Thursday, December 31, 2009

மதுரை

மாதங்களின் பெயரிலே
வீதிகள் !
மணக்கும் மல்லிகை
விளையும் !

நாற்புறம் கோபுரம்
சதுரமாய்
அமைந்த நகரம்!
சாலைகள் சன்னதி
நோக்கி செல்லும் !

வை கை
என வரலாறு
சொல்லும் நதி
ஓடும் நகரம் !

புட்டுக்கு மண்சுமந்து
மனிதனுக்கு
பரம்பொருள் ஒன்று
என்று உணர்த்திய
நகரம்!

திருபரங்குன்றம்
பழமூதிர்சோலை என
அறுபடை வீடுகளில்
இரு படை
வீடுகளுடைய நகரம்!
  
குடும்ப சித்திரம்
அழகர் மலை
கள்ளழகர் வரலாறு
வாழச்செய்யும்
நகரம்!

காந்தி ஆடை
துறந்த நகரம் !
காந்தி அருங்காட்சியகம்
கொண்ட 
தூங்கா நகரம் !

மார்கழியில்
பனிப் பொழிவில்
மண்டியிட்டு போடும்
மங்கயரை பார்த்து
கோலம் சொல்லும்
மாதவி பிறந்த ஊர்
கண்ணகி எரித்த ஊர்
நீதி தவறியமைக்காக
பாண்டியன் மறித்த ஊர்
இது என்று !

சங்க தமிழ் வளர்த்த
நகரம் !
நாடக தந்தை
சிலை கொண்ட
நகரம் !

வாரலாறு பல
உண்டு மதுரைக்கு 
வந்துபாரும்
கண்டுணர்வாய்!
கண்டுபாரும்
கதைகள் பல
சொல்வாய் !

No comments:

Post a Comment