Thursday, January 21, 2010

உயிரோட்டமுள்ள சொல்

சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
யானை பிளிரும்
நாய் குரைக்கும்
நரி ஊளையிடும்
காகம் கரையும்
குழந்தை மழலை பேசும்
என ஒலிகளை
பகுத்து பார்த்து 
உயிரோட்டமுள்ள
சொல்லை தந்த
மனிதா ....
உயிர் எடுக்கும்
சாதி,மதம்
என்ற சொல்லை
மனித குருதி சிந்தி
ஓலமிடுவான் ...
என முன்பே அறிந்து
பகுத்துப் படைத்தாயா ...?

இதுவா பகுத்தறிவு ...?
பெரியார் சொல் படி
பகுத்தறிவு பெற்று
சிறந்து வாழ் !
 

No comments:

Post a Comment