதனாலே. கற்பனை என்று மட்டும் இதை சொல்லி தட்டிகழிப்பதால் உண்மை மாறிவிடாது.

5.  தனியார் கல்வி சாலைகள் பெருகி வருவதன் காரணம் என்ன....?

        இன்று தொழிற்சாலைகள் நிறுவனங்கள் பல, பல கல்வி சாலைகள் ஆரம்பிப்பதன் நோக்கம் தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட, அல்லது லாபம் தரும் தொழிலாக கல்வி மாறியதால் வந்த விளைவு ஆகும்.


   அன்று தொழிலில் கிடைத்த வருமானத்தை செலவிட கல்வி ஆலயங்கள் நிறுவப் பட்டன. இன்று அவை பணம் கொழிக்கும் கூடங்களாக மாறி வருகின்றன. கல்வி கூடங்களில்  , தரமான கல்வி என்பது மாணவர் வாங்கி வரும் மதிபெண்ணில் தான் என்ற நோக்கத்தில் செயல் படுகின்றன. மதிப்பெண் கல்வியை பெற்றோர்கள் ஆதாரித்து பூஜிக்கின்றனர்.

6.     இதுவரை நாம் பேசியதில் எங்காவது நற்பண்புகளை பற்றி பேசி இருக்கிறோமா...?நற்பண்புகள் பற்றி எந்த கல்வி கூடங்களாவது முக்கியத்துவம் தந்து விளம்பரம் கொடுக்கிறதா...?

    மதிப்பு கொடுக்கும் நற் பண்புகளை ஒதுக்கிவிட்டு , அதிக மதிப்பெண் பெற்று தரும் உத்திகளை மட்டும் கொண்டு கல்விசாலைகள் பெருகுவது தான் அத்தனை சமுக அவலங்களுக்கும் ஆரம்ப புள்ளி.

   இதை ஆசிரியர்களும். பெற்றோர்களும் ஆதரிப்பது அதைவிட வெட்கக் கேடு.

ஆரம்ப கல்வியையாவது (அது எந்த வழிக்கல்வி முறை யாக இருக்கட்டும் )  அரசு இலவசமாக கொடுத்தால் , அனைத்து மாணவனுக்கும் மதிப்பெண் தவிர்த்து நற்பண்புகள் நிரம்ப சென்றடையும். மாணவனும் நல்ல குடி மகனாக உயர்வான்.

     இனி நற்பண்புகளுக்கு மட்டும் தேர்வு வைத்து அதில் நூறு சதவித மதிப்பெண் பெறும் மாணவனே உயர் கல்விக்கு தகுதியாவன் என்றும், கருத்து பாடங்களுக்கு ,அறிவு விரிவு செய்யும் வகையில் தேர்வும் , கற்றதை பயன்படுத்தும் வகையில் தேர்வும் வைத்து கிரேடு முறை மதிப்பிடல் அமுலாக்கட்டும்.

7. அரசு நல்லெண்ணத்துடன் கொண்டு வந்துள்ள குறைந்த பட்ச கட்டண முறை வரவேற்கத் தக்கதாக    இருப்பினும், முற்றிலும் கல்வி நிறுவனக்கள் அரசுடைமையாக்கப்பட்ட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யாதது ஏன்..?

    எதிலெதிலோ இலவசங்களை அறிமுகம் செய்யும் தமிழக அரசு கல்வியினை ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை இலவசமாக அறிவிக்கலாமே ?ஆரம்ப கல்வியையாவது அரசுடமை ஆக்கலாமே..?

8.   மாணவர்களுக்கு எளிமையை போதிக்காமல் , பகட்டை காட்டி கார், பங்களா, ஏசி அறைகளில் வளம் வரும் கல்வி தந்தையர்கள் , மாணவர் நலன் கருதி , கல்வி மேல் உள்ள அக்கறை வெளிப்பட ,மாணவர் தரம் உயர்த்தி காட்ட தரை இறங்கி வந்து இலவச கல்வி தந்து தம் தரத்தை உயர்த்தி கொள்வார்களா..?

9.  மெட்ரிக் ,  ஆங்கில வழியில் காசு கொட்டி படித்தால் மட்டும் மருத்துவம், பொறியியல் மற்றும் வேண்டிய உயர் கல்வியை பெற முடியும் என்ற முதலீட்டாளர்களான பெற்றோர்கள் சிந்திப்பார்களா....?நற்பண்பு பற்றி பாங்குடன் நோக்குவார்களா..?

10. அரசு பள்ளிகளில் படித்தால் தான் அரசு உத்தியோகம் என்ற சூழலை உருவாக்கினால் மட்டும் தான் இலவச கல்வி வெற்றியடையுமா....?


எது எப்படியோ ...?பெருகி வரும் கொலை, கொள்ளை ,திருட்டு, பணமோசடி, நவீன சூதாட்டம் அத்தனையும் குறைய வேண்டுமானால் அதிக மதிப்பெண் மட்டுமின்றி , அதிகமாக்கப்பட வேண்டியது மாணவனுக்கு நல்ல நற்பண்புகளும் தான் என்பதை உணர வேண்டும்  என்பது மட்டும் உண்மை.

     அனைத்து ஆசிரியர்களும் உண்மையாய் உணர்ந்து, தம் நிலை உயர்த்தி, உணமையான ஆசிரியராய் உயர் நற்பண்புகளை போதித்தால் மட்டுமே சமுக சீர்கேடுகளை மாற்ற முடியும்.

"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னையின் வளர்ப்பினிலே ...ஆனால்
அது கிடைப்பது இப்ப ஆரம்பக் கல்வியில் மட்டுமே...!"


  என்பதை உண்மையாய் உணர்ந்து பெற்றோரும் , ஆசிரியரும் இலவச கல்வியினை வரவேற்று , நற்பண்புகளுடன் கூடிய நல்ல கல்வியினை இலவசமாக கிடைக்க பாடு படுவோம். இதற்க்கு கல்வி தந்தைகள் முன் வரட்டும். !



நமது சரியான செயல்களுக்கு
ஆதரவாயிருப்பதை விட
மிக அதிகச் சக்தியுடன்
நமது தவறானவற்றுக்கு
ஆதரவாயிருக்கிறோம்
என்பதே விந்தை!
                                     -கலீல் ஜிப்ரான் வரிகளுடன் கத்துவதை நிறுத்திக் கொள்கிறேன்.