Tuesday, March 2, 2010

8டாத அறிவு ..

"கான்னி பால்ஸ் "

"நீ கடி ஜோக்கு ...சொல்லுறத  ...பார்த்தா...அப்படியே..."

"என்ன ..?என்னை கடிச்சு சாப்பிடனும் போல தோணுதா ...."

"நான் என்ன கான்னி பால்ஸா ..?"

"கான்னி பால்ஸ் ன்ன என்னாடா..?"

"மனித மாமிசம் சாபிடுரவங்கள ...அப்படை கூப்பிடுவோம்...."

"இன்னைக்கும் இருக்காங்களாடா...?"

"ஆமா நியு கினியவிலும்....ஆப்பரிக்காவிலேயும்...நியுசிலாந்திலேயும் ,வட , தென் அமெரிகாவில...சில பகுதிகளையும்....இருக்காங்க..."

"உண்மையுலுமாடா...!"

"ஆமா ..மனித மாமிசம் சாப்பிடுறதால...அவுங்களுக்கு அந்த மனிதனின் பலமும் ...திறனும் தங்களுக்கு கிடைக்கும்..ன்னு நம்புறாங்க..."

"நீ சொல்லுறத பார்த்தா...எனக்கு எச்சி கூட முழுங்க முடியலடா..."

"எச்சி முழங்க முடியலைன்னா...ஒண்ணுமில்லை ...ஆனா உணவு தொண்டையில விழுங்க முடியலைன்னாலும் ...மூச்சு வாய்வழிய விட சிரம பட்டாலும் சிக்கல் ..."

"என்ன சிக்கல்..?"

"டான்சில  ..வீக்கம் ஏற்பட்டு ...'டான்சிபிலிட்டிஷ் '...நோய் ஏற்ப்பட்டு ...வீங்கி சிவப்பா தெரியும் ...."

"டான்சில் ..அப்படின்னா...என்னா...?எதுக்குடா...பயன்படுத்து...?"

"தொண்டை நுழைவாயிலில் ...முட்டை வடிவ ...தட்டையான...திசு தான் ..டான்சில் ...இது சுரக்கும் நீரானது ..இரத்தத்திலிருந்து பாக்டீரியாவையும் ...,அழுக்கையும் நீக்குது ..."

"நீ சொல்லுறத கேட்டா..எனக்கு தொண்டையே .....கட்டிகிடுச்சு..டா..."

"தொண்டை கட்டிகிட்டா ..என்ன செய்யணும்..தெரியுமா...?"

"என்னாடா..செய்யணும்...?"

"தொண்டையை அவுத்து விடனும்...."

"!!!!!"

"எப்படி நீ மட்டும் தான் ..கடிக்க முடியுமா...?"

"!!!!!"

3 comments:

புலவன் புலிகேசி said...

நம்ம க்ஆசியில கூட இருக்கானுங்க..

Kandumany Veluppillai Rudra said...

"இப்பவே,மனிதனை மனிதன்,சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றான்"

மதுரை சரவணன் said...

புலவன் புலிகேசி,உருத்திரா மற்றும் தொடர்ந்து பார்வையிட்டு ஓட்டிடும் அனைவருக்கும் நன்றி. உங்கள் வருகை என்னை உற்சாகப் படுத்துகிறது.

Post a Comment