Wednesday, November 11, 2009

வலைப் பற்றிய கவலை

வலைப் பற்றிய கவலை
இன்று நான் மதுரை மத்திய பஸ்டாண்ட் அருகில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் புகழ் பெயருடையவரைப் பார்த்தேன்.அவருடன் உரையடிய பதிவுகள் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
“சமச்சீர்கல்வி பற்றி வலையில் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை.”
“வலை என்றாலே பிழை என்பது போல் சொல்றேங்களே!”.
“பேச்சுக்கு சொல்லல்ல உண்மையிலே அப்படித்தான் சார்... அம்மா ன்னு டைப் செய்தால் அம்மா மகன் பற்றி கள்ளத் தொடர்பு ... “
“சார், எல்லாம் அப்படி இருப்பதில்லை ... பத்ரி , பிகேபி , மாணிகண்டன் என பல தமிழ் பிளாக்குகள் உள்ளன”
“இப்படி சில தான் உள்ளன. வீட்டில நெட் பார்க்கவே பயமாக இருக்கு. நாம பார்த்த பின் நம் பசங்க பார்த்தா நம்மல பத்தி என்ன நினைப்பான். நாம நல்லதை தேடினாலும் மஞ்சளாத்தான் இருக்கு”.
“சார்.. இன்றைக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் இரண்டு ஐடி வைத்துள்ளான். நெட் பார்க்காத பாசங்களே இல்லை ...”.
“ சார்... யூ டியுப் வந்தது பாசங்க ரெம்பக் கெட்டுப்போய்டாங்க ... அவன் எதைப் பார்ப்பான் சொல்லுறீங்க... பாழாய் போனப் படங்களத்தான். அதுவும் இரண்டு ஐடி வைத்துள்ளவன் கவனிக்கப் படவேண்டியவன்”.
“ சார்.. அவன் தந்தை கணினி மையம் வைத்துள்ளார் . அதற்காக அவனை தவறாகச் சொல்வதா ?”
“ சார்... அவன் அப்நார்மல் பிகேவியர் .தயவு செய்து வாட்ச் செய்யுங்க .. அவன் கெடுவது மட்டுமல்லாமல் அடுத்தவனையும் கெடுத்துடுவான். ஹோமோ செக்ஸ் உள்ளவானகக் கூட இருக்கலாம்.”
“ சார் ... நல்லா படிக்கிறவன் சார் .. இருந்தாலும் கவனிக்கிறேன்”.
“சார் .. தமிழில் நான் veelithukal என்ற பெயரில் பிளாக் ஆரம்பித்துள்ளேன். படித்து கமண்ட் சொல்லுங்க சார் .. நம்மல மாதிரி நிறைய பேர் எழுதி தமிழ் பிளாக் மாற்றி அமைக்கணும் ... நம்ம பசங்களுக்கு உதவுற தகவல்களை நாம் தரணும்”.
“ ஒ.கே. சரவணன் ... மழை நிக்கிற மாதிரி தெரியுது .. நான் கிளம்புகிறேன்”.
தமிழ் பிளாக் நான் ஆரம்பிக்க என் மனைவியின் அண்ணன் மாதவன் மிகவும் முக்கியமானவர் . என் எழுத்து ஆர்வத்தைப் பார்த்து “ஏன் நீங்கள் பிளாக் ஆரம்பித்து எழுதக் கூடாது?” என கேள்வி எழுப்பியதுடன் நின்று விடாமல் எனக்கு பிளாக் ஆரம்பித்து இன்று வரை ஊக்கப் படுத்தி பல பிளாக்குகள் படிக்கவும் ஆலோசனைகளை இராஜஸ்தானில் உள்ள பில்வாடா வில் இருந்து வழங்குகிறார்.
அவரும் என்னைப் போன்று தமிழ் ஆர்வம் கொண்டவர் . தமிழ் பிளாக் தரம் உயர வோண்டும் என்ற எண்ணத்துடன் பல காமண்ட்களை அள்ளி வழங்குபவர். தமிழருவி மணியன் எழத்து பற்றி குறிப்பிடும் போது மூன்றாம் தரமான மஞ்சள் எழுத்தாளர்கள் மீது தாக்கம் இருப்பதாக இருப்பினும் அது நிலைக்காது. நாம் அதை மாற்றி காட்ட வேண்டும் என்பார்.
மாற்றம் என்பது பிறரிடம் எதிர்பார்ப்பதில்லை . அது நம்மிடம் ஏற்பட வேண்டியதாகும். ஆகவே அனைவரும் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளுவோம். தானக இவ்வுலகம் மாறும். நமக்குள்ளாக எற்படும் இரசாயண மாற்றம் தான் நிரந்தரமானது. மாறுவோம்! மாற்றுவோம்!

1 comment:

மாதவன் said...

தங்களின் பிளாக்குகளின் தரம் மெருகேறிக்கொண்டே வருகிறது. Paragraph Alignment, Spelling Mistake, Font போன்ற விஷயங்களின் மேல் கவணம் செலுத்த வேண்டும்.

Post a Comment