Thursday, December 31, 2009

பூத்தது புத்தாண்டு!

பூத்தது புத்தாண்டு!
புரியபோகுது பல்லாண்டு
பேசும் சாதனை !
இனி நமக்கில்லை
வேதனை !


துடித்து எழு!
அடித்து போக்கு
அழுக்கு நீக்கி
ஆடை போல் உள்ளம் !

அனைத்துக் கொள்
அன்பாய் அனைத்தையும் !
இணைத்துக் கொள்
இனக்கமாய் இதமாய் !

இதயம் ஈரமாகட்டும்
பசித்தவருக்கு புசிக்க
உணவிடுவோம்!

புனிதமாகட்டும் பூமி
பூதமாகும் வெப்பம்
புரியவைக்கட்டும்
பூமியில் மனிதன்
வாழ வழி விடட்டும்!
 

1 comment:

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதை கருத்துகளுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

Post a Comment