Wednesday, January 20, 2010

பகுத்தறிவு

பால் நிலவு
பசும் புல்
பால் மாடு
பச்சை குழந்தை
பசியுற்ற புலி
பாயும் சிறுத்தை
தாவும் குரங்கு
நண்பகல் நடுநிசி
நண்பன் பகைவன்
நல்லது கெட்டது
என பகுத்துப் 
பார்க்கும்  மானிடா ....
சமுகத்தில் மட்டும்
எந்த  நலனுக்கும்  இன்றி
சாதி மத வேறுபடுத்தி
பகுத்தறிவு மறந்ததேன்?
தாவும் குரங்காக
மனம் இருப்பதாலா?

இன்று புதிதாய்
சீரியலில் சீல்
பிடித்த  மனமானதாலா 
பகுத்தறிவு மறந்தாய்? 
சிக்கித் தவிக்குது
சிறுசும் பெருசும்
சிரழியும் சமுகம்
நல்ல குடும்பம்
சரிவது புரியாம?

1 comment:

கமலேஷ் said...

அருமையாக இருக்கிறது தோழரே...தொடருங்கள்...

Post a Comment