Monday, May 17, 2010

இன்று நீ நாளை நான்..!

கனவு ...
நீயும் நானும் இன்னும்
பூமியில்
நலமாய் வாழ்வதாய் ...!

விழித்தேன்
கண்களில் மட்டும்...
பால் பாக்கெட்டுடன்
காய்கறிகள் கேரிபேக்கில்
என் வீட்டு கொல்லைப்புறம்
பாலித்தீன் புதைந்து ,
பிளாஸ்டிக் வாளி உடைந்து
மண்ணில் கருகிய செடியுடன்...

ஆனால் நான் மட்டும் அல்ல...
ஊரே அரைக்குறை தூக்கத்துடன் ...

கனவு மட்டும்
இன்னும் அனைவரையும்
விட்டப் பாடில்லை....

எதிர் வீட்டு நாய்
வாயில் பாலித்தீன் பையுடன்
கவ்வி விளையாட...
எதிரே வந்த மாடும்
சணடையிட்டு ...
சாப்பிட்டு சென்றது ...
சாவு அறியாமல் ...
இன்று நீ நாளை நான்...
என்ற சுவற்று வசனத்தை பார்த்து
நாய் குரைத்தது...!
அதையும் பார்த்து ரசித்தோம்
நானும் நீயும்
இன்னும் முழுமையாய்
விழிக்காமலே...
பல் துலக்கிக்கொண்டே...!

நான் என் பொட்ரோல் வண்டியிலும்
அவர் டீசல் காரிலும்
அவன் ,இவன் என
அனைவரும் புகை கக்கி
தெருவே புழுதி கிளம்ப
அவரவர் அலுவலகம் சென்றோம்
அப்பாடா...
ஏசி யில உட்கார்ந்தா தான்
சுகமா இருக்கு என்றார்கள்
சுகம் எது என்று அறியாமலே..!

ஆம்
நாம் கனவுகளில்
நிஜம் உணராமலே
நலமாய் வாழ்கிறோம்...!

2 comments:

கமலேஷ் said...

நல்லா இருக்கு நண்பரே...

ஹேமா said...

கவிதையும் சமூக அக்கறையோடுதான்
...கொஞ்சம் காதலும் கலந்து !

Post a Comment