Saturday, November 21, 2009

சாவித்துவாரம்



சாவித்துவாரம்

கல்வி முறையில் சாவித்துவாரம் என்பது மிகவும்முக்கியமான ஒன்று. இது கற்பனைக் குதிரையை தட்டி விட உதவும் திறவு கோல். சாவித்துவாரம் ஒன்றை சார்ட் பேப்பரில் மிகப்பெரியதாக வரைந்து, நாம் நினைக்கும் ஒன்றை கற்பனையாக , அத்தூவரத்தில் பார்த்தால் தெரிவது போன்று வரைந்து காட்ட வேண்டும்.

இது நம் கனவு எப்படிப்பட்டதாக இருக்கிறது? நம் கற்பனை எவ்வளவு உயர்ந்தது என்பதை வெளிப்படுத்த உதவும்.

கருப்பொருள் ஒன்றினை தந்து, அதனை மையமாகக் கொண்டு வரையச் சொல்லும் போது, புதுமையான கற்பனைத் தோன்றும். அது மட்டுமின்றி இந்த புதுமையை நடைமுறைப்படுத்துவதற்கு எற்படும் சிக்கல்களையும், சவால்களையும் விவரித்து பிற மாணவர்களுடன் கலந்துரையடல் நடத்தும் போதும் பல அற்புதமான நடைமுறைகளை நாம் பின்பற்றாமல் இருப்பது புல்ப்படும். நவீன மையமாதல் சாத்தியமாகும்.

நவீன கற்பித்தல் முறையில் இத் துவாரம் கற்பனை வளம் பெருக உதவுவதுடன், நம் கற்பித்தலுக்கு புது இரத்தம் ஓட்டத்தை எற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு மாணவனும் அவனுக்குள் கட்டுக்கடங்காத கற்பனை திறனுடன் பள்ளிக்கு வருகைப்புரிகிறான்.

அவன் கற்பனைக் குதிரைக்கு இத்துவாரம் ஒர் வழித்தடமாக அமைந்து புதிய உலகம் படைக்க உதவும்.
சுற்றுச்சூழல் மாசுவால் பொழிவிழந்து கிடக்கும் இச் சமுதாயத்தை மாணவர்கள் மனசு வைத்தால் சுற்றுபுறம் தூய்மையாகும்.அதற்கு இத்தூவரம் முழுமையாக பயன்படும் என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
நம் வகுப்பறையிலுள்ள மாணவர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து, குழுவிற்க்கு ஆறு முதல் எட்டு மாணவர்களாக அமைத்து, இரண்டு குழுக்களை தற்போது உள்ள வீதிகளையும் , தெருக்களையும் வரையச் சொல்லவும். மற்ற இரு குழுக்களை அவர்கள் எவ்வாறு நவீனப்படுத்த விரும்பிகிறார்களோ அவ்வாறு வரையச் சொல்லவும். பின்பு அவர்கள் வரைந்தப் படங்களை வகுப்பறையில் ஒட்டச் செய்யவும். தற்போது அனைவரையும் அந்த நான்கு படங்களையும் பார்வையிடச் செய்யவும்.

பார்வையிட்டப்பின் அனைவரையும் தங்கள் இருக்கையில் அமரச்செய்து, இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியசத்தை கூறச் சொல்லுங்கள். நிச்சியம் நீங்கள் எதிர்பார்க்கும் பொதுவான கருத்து வெளிப்படும்.
நவீனத் தெருக்கள் சுத்தமாகவும் , சாக்கடை கழிவுகள் இன்றியும் , தெரு விளக்குகள் சோலார் விளக்குகளாகவும் , ஆங்காங்கே குப்பைத்தொட்டிகளுடனும் ,தெருக்கள் அகலமாகவும் ,ரோடுகளை கடக்க பாலங்களும், அண்டர்கிரவுண்ட் வழித்தடங்களும் என புதுப்பொழிவுடன் இருக்கும்.
பழையத்தெருக்கள் வழக்கம் போல் சாக்கடையுடனும், பன்றி, ஈக்கள் மற்றும் மலத்துடனும் , தெருவிளக்குகள் உடைந்தும் , சரிந்தும் காணப்படும்.
இவற்றைப் பார்வையிடுவதுடன் சாவித்துவாரம் முடிவடைந்து போவது இல்லை. அதற்கும் மேல் சென்று, நம் கனவுகள் நிறைவேற அதை எப்படி நிறைவேற்றுவது ? அதற்கான வழிமுறைகள் என்ன ? என்பதை விவாதித்து, அதற்க்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்க்கொண்டு, செயலில் இறங்கச் செய்வது தான் முக்கியம்.

குப்பைகளை அகற்ற நாமே குப்பைத்தொட்டிகள் வாங்கி வைக்கலாம். சோலார் விளக்குகள் அமைக்க ஊராட்சி மன்றங்களை நாடுவது, தெருச் சாக்கடையை போக்க , நம் வீட்டுச் சாக்கடையை பாதளச் சாக்கடையுடன் இணைப்பது, புது லைன் அமைத்து சரி செய்வது , சிமெண்ட் சாலைகள் அமைக்க தொண்டு நிறுவனங்கள் நாடுவது என முடிவெடுத்து அதை நடைமுறை படுத்துவது ஆகும்.
சாவித்துவாரம் இது போன்று பள்ளிச் செயல்பாடுகளுக்கு மட்டும் அல்ல. நாம் எதையெல்லாம் நவீன படுத்த விரும்பிகிறோமோ அதையெல்லாம் கற்பனை படுத்திப் பார்த்து , அதை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்க்கொண்டு நடைமுறைப்படுத்த உதவும்.
சாவித்துவாரம் அடுத்தவர் வீட்டு நிகழ்வுகளை ஒட்டுக் கேட்க , அன்றாடம் வெட்டிப்பொழுதாய் நம் வாழ்க்கை பேச்சுக்கு உதவி செய்யும் காலம் போய் , இனி வரும் காலங்களில் நம் இளைய சமுதாயத்தி௦ற்௦கு நல்லது செய்வதாக அமையட்டும்.
குறுக்கு சிந்தனைக்கு உதவிய காலம் நீங்கி, இனி நாம் நினைக்கும் மாற்றத்தை எற்படுத்துவதாக சாவித்துவாரங்கள் அமையட்டும். சாவித்துவாரங்கள் சாவா வரலாற்று மாற்றங்களை எற்படுத்தும். சூம்பிக் கிடககும் கனவுகளைத் தட்டி எழுப்பட்டும். நம் கண்ணீர்களைக் கழுவி, நம்மிடம் புன்னகைகளை எற்படுத்தும் திறவுகோலாக சாவித்துவாரம் அமையட்டும். சாவித்துவாரத்தை நடைமுறை படுத்துங்கள் , மாற்றத்தினைக் கூறுங்கள். உங்களுக்காக சாவித்துவாரத்தில் கனவுகளுடன் நான்.

No comments:

Post a Comment