Thursday, March 4, 2010

8டாத அறிவு ..

மம்மி 

ஒருவர் தன் மகனை விரட்டிக் கொண்டு தெருவில் ஓடி வந்தார்.

"உன்னை தோலை உரிக்காம விடமாட்டேன்டா ...."

"அட ..சின்ன பையன் அவன் விடுங்க...அப்புறம்..நீங்க என்ன தோலை உரிக்கிறது...அவன் வளர வளர அவனே தோலை உரித்துக்குவான்..."

"நீங்க வேற ...சும்மா இருங்க சார்...அவன..."

"அட தோலை உரிக்கிற .....இச் செய்யலுக்கு 'மோல்டிங்' ன்னு ....பேரு.."

"என்ன சார்..மோல்டிங் ..அது... இதுன்னு...."

"மான்...பழைய கொம்பை உரித்து ...புது கொம்பு வளரச் செய்யும் .."

"ஆமா ....பறவைகள் கூட ....தன் இறகுகளை ...உதிர்த்து ....புதிய இறகு முளைத்தாலும் ...அவனை விட போறது இல்லை...."

"பாம்பு ...தன் தோலை ...உள் வெளி சுருட்டல் மூலமாக உரிக்கிறது..."

"எடா கூடமா எதையாவது பேசாதீங்க ....அவனை வளர்க்கிறதுக்கு ...ஒரு நாயையாவது வளர்த்திருக்கலாம்...."

"அப்பாவும் உங்களுக்கு சிக்கல் தான்..."

"என்ன சொல்லுறீங்க...?"

"நாய் கடிச்சா ..'ஹைட்ரோ போபியா'ன்ற நோய் வரும்...தகுந்த சிகிச்சை தரலைன்னா...நாய் போல கத்தணும் ...அப்புறம் ...உணவு ..நீர் போன்றவற்றை நக்கி சாப்பிடனும்...கடைசியில...சங்கு ஊதிடுவான்...கடித்து ..."

"நாய் இல்லாட்டி ...பூனையை வளர்த்திட்டு போறேன்..."

"புனையாள...'டிப்திரீயா' வரும் ...அதனால ..கழுத்துப் பக்கம் ...காதுக்கு கீழ வீக்கம் ...ஏற்படும்..காய்சல் வரும் ...கண் எரிச்சல் தரும்...கடைசியா..மூச்சு விடுறது ...தடை பாடும்..."

"அட ..போங்க இவன..பெத்ததுக்கு ...பன்னி கூட ..மேய்ச்சுட்டு போறேன் ..."

"பன்றினால ...'பன்றி நாடா புழு 'நோய் வரும் ...பன்றி கறி சாப்பிடுறவங்களுக்கு ...நாடப் புழுவின் முட்டை ...நோய் பரப்பி மூளையை தாக்கி ...சுயநினைவு ...இழக்கச் செய்து....'ஏன் நெபலயிடீஸ் 'எனப்படும் வைரஸ் மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் ...இது குழந்தைகளை ..விரைவாக தாக்க வல்லது..."

"ஐயோ ...எலி வளர்த்தா ...'பிளேக் 'வரும்..அப்புறம் ....."

"அட குதிரை வளர்த்தா கூட ...'தனூர் வாதம் ' எனும் நோய் வருங்க..."

"அவனுக்கு வக்காலத்து வாங்காதீங்க ...அவன் என்ன செய்தான் தெரியும்மா ...?"

"அப்படி என்ன எல்லாரும் செய்யாத தப்ப அவன் செய்திருக்க  போறான் ....மிஞ்சி மிஞ்சி பூனை 'அம்மா ' இல்லாட்டி 'தங்கச்சி' கூட ...சண்டை போட்டுருக்க ...போறான்..."

"கரெக்டு ...அவன் அம்மா கூட   சண்டை போட்டு ...என்கிட்டே வந்தான்க ...என்னடா..இப்படி செய்யறன்னு கேட்டேன்...?"

"அதுக்கு அவன் என்ன செய்தான்..?"

"ஏன் அப்ப நீ எகிப்து க்கு ...எப்பவாவது  போயிருக்கியா ...? ன்னு கேட்டான்..."

"பாவம் பிள்ளை ...நீ எகிப்ப்துல எடுத்துகிட்ட போட்டவை பார்த்துருப்பான் அதுனால ...கேட்டு இருப்பான் ...."

"ஏன்டா...கேட்கிறேன்னு ...கேட்டேன்...''

"அப்புறம்.... "

"இந்த 'மம்மி'யை ...என்கிருந்து கண்டு பிடிச்சு ...எப்படி குடும்பம் நடத்துற...ன்னு கேட்கிறான்..."

"!!!!!".

3 comments:

Kandumany Veluppillai Rudra said...

புதியவை,புதுமையானவை,தொடருங்கள்

பத்மா said...

ஹஹாஹா ரொம்ப நல்லாஇருக்கு

மதுரை சரவணன் said...

உருத்ரா,பத்மா ஆகியோருக்கு என் நன்றி . தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.

Post a Comment