Friday, December 18, 2009

கடல்

தொட்டது அலை
விட்டது கவலை!
இது இயற்கை .

மனம் பட்டென்று
பட்டது ,சுட்டது
இத்தனை நாளும்
இனிமை உணரவில்லை ?

கடல் உப்பு
கரைந்தது என்
கண்ணீர் !
கலைந்தது என்
கலக்கம் !

கடல் அழகை
நடந்து பார்
ரசித்து  பார்ப்பாய் !
கால் நனைத்து
பார் மறப்பாய்
கவலை  !

மீண்டு மீண்டெழும்
அலை கற்றுத்தரும்
கலை  முயற்சி
திரு வினையாக்கும் !

முத்தமிட்டு செல்லுமலை
சொல்லிவிட்டு  செல்லும்
 வாழ்க்கை பாடம்
வசந்தத்தை தேடித்தரும்!


கவிதை
 கடல்

No comments:

Post a Comment