Wednesday, January 13, 2010

பொங்கலோ பொங்கல்!

கனவுகள் நினைவுகள்
ஆக்கி
அறிவு  பெருக்கி
ஆகட்டும் பொங்கல்!


சுவற்றில் வண்ணமிட்டு
வரும் பொங்கலே
மனித எண்ணங்களை
வண்ணமாக்கி  வா ! வா!


பழையன போக்கி
புதியன புகுத்தும்
போகியே ....
பொசுக்கி போ!
மனித அழுக்குகளை!
கொளுத்திவிட்டு போ
மதம் பிடித்த மனித
போக்கை!

மண்ணை வளப்படுத்த
விண்ணை விடியலாய்
மழையை நினைத்து
உழைப்பை உரமாக்கி
விளைந்த நெல்லை
உனக்கிட்டு மகிழும்      
மனித வாழ்வில் ....
வசதி கூ ட்டி
வதந்தி போக்கி
வன்முறை நீக்கி
மூடனமபிககை முடக்கி
முதியவர்  உறவைபேணி
முடிந்தவரை இயற்க்கை காத்து
இவர்கள் வாழ்வை காத்து
குறைகள் நீக்கி
நிறைகள் தந்து
நிறைவாய் பொங்கு
பொங்கலோ பொங்கல்!
 



 

1 comment:

தமிழ் said...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

Post a Comment