Monday, February 1, 2010

மாணவர் உலகம்

கனவுகாண் ....
ஆசிரியார் சொன்னதாலோ ...
என்னவோ .....
இரவில் அவர் கை
பிரம்பு வந்து வந்து ....
தூக்கம்  கலைகிறது.

நாய் குரைக்கும் சத்தமும் ...
துணையாய் வர ....
மதிப்பெண் பட்டியல்
தானாக மனதில் தோன்ற ....
மதிப்பாய் ....
அன்னை பார்வைக்கு
புத்தகம் தூக்க...
ஒரு மணிக்குமா படிப்பு ...
தூங்குப்பா..
என அப்பா குரல் கொடுக்க ....
கூர்க்கா விசில் ஊத ....
விளையாட்டாய் போன தூக்கம்...
விளையாட்டை நினைவு படுத்த ..
புட்பால் கிரவுண்டுக்கு
காலை  செல்ல வேண்டும் ....
என்ற நினைவுடன்....
அனைவர் நினைவும் ....
கனவாய் .....!!!
கனவுகாணுங்கள் பெற்றோர்களே ....
உங்கள் பிள்ளைகளின் ஆசைகளும் ...
தெரிந்து !!!!
விதைத்திடுங்கள் கனவை ஆசிரியர்களே....
மாணவர் மனம் தெரிந்து!!!
 

2 comments:

ஸ்ரீராம். said...

கவிதை மாணவர் சார்பாகவா..ஆசிரியர் சார்பாகவா..?

எம்.ஏ.சுசீலா said...

திரு ஸ்ரீராம்,மாணவரின் மனம் புரிந்த ஆசிரியர்கள்...,
பிள்ளைகளின் இதயம் புரிந்து செயல்பட எண்ணும் பெற்றோர்கள்...
இப்பதிவில் சரவணன் சொல்ல வருவது அந்த விருப்பத்தைத்தான் என்றே எண்ணுகிறேன்.

Post a Comment