Wednesday, January 13, 2010

கொடுத்த வாக்குறுதி


" தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு  கொடுத்த வாக்குறுதியில், மரம் வளர்க்கும் திட்டம் ஒன்று .அதனை தொடர்ந்து  இவ்விழா நடைபெறுகிறது. மதுரை நகரை பசுமை மிகுந்த நகராக மாற்றவேண்டும் என்பது தான் எனது லெட்சியம்.  மதுரை நகரில் 18 இடங்களில்  இலவச நவீன கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. இது போன்ற மக்கள் சேவைகளையே  செய்ய விரும்புகிறேன். "    இது மதுரை நகரை பசுமையாக்க வந்த நாயகர் உரை. வான் மலைக்கு உதவும் நாயகரின் வாக்கு.
        மதுரை தெப்பக்குளம் பகுதியில் மத்திய இரசாயன உர அமைச்சர் மு.க. அழகிரி அவரகள் மரக் கன்றுகள் நடும்  திட்டத்தை தொடக்கி வைத்த போது ஆற்றிய உரை. மதுரையில் சுமார் 18 இடங்களில் மரக்கன்றுகளை தன் துணைவியுடன் நட்டார். பள்ளிக்குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் தரப்பட்டன.
        "சார் , மரக்கன்று நட்டா மட்டும் போதாது , அதை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் காதுகளில் படும்படி சொல்லுவது புரிகிறது . "
         "ஹலோ ,...நாங்க மதுரைகாரங்க ...சொன்ன சொல் தவறமாட்டோம். இன்றும் மதுரை சிட்டி கோர்ட்அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு அண்ணே சொன்னமாதிரி தினமும் மாலை போடுகிறார் ... தெரியும்மில்லை... மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் ... ஊத்துவோம்."
       
"மதுரைய சிங்கப்பூரா மாத்தி காட்றோம்...ன்னு சொல்லிற எம்.பி. அல்ல " அண்ணே வார்த்தை . ஆம் சொல்லுறதை செய்வோம் ... செய்றதையும் சொல்லிகட்டுவோம்"

      மதுரையில் அலங்க்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கப்போவுது வாங்க. உங்க ஊருக்கும் மரக்கன்று வாங்கிட்டு  போங்க .    

No comments:

Post a Comment