Saturday, June 5, 2010

டீல் ,நோ டீல்

உப்பு காற்றில்
உரைக்கும் வெய்யிலில்
நடுங்க வைக்கும் குளிரில்
உழைப்பது
எல்லாம்  உனக்காக ...

கை கட்டி
கூனி குறுகி
நீ ஆசை பட்டதெல்லாம்
வாங்க
அடிமைப்பட்டு...
அடங்கி இருப்பது   
சம்பாதிக்க அல்ல
உன்னை சந்தோசமாக வைக்க

உன்னிடம்
டீல் ,நோ டீல்
வைப்பது இல்லை ...
ஏனென்றால் ....
என் வார்த்தைகள் எல்லாம்
உன்னை ஓ ஹோ  என்று வாழ வைக்க மட்டுமே ...
நான் மட்டுமல்ல
எந்த தகப்பனும் அப்படி தான் ...!

9 comments:

துரோகி said...

// நான் மட்டுமல்ல
எந்த தகப்பனும் அப்படி தான் ...! //
நிதர்சன வரிகள் சரவணன்!

சுப்பு said...

நல்லா இருக்கு

பொன் மாலை பொழுது said...

வாசித்துவிட்டு எவ்வித reaction னும் இன்றி போய்விடுவேன் வழக்கமாக.
அந்த கடைவரிகள் முணுகென்று சிரிக்கவும் பின்னர் சிந்திக்கவும் வைத்தது.
இதற்கு பெயர்தான் "ஹைக்கூ " வா? நமக்கு இதில் கொஞ்சம் ஆர்வம் மட்டுதான்

நல்லாத்தான் இருக்கு

Unknown said...

நன்று

தமிழ் மதுரம் said...

சரவணன்.. யதார்த்தம் நிறைந்த, நடை முறைச் சமூகவியல் வாழ்வினை நன்கு உரைக்கும் கவி வரிகள் அருமை. கவிதை அர்பணிப்பை அணிகளுடன் விளக்கும் ஒரு அற்புதமான படைப்பாகத் தான் என் கண்களுக்குத் தெரிகிறது.

Raghu said...

//கை கட்டி
கூனி குறுகி
நீ ஆசை பட்டதெல்லாம்
வாங்க
அடிமைப்பட்டு...
அடங்கி இருப்பது
சம்பாதிக்க அல்ல
உன்னை சந்தோசமாக வைக்க//

இது சூப்ப‌ர் சார்!

Uma Madhavan said...

நன்றாக இருக்கிறது.

Anonymous said...

ரொம்ப அருமையா இருக்கு

குடந்தை அன்புமணி said...

ஆனால் இது எந்த பிள்ளைகளுக்கும் (நாம் பிள்ளைகளாக இருந்த போதும்) தெரிவதில்லை...

Post a Comment