Friday, March 26, 2010

8டாத அறிவு ..

அப்துல் கலாம்

(முதுமலையில் பயிற்சி முகாமிற்கு வந்த யானையை பார்க்க காட்டிலிருந்து யானை ஒன்று இரவு வந்திருந்தது)

"நண்பா ! என்னை தெரிகிறதா? நான் தான் ...ராகவேந்தர் ...சின்ன வயதில் நாம் விளையாடியது ஞாபகம் இருக்கா...?"என்றது காட்டு யானை.

"(முகாம் யானை ஆழ்ந்த சிந்தனையில் இருக்க )
"நண்பா !என்ன கனவா ?"

"ஆமாம்பா ராகவேந்திர ...நல்லா இருக்கியா...?"

"நான் வந்தது தெரியாம அப்படி என்ன  கனவு ...?"

"ஆமாம் ...நான் சென்னை மாநிலக் கல்லூரியில் வரவேற்புக்கு சென்றிருந்தப்ப ....அப்துல்  கலாம ..பார்த்திருக்கிறேன்...அவரு கனவு காண சொல்லிருக்காரு....அவரு தன் கனவை நினைவாக்கி ...செயல்படுத்தியதால ...இந்தியாவோட ஜனாதிபதியாக உயர்ந்திருக்காறு..."

"என்னப்பா ...டவுனுக்கு போனப்புறம் ...ரெம்பவே..மாறிட்ட மாதிரி தெரியுது...?யாரு அந்த கலாம் ?"

"அவரு அவுல் பக்கீர் ஜெய்னுலஸ்தீன் அப்துல்கலாம் ...இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரா பணிபுரிந்தவர் ...பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகரா பணியாற்றியவரு...இப்படி  சொல்லிகிட்டே...போகலாம் ..."

"என்ன சாதனை புரிஞ்சுருக்காறு...?"

"இந்தியாவின் முதல் செயற்கை ஏவுகலனான எஸ்.எல்.வி.3 உதவியுடன் ரோகிணி என்னும் செயற்கை கோளை விண்ணில் ஏவியவர்...முடநீக்கியல் துறையில் ...300 கிராம் எடையுள்ள இலேசான நடைசாதனத்தை உருவாக்கியவர்..."

"சென்னை..அப்பிடின்னு...ஏதோ..சொன்னியே ...?"

"அதுவா...இவரு ..மாணவர்கள் மத்தியில் இந்தியா முழுவதும் சென்று உரையாற்றுகிறார்...கனவு காணச் சொல்லுகிறார்....கனவை செயல் படுத்த செய்கிறார்...இப்படி செய்யுறதால...லட்சத்தில் ஒரு சாதனையாலனாவது உருவாக மாட்டானா...?இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறாதா...?என்பது இவர் கனவு..."

"1975  ல் ஆர்ய பட்டா என்ற செயற்க்கைக்கோள் உருவாக்கினாங்கன்னு என் அம்மா சொல்லி கேள்விப்பட்டுருக்கேன் அது யாரு ...?"

"அவரு ஆரியபட்டீயத்தை உருவாக்கியவர் ...அப்ப அவருக்கு வயது 25 தான்..முக்கோணம் மற்றும் வட்டத்தின் பரப்பளவு சூத்திரத்தை தந்தவரு...வட்டத்தின் சுற்றளவு காணப்பயன்படும்..பை (II ) யின் மதிப்பு 3.1416   என தோராயமாக நிர்ணயித்தவரு  .... "

"அதனால தான் வரு பெயரில ஆரியபட்டான்னு செயற்க்கைக்கோள் அனுப்பினாங்களா ...அப்ப பாஸ்கரான்றது  ...?"

"அவரும் ஒரு கணித மேதை ...அவரு தான் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்...அதனாலதான் அவரு பேருல 1979 ல்ல பாஸ்கரா-I மற்றும் பாஸ்கரா-II ஏவப்பட்டது...."

"நகரத்துல ஜாதி கலவரம் , மத கலவரம் ..நடக்குதாமே..கிராமத்து வாசிகள் பேசக் கேட்டேன்.."

"அப்படியெல்லாம் ..பெரிசா கிடையாது...பெரிசான விஷயம் பெரிசாவும் வெளி வராது..."

"என்ன சொல்லுற...?"

"அட..பூமத்திய ரேகை பகுதியில்ல...விண்வெளி ஆய்வு மையம் நிறுவ ...கேரளாவில தும்பா..என்ற இடத்தில  அதுவும் ஒரு தேவாலயம்... கிருத்துவ பிசப் வீடும் தேர்வு செய்யப்பட்டது ..."

"கிருஸ்த்துவ ஆலயமா...?"

"கேட்டவுடனே...பிசப் ரெவரென்ட் டாக்டர் பீட்டர் பெர்னார்ட் பெரைரா ...மறுநாள் ஜெப ஆராதனையில் 'குழந்தைகளே...அறிவியல் இலட்சிய திட்டத்திற்கு இறைவனின் இருப்பிடத்தை கொருக்கலாமா..?'என கேட்க ..."

"என்னாச்சு...?"

"'ஆமென்'என எல்லாரும் சொல்லிட்டாங்க..."

"பாபா ..இந்துவும் கிருத்தவரும் ...சண்டை போட மாட்டாங்களா ...முஸ்லிம் இந்துவுமா...சண்டை போடுவாங்க ...?"

"அட முட்டாள் ...அப்படி எல்லாம் கிடையாது...காஞசி மடத்து பக்கம் ...ஒரு மசூதி இருந்ததாம்...காஞ்சி காமகோடி அத மாத்த வேணாம்ன்னு சொல்லிட்டாராம் ..."

"அப்ப சின்ன விசயங்களை பெரிசு படுத்துராங்கன்னு ..சொல்லு றாங்களா ...?அது சரி நம்ம மாணவர்கள் எப்படி ?"

"அது தாம்பா கவலையா இருக்கு ...வானவியல் ..கணிதவியல்ன்னு நம்ம கலாம் ஆசைபடுகிறார்...ஆனா... "

"என்ன இழுக்கிற...?"

"ஆமாம்ப்பா...இரண்டு மாணவன் பேசுறத கேட்டேன்..."

"என்ன...அப்படி பேசினாங்க...?"

" டேய் ..நீல் ஆம்ஸ்ட்ராங்க்குக்கும் ...நமக்கும் என்ன வித்தியாசம் ...?அப்படி ன்னு ...கேட்க..."

"என்ன சொன்னான்...?"

"'அவரு நிலவுக்கு போனவரு...நாம நிலவுக்கு போகாதவங்க ..' ன்னு சொன்னான்..."

"இதில் என்ன தப்பு ...?அவன் கரக்டா தானே சொன்னான்..."

"அவசர படாதே ...வித்தியாசம் அப்படின்னு கேட்டா...ஒற்றுமை வேற்றுமை இரண்டும் சொல்லணும் என்று பதிலை திரும்ப கேட்டான்..."

".அப்ப இவன் தெரியாது அப்படி சொல்லி இருப்பனே...சரி அவன் சொன்ன பதில... சொல்லு"


"அத ஏன் கேட்கிற ..'நாம எல்லாம் 1க்கு...2க்கு  தான் போவோம் ..ஆனா அவரு ..3(மூன்)க்கே போனவரு...'அப்படின்னு சொல்லுறான்..."

"!!!!!"

(நிச்சயம் கலாம் கனவு பலிக்கும் இந்தியா வல்லரசாக மாறும். ஆசிரியர்களும் பொறுப்பு உணர்ந்து செயல் படுவர்...மாணவர்களும் தம் நிலைமை உணர்ந்து தம்மையும் , தாய் நாட்டையும் உயர்த்துவர் ...நானும் உங்களை போன்று கனவுகளுடன் ...)  

5 comments:

பத்மா said...

எட்டாத அறிவு எட்டும் பொது கனவு மெய்படும் .

ஸ்ரீராம். said...

Voted...

விக்னேஷ்வரி said...

தகவல்களை வித்தியாசமான கோணத்தில் அளித்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.

Paleo God said...

தலைவரே லொள்ளு சாஸ்த்தி ..:))

சூப்பரா எழுதி இருக்கீங்க .

//"அப்படியெல்லாம் ..பெரிசா கிடையாது...பெரிசான விஷயம் பெரிசாவும் வெளி வராது..."
// டாப்பு .:)

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நன்றாக வந்திருக்கிறது சரவணன். எழுத்தில் முதிர்ச்சித் தெரிகிறது. வாழ்த்துகள்.

Post a Comment