Saturday, December 26, 2009

சாலை விதி மீறல்

மதுரையில் ட்ராபிக் ஜாம் அதிகமாகி விட்டது ! அதற்கான காரணம் மதுரை வாசிகளின் சாலை விதி மீறல் தான் என்பது மிகவும் தெளிவாகிறது .
         உதாரணத்திற்கு நான் பீ பீ குளம் அருகில் வந்து கொண்டு இருந்தபோது , பிரதான சாலையில் மிகவும் கவனமாக என் முன்னாள் ஒரு கார் சென்றுகொண்டு இருந்தது.  பீ பீ குளம் அருகில் இரு புறத்திலும் கடைகள் உள்ளன , அக் கடைகளுக்கு முன்னால் அனைத்து தரப்பு வாகனகளும் பார்கிங் செய்யப்  படுகின்றன. 
         பெட்டிக்கடையில் ஒரு ஐம்பது வயது டைய பெரியவர் , கடையில் வார இதழ் , சில பொருள்கள் வாங்கி கொண்டு , பிரதான சாலையின் வாகனத்தை பார்க்காமல் தன்னுடைய வண்டியை அப்படியே பின்னால் நகர்த்தினார்.. கவனமாக வந்த கார் , ஹோர்ன் ஒலித்தும் , கவனக்குறைவால் மீண்டும் வண்டியை பின்புறம் நகர்த்த , லேசாக இடித்தது .
          அதைவிட முக்கியம் என்னவென்றால் , தடுமாறி கீழே விழ , கடைகாரர்கள் மற்றும் கடைகருகில் நின்றவர்கள் எல்லாம் கார் ஓட்டுனரை , திட்டுயதுடன் அடிக்கவும்  
சென்றனர் , பயந்த டிரைவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றான்.  உடனே கடைக்கு அருகில் இருந்த தடித்த நபர் வண்டியை எடுடா , அவனை பிடிக்க , என கூறிக் கொண்டு பைக் எடுத்து விரட்டினான் .
           அதுவரை விழுந்த அந்த நபரை யாரும் தூக்க வரவில்லை , பின்னால் வந்த நான் , வண்டியை நிறுத்தி தூக்கிய பின் வந்தது , கூட்டத்தில் இருந்த அதி புத்திசாலி ,"சார் , வண்டி நம்பர் இந்தாங்க " .  கடைசி வரை யாரும் அவர் வந்தது தவறு என எடுத்து கூறவில்லை . ஏன் என்றால் யாருக்கும் சாலை விதிகள் தெரியவில்லை, பிரதான சாலையை பார்த்து , வண்டியை அவர் எடுத்து இருந்தால் , அவ்விபத்து நிகழ்ந்து இருக்காது.
            மதுரை மத்திய மந்திரி திரு மு.க. அழகிரி அவர்களின் முயற்சியால் சாலைகள் அகலப் படுத்தப் படுகின்றன . தினமலர் முயற்சியால் போஸ்டர் இல்லா தூய்மையான நகரமாகவும் , சாலைகள் விரிவுபடுத்தியும் , சாலையின் குண்டும் , குழியும் சரி செய்யப்பட்டு வருகின்றது . மதுரை தூய்மை படுத்தப்படுகிறது. 
             இருப்பினும் , தினம் அங்காங்கே விபத்துகள் நடந்துக் கொண்டு தான் இருக் கின்றன, ஏன் எனில் , யாரும் சாலை விதிகளை மதிப்பதில்லை, கவனம் காட்டுவதில்லை . மதுரையில் காவல் துறை ஹெல்மெட் அணிய சொல்லி ஓய்ந்து போனார்கள் .  காவல் துறை தன் கடமைகள் செய்தலும் ,பொது மக்கள் திருந்தி சாலை விதிகளை மதித்தால் மட்டும் விபத்துகளை தடுக்கமுடியும் .
             தமிழக கல்வித்துறைக்கு அன்பான வேண்டுகோள் , வரும் சமச்சீர் கல்வி திட்டத்திலாவது சாலைவிதிகள் , விபத்து முதலுதவி போன்ற பாடம் , மூன்று அல்லது நான்காம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் .                  
               சாலை விதிகள் மதிப்போம் , சாவை தடுப்போம் . 

2 comments:

Uma Madhavan said...

சரியாகச் சொன்னீர்கள்

Unknown said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

Post a Comment